பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெகோவா விட்னஸ்

இந்திய தேசிய கொடியினை ஏற்றமாட்டேன் என சொன்ன அந்த இந்திய தமிழக ஆசிரியை “ஜெகோவா விட்னஸ்” எனும் சபையினை சார்ந்தவர் என்கின்றன சில செய்திகள், இந்த சபை கொஞ்சம் சுவாரஸ்யமானது ஜெகோவா என்பவர் அல்லது யாவே என்பவர் யூத மூல கடவுள். ஆதாம் ஏவாளை படைத்தவர் அவர்தான் ஒரு ஆப்பிளை தின்றதற்காக அவர்களை ஓட அடித்தவரும் அவர்தான் ஆதாமின் மகன் காயின் தன் தம்பியினை அடித்துகொல்லும்பொழுது தடுக்காமல் அவன் செத்தபின் வந்து “ஏன் கொன்றாய்” என கொதித்தவரும் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 61′

“குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மைநலம்விற்றுக் கொள்ளுந் திருவுந் தவம்விற்றாங்கூனோம்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதூஉம்தானோம்பிக் காத்த றலை” தன் குலப் பெருமையை விற்றுவிட்டுப் பணம் சேர்த்தல், வாய்மையை விற்றுவிட்டுப் பொய் பேசி அவரிடம் நல்ல பொயர் வாங்குதல், தவ ஒழுக்கத்தை விற்றுவிட்டு உடல் பசிக்கு இன்பம் தேடல், உரிமையை விற்றுவிட்டு அடிமைத்தொழில் செய்து வயிறு வளர்த்தல் ஆகிய இழி குணங்கள் நம்மிடம் சேராமல் காத்து கொள்வது தலையானது என்பது பொருள் குலபெருமை, வாய்மை, தவ ஒழுக்கம், உரிமை ஆகியவற்றை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 03

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 03 “அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்துஞ்சாதவர் துறக்கு மாறு” இக்குறள் “அஞ்சாலும் மாயாத அறம் பொருள் இன்பமும் துஞ்சாதவர் துறகுமாறு” என பிரிந்து பொருள் தரும் அஞ்சாலும் என்பது ஐந்தாலும் என பொருள்படும், அதாவது ஐம்புலன்கள் இந்த ஐம்புலன்களும் அறம் பொருள் இன்பம் எனும் மூன்று விஷயங்களில் சிக்கி கிடக்கின்றது. ஒரு ஆன்மா அறவாழ்வு, பொருள்வாழ்வு, இன்பவாழ்வு என மூன்றிலும் […]

ராமகிருஷ்ண பரம ஹம்சர்

அவர் பெயர் கதாதர், வங்கத்துக்காரர் சிலை செய்வதும், ஓவியமும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆனால் குடும்ப வறுமை அவரை வேறுவழியில் இழுத்து சென்றது. கலைமனம் கொண்டவன் வாழ்வில் வறுமை விளையாடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌ அந்த ககாதரின் அண்ணன் ஒரு புரோகிதர், அதனால் அவரும் வழிபாடுகளிலும் பூஜை யாகங்களிலும் ஈடுபட்டார், மெல்ல மெல்ல ஆன்மீகத்தில் மூழ்கிய அவருக்கு பல சிந்தனைகள் எழுந்தன‌ கடவுள் என்பது சிலையா, இல்லை வானலோகத்தில் இருப்பவரா? எல்லாம் அறிந்த தெய்வம் கல்லில் இருக்குமா? இதற்கு […]

யுவான் வாங்க் 5 Vs டேர்னியர்

அந்த சீன கப்பல் இன்று இலங்கை துறைமுகத்தில் “டொக்” செய்யபடும் அதாவது துறைமுகத்தில் நிலை கொள்ளும் என அறிவிப்புக்கள் வருகின்றன‌ அந்த “யுவான் வாங்க் 5” ஆகஸ்டு 11ம் தேதி இலங்கைக்கு வந்துவிட்டு ஆகஸ்டு 17 வரை நிற்க முதலில் சீனா ஏற்பாடு செய்திருந்தது ஆனால் இந்திய எதிர்ப்பு இலங்கையின் தயக்கம் இன்னும் பல விஷயம் காரணமாக அது பிற்போடபட்டது எனினும் இன்று அந்த கப்பல் இலங்கை ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் தரித்து நிற்கும் என அறியபட்டிருக்கின்றது இக்கப்பல் […]

தமிழகத்தில் என்.ஐ.ஏ

கோயம்பேடு சந்தைக்குள் வந்து கத்தரிக்காய் அள்ளி செல்வது போல அனுதினமும் தமிழகத்தில் என்.ஐ.ஏ அமைப்பு பலபேரை அள்ளி அள்ளி செல்கின்றது இது மிகபெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது, தமிழகம் பல நாகங்கள் பதுங்கும் இடமாக இருக்கின்றது என்பதும், பெரும் கடத்தல் மற்றும் சமூகவிரோத கோஷ்டிகளின் அடைக்கல இடமாக இருக்கின்றது என்பதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் ஆனால் ஊடகங்களும் இதுபற்றி விவாதிப்பதில்லை, மாகாண அரசும் இதுபற்றி கவலை கொள்வதில்லை, அரசியல் கட்சிகளும் இதனில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் […]

வாஜ்பாய்

அவர் காலம் கொடுத்த வரம், உறுதியான ஆனால் ஒள்வீசும் வைரம் போன்ற சாயல் அவர். வங்காளிகளுக்கே உரிய அமைதியும் சாந்தமும் அந்த முகத்தில் ஓடினாலும் அவர் மனம் நாட்டுபற்றில் மிக வைராக்கியமானவர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த தேசத்தின் விடிவெள்ளி, நம்பிக்கை கொடுத்த ஒரு நட்சத்திரம் அந்த வாஜ்பாய் சுதந்திர போராட்ட தியாகி, ஈரோட்டு ராம்சாமியும் அண்ணாதுரையும் கருணாநிதியும் வெள்ளையன் போக கூடாது என கதறிய காலங்களிலே அவர் நாட்டுக்காய் சிறை சென்ற தியாகி. இயல்பில் அவர் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 60

“நல்லா றொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும்அல்லன செய்தற் கொருப்படார் – பல்பொறியசெங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம்பைங்கட் புனத்தபைங் கூழ்” நல்லொழுத்தின் உச்சியில் நிலைத்து நிற்பவர்கள், அதனை தலையாயனதாக கருதுபவர்கள் ஒரு காலமும் தீமை செய்ய இணங்கவே மாட்டார்கள், பலம் வாய்ந்த புலியானது பசித்தாலும் புல்லை தின்னாது என பொருள் அதாவது புலி கடும் பசி எடுத்தாலும் புல்லை உண்ணாது என்பது போல நல்லொழுக்கத்தில் நிலைத்திருப்போர் எந்நிலையிலும் கீழான காரியங்களை செய்யமாட்டார்கள்.

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 02

“அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்நயனமா முத்திக்கு வீடு” இக்குறள் “அயனம் கொள் சந்திரனால் உதித்த ஒன்றில் நயனமாம் முத்திக்கு வீடு” என பிரிந்து பொருள் தரும் அயனம் என்றால் சூரியன், அதாவது பிங்கலை மூச்சு, பிங் எனும் சொல்லுக்கு வழி என்றும் பொருள் அந்த பிங்கலையுடன் இடகலை மூச்சு சேர்ந்து அதாவது யோகத்தில் இரு மூச்சுக்களும் கலந்து சுழிமுனை நாடி தூண்டபடும் பொழுது ஒரு ஞான ஒளி கிடைக்கும், அந்த ஞான ஒளியில் முக்திக்கான வழி தெரியும் […]

ஒரு செருப்பு..

ஒருமுறை அய்யா ராம்சாமி மேடையில் வழக்கம் போல் இந்து துவேஷமும் இன்னும் பலவும் பேசிகொண்டிருந்தார், அவர் மேல் ஒரு செருப்பு விழுந்தது உடனே “ஒரு செருப்ப வச்சி நீ என்ன செய்யபோற, இல்ல அத வச்சி நான் என்ன செய்யபோறேன், இன்னொரு செருப்பும் கொடுத்தா உதவியா இருக்கும்” என உருக்கமாக பேசினார் என திராவிட கோஷ்டிகள் அடிக்கடி கண்களை துடைத்து சொல்லி கொண்டே இருக்கும் (அப்படியும் தன்னிடம் விழுந்த ஒற்றை செருப்பையும் திருப்பி கொடுக்க அவருக்கு மனமில்லை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications