பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 07

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 07 சாணக்கியன் சந்திரகுப்தனுக்கு அபிஷேகம் செய்து நீதான் இனி இந்த நாட்டின் அரசன் என அறிவித்தபின் அந்த வேதபாடசாலையின் அறையில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். சாணக்கியன் அவிழ்த்தவிட்ட தலைமுடியுடன் தீர்க்கமான சிந்தனையுடன் அமர்ந்திருந்தான், அவன் முன்னால் சந்திரகுப்தன் தலையில் கொண்டை கட்டி அமர்ந்திருந்தான். சாணக்கியன் திடீரென தன் மடியில் இருந்த சோழியினை எடுத்து உருட்டினான், சோழி உருண்டு வீழ்ந்தது. அதைப் பார்த்தபடியே சந்திரகுப்தனை நோக்கினான். தயங்கிய பார்வையினைப் பார்த்தவனை நோக்கிக் கேட்டான். “என்ன […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 06

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 06 அங்கே என்ன நடந்தது என சந்திரகுப்தனும் அந்த அந்தணனும் மெல்ல விசாரித்தார்கள், அங்கே நடந்ததை கூடியிருந்தோர் சாட்சியாக சொன்னார்கள். சந்திரகுப்தனிடம் பெற்றுக் கொண்ட சீட்டின் பிரகாரம் சாணக்கியன் அரசர்களோடு மகா வித்வான் அமரும் இடத்தில் அமர்ந்தான், அமர்ந்தவன் உணவு உண்ணுமுன் என்னென்ன மந்திரங்களைச் சொல்லி சாங்கியத்தை ஒரு பிராமணன் செய்யவேண்டுமோ அனைத்தும் செய்தான். அப்போது நவநந்தர்களும் வந்தார்கள், பந்தி ஆரம்பிக்கப்பட இருந்தது. பெரும் ஞானவான்களும், பெரும் ஞானபண்டிதரும் அமரவேண்டிய இடத்தில் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 05

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 05 சாணக்கியன் தன் காலை தட்டிய அந்த முளை கம்பினை ஆட்டி அசைத்து எடுத்தான், பின் அதைப் பொடி பொடியாக உடைத்தான். பின் எரித்துப் போட்டான். எரியும்வரை அருகிருந்து ஆத்திரத்துடன் பார்த்தவன் பின் அந்தச் சாம்பலை அப்படியே கரைத்துக் குடித்தான், குடித்த வேகத்தின் இடையே சந்திரகுப்தனை நோக்கி ஒரு பார்வை பார்த்தான். சந்திரகுப்தனும் அவனை நேருக்கு நேர் கண்களைச் செலுத்திப் பார்த்தான். அறிவுடையோர் ஒருவரையொருவர் கண்களால் பார்க்கும்போது பார்வையிலே செய்தியினைப் பறிமாறிக் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 04

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 04 சந்திரகுப்தன் அந்த மூடப்பட்ட நிலவறையில் வைராக்கியமாக அமர்ந்திருந்தான். தன் தந்தை சாகும் போது அவன் கண் கலங்கியது. அடிக்கடி அவன் சிந்தனையினைக் கலைத்தது, அவர் சொன்ன வார்த்தைகளை நினைந்து கண்ணை மூடி மனதை கல்லாக்கி வைராக்கியமாக இருந்தான். “மகனே, எங்களை நினைத்துக் கலங்காதே, இதெல்லாம் தெய்வத்தின் விருப்பம், இங்கு நாம் பெறும் நன்மை தீமைக்கெல்லாம் அவரவர் செய்த வினைகளன்றி வேறேன்ன, தெய்வத்தின் கதியால் இது நேர்ந்தது என மனதை தேற்றிக் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 03

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 03 முட்டாள் மன்னனை விட அறிவார்ந்த அமைச்சன் நினைத்ததை சாதிப்பான். அப்படி அமைச்சரான மௌரியன் தன் குலத்தைப் பெருக்கி எல்லோரையும் அரசவையின் முக்கிய பதவிக்குக் கொண்டு வந்து தன் மகன் சந்திரகுப்தனை கருவூல அதிகாரியாக்கியபோது அமைச்சன் ராஷசனுக்குப் பொறி தட்டிற்று. அதன் பின் ஒவ்வொரு இடத்திலும் ராஷசனின் ஆட்களை அகற்றி மௌரியனின் ஆட்கள் நியமிக்கப்பட நியமிக்கப்பட ராஷசன் ஆத்திரமானான். ஆனால், அறிவாளி ஒருகாலமும் உணர்வுகளை வெளிக்காட்டமாட்டான், ராஷசன் கூரிய அறிவுடையன் என்பதால் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 02

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 02 அந்த ஸ்வார்த்த சித்தி மஹாராஜாவின் பட்டது ராணிக்கு நவ நந்தர்கள் ஒன்பது பானைகளில் பிண்டமாக இடப்பட்டு ஒரே நேரத்தில் பிறந்துவந்தார்கள். அங்கு யார் மூத்தவர் என்பது தெரியாது. ஆனால். மன்னரின் இளைய மனைவி முரைக்கு பிறந்த மௌரியன் இவர்களுக்கு மூத்தவன், அவனே மன்னனுக்கு முதல் மகன். ஆனால், கணிகையின் மகன் என்பதால் ஆட்சி அவனுக்கு வராது. நவநந்தர்களில் ஒருவனுக்கே அரசாளும் உரிமை உண்டு, ஆனால் முரையும் மௌரியனும் கொதித்துக் கொண்டிருந்தார்கள். […]

சாணக்கியன் அமைத்த‌ சாம்ராஜ்ஜியம் : 01

சாணக்கியன் அமைத்த‌ சாம்ராஜ்ஜியம் : 01 அது பொதுயுகத்துக்கு முன்னர் சுமார் 300 ஆண்டு முந்தைய காலகட்டம், இந்துஸ்தானம் பெரும் ஆபத்தை இரு முனைகளில் எதிர்பார்த்தது. முதலாவது மாபெரும் சேனையோடு யாரும் எதிர்க்கமுடியா அளவு கிரேக்கம் முதல் ஆப்கான் வரை விரிந்து படர்ந்திருந்த அலெக்ஸாண்டரின் கிரேக்க சாம்ராஜ்ஜியம், அதனை அரிஸ்டாட்டில் தூண்டுதல்படி அலெக்ஸாண்டர் அமைத்ததே இந்துஸ்தானைக் கங்கை கரையினைக் கைப்பற்றவேண்டும் என்பதற்காக‌. அவன் காலத்திலும் அவனுக்குப் பின்னும் மிகப் பலமான அரசாக கிரேக்கம் மிரட்டிக்கொண்டிருந்தது, அவனை இந்திய […]

சரஸ்வதி அந்தாதி : 30

சரஸ்வதி அந்தாதி : 30 “பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும்பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும்திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே” இப்பாடல் இப்படி பிரிந்து வரும். “பெரும் திருவுருவும் சய மங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியை போற்றி எல்லா உயிர்க்கும்பொருந்திய ஞானம் தரும் இன்ப வேத பொருள் அருளும்திருந்திய செல்வம் தரும் அழியா பெரும் சீர் தருமே” இனி பாடலின் பொருளைக் […]

சரஸ்வதி அந்தாதி : 29

சரஸ்வதி அந்தாதி : 29 கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்யசரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். கரியார் அகளமும் கண்ணும் கதிர்முலை கண்ணும் செய்ய‌சரியார் கரமும் பதமும் இதழ் அந்தவள் நறும்புரி ஆர்ந்த தாமரையும் திருமேனியும் பூண் பனவும்பிரியாத என் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. பாடலை இனி கொஞ்சம் ஆழமாகக் காணலாம். “கரியார் அகளமும் கண்ணும் […]

சரஸ்வதி அந்தாதி : 28

சரஸ்வதி அந்தாதி : 28 “இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர்மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவேதுலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல்போல்கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர் மலங்கும்” முகம் பிரகாசிக்கின்றது ஒளிர்கின்றது அவர்கள் மேனி பரவசத்தால் நிறைந்திருக்கின்றது, கண்களில் நீர் வழிகின்றது. “பழுதற்ற வாக்கும் பலிக்கும்” அவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் குற்றமற்றதும் பலிக்கும் தன்மை கொண்ட அருள்வாக்காக அமையும். “மனமிகவே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications