பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து!

ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து! கடவுள் இல்லை என சொன்ன சோவியத் யூனியனிற்கு பெரியார் செல்ல காரணம் இருந்தது, ஆனால் மிகபெரும் மதநம்பிக்கை கொண்ட ஜெர்மனிக்கு பெரியார் சென்று பகுத்தறிவினை போதிக்க என்ன அவசியம் இருந்தது? ஆனாலும் சென்றிருக்கின்றார், அவர் சென்று 91 வருடம் ஆயிற்றாம், அதனால் விழாவாம் சரி இந்த விழாவில் என்ன பேசுவார்கள் என நினைக்கின்றீர்கள்? அதே தான், “ஏய் பார்ப்பனனே , உனக்கு ஏன் நாங்கள் அடங்க வேண்டும், […]

கார்கில் மீட்பில் பலியான நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்

போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று. மிக வலுவாக காலூன்றிய பாகிஸ்தானை நாம் போட்டு அடித்த நாள் இது, ஆப்கனை கைபற்றிய தாலிபன்களும் ஐஎஸ்ஐ வழிகாட்டலில் ஊடுருவியிருந்தார்கள் உண்மையில் அது மிகபெரிய போர், அந்த போரில்தான் இந்திய ராணுவம் பெரும் வெற்றிபெற்றது, மறுபடியும் பாகிஸ்தானுக்கு மூக்கு உடைந்தநாள் அப்படி அந்த கார்கிலை மீட்க தேவைபடும் […]

மலசட்டி அரசியல் தீராது போல…

மனித கழிவினை மனிதனே அகற்றுவதா என்றும், அது ஒரு சாதிய அடக்குமுறை என்றும் இன்னும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இந்த கக்கூஸ் அரசியல் ஒரு மாதிரியான அரசியல், இது விடாபிடியாக பிடித்து சொல்லிகொண்டே இருப்பது பிடிவாதம். இந்த வெள்ளையன் வரும் முன் எப்படி இருந்தது நிலை? சரி இந்தியாவினை விடுங்கள், மலேசிய சிங்கப்பூர் நாடுகளில் எப்படி இருந்தது? கிராமங்களில் சிக்கல் இல்லை, நகரங்களில் அதற்கென ஒரு மண்பாத்திரம் இருந்தது, தொழிலாளர்கள் அதனை சேகரித்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பார்கள் பெரும்பாலும் […]

வெலிக்கடே சிறையில் 1983 ஜூலை கலவரம்

வெலிக்கடே சிறையில் 1983 ஜூலை கலவரத்தில் 53 போராளிகள் கொல்லபட்டிருந்தனர், மிக கொடூரமாக கொல்லபட்டனர், அதுவும் குட்டிமணியின் கண்களை தோண்டியெடுத்து கொன்றிருந்தனர் ஏன் அவ்வளவு கோபம்? குட்டிமணி குழுதான் முதன் முதலில் ஆயுதம் எடுத்து சிங்களனை மிரட்டியது, திருப்பி அடிக்க அவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள் அந்த கும்பலில் 11 வயதில் இணைந்தவர்தான் பிரபாகரன், அன்று அவருக்கு இருந்த வேலை துப்பாக்கியினை துடைத்து வைப்பது மிகபெரும் துணிச்சலான தாக்குதலை எல்லாம் குட்டிமணி நடத்தினார், பெரும் பெயர் அவருக்கு இருந்தது, இந்த […]

பிக்பாஸ்காரன் வீட்டினிலே,  பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….

காலையிலே ஒரு போன், அதில் கேட்டவர் இப்படித்தான் கேட்டார் “அண்ணே, கலைஞர் பற்றி ஒன்று கேட்கணும்னே என்னய்யா? கலைஞருக்கு ஒரு பாட்டு உண்டே, திமுக மேடைகளில் எல்லாம் போடுவாங்களே என்னண்ணே? நிறைய பாட்டு உண்டு எது? ஏதோ பாம்பு பல்லின்னு வரும்ல அண்ணே? ஆமா, “பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே, அஞ்சாமல் இருந்தது யாரு, கலைஞர் பெயரை கூறு” அதேதாண்ணே அதேதான், தேங்க்ஸ்ணே சரி இப்பொ இந்தபாட்டு எதுக்கு? அண்ணே, அதே பாடலை,  “பிக்பாஸ்காரன் வீட்டினிலே,  […]

மிஸ்டர் நித்தி, எங்களுக்கு ஒரே சந்தேகம் தான் …

மிக சரியான சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் திட்டத்தில் இறங்கியிருகின்றார் நித்தியானந்தா சுவாமிகள் அதாவது அன்னார் சுவாமியாகி மந்தகாச புன்னகையோடு அருளாசி வழங்கி, நடிகை ரஞ்சிதாவிற்கு தனியறையில் ஆசிவழங்கியது வரை எல்லோரும் அறிந்தது அதன்பின்னும் மதுரை ஆதீனத்தோடு சேர்ந்து அவர் செய்த சேட்டையும், பின் ஆதீனம் ஜெயாவிடம் அடைக்கலமாகி தன்னை காப்பாற்றியதும், பின் சில வழக்குகளில் நித்தி போட்டு சாத்தபட்டதும் நடந்தது சுத்தமாக பெயர் கெட்டாலும் நித்தி ஓயவில்லை, அவர் சாமியார் என்றால் அத்தோடு ஒதுங்கியிருப்பார், அவர் […]

தெலுங்கு திரையுலகம் அரண்டு கிடக்கின்றது

தெலுங்கு திரையுலகம் அரண்டு கிடக்கின்றது, பெரும் போதை மருந்து கும்பலுடன் முண்ணணி நடிகர்/ நடிகைகளுக்கு தொடர்பு என விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன‌ இதுவரை சார்மி, தருண், முமைத்கான், காஜல் அகர்வாலின் மேனேஜர் என இருபது பேர்வரை சிக்கியிருக்கின்றார்கள், ஆந்திர அரசு தலையிட மறுக்கின்றது, காவல்துறை இரும்புபிடிபோட்டு உலுக்குகின்றது ஆப்ரிக்க போதைமருந்து கும்பல் எந்த அளவு ஊடுருவிருக்கின்றது, பெரும் ஆபத்தான போதை பழக்கம் எந்த அளவு எளிதான காரியமாயிருக்கிறது என ஆந்திரம் முழுக்க பரபரப்பு. விசாரணை தீவிரமாக நடக்கின்றது, […]

எல்லாம் பிக்பாஸ் செய்யும் மாயம்

இது ஆடிமாதம், இந்துக்களுக்கு பல வழிபாடுகள் நிறைந்த மாதம் கவனித்தால் இது இந்துக்களுக்கு மட்டுமல்ல, சீனர்களுக்கும் மகா புனிதமான மாதம். சீனர்கள் என்றால் புத்தர்கள் மட்டுமல்ல அதிலும் பல பிரிவுகள் உண்டு நமது ஊர் பிள்ளையார் போலவும், சிறு தெய்வங்கள் போலவும் மரத்தடி சீன சாமிகள் நிறைய உண்டு, சரியாக 10 மீட்டருக்கு ஒரு சீனதாடி சாமி சிலையினை காண முடியும், அதன் முன்னால் பழங்கள் பத்தி எல்லாம் படையலிட்டிருப்பார்கள் இது அனுதினமும் காணும் காட்சி என்றாலும், […]

வெல்ல பிறந்தவன் : 03

அன்று ஜுலை 26, கி.மு 356 அலெக்ஸாண்டர் பிறந்திருந்தான் பிலிப்பிற்கோ ஏக மகிழ்ச்சி, பெரும் விழாவாக அவனின் பெயர் சூட்டும் விழாவினை நடத்தி கிரேக்க குருமார்கள் புடைசூழ அவனுக்கு மூன்றாம் அலெக்ஸாண்டர் என பெயரிட்டார், அதாவது அவனுக்கு முன்பும் அலெக்ஸாண்டர்கள் இருந்திருக்கின்றார்கள் தம்பிடிக்கு பிரயோசனம் இல்லை. இவனை பெரும் வீரனாக்கி மாசிடோனியாவின் புகழை பரவச்செய்வேன் என அவர் முழங்கியபொழுது நிச்சயம் சுபமுகூர்த்த நேரமாகத்தான் இருந்ந்திருக்க வேண்டும் அலெக்ஸாண்டர் தாயின் மடியில் தவழ ஆரம்பித்தான், தந்தையோ போர்க்களம் செல்லுதல் […]

போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டம் பாய்கிறது

போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டத்தினை பாய்ச்சுகின்றது, பெரும் மிரட்டலான விஷயம் இது கவனியுங்கள், இவர்கள் எதற்காக கிளம்புகின்றார்கள்? பசுமை காக்க, சுற்று சூழல் காக்க, மீத்தேன் என்பது பெரும் பசுமை எதிரி என கிளம்புகின்றார்கள், இவர்களைத்தான் குண்டர் என உள்ளே தள்ளுகின்றது அரசு. ஆக தமிழ்நாடு நாசமாக்கி தீருவது என இந்த ஆட்சி கங்கணம் கட்டி அலைகின்றது, ஆற்றுமண், கடல்மண், மலை என எல்லாம் விழுங்கி இன்னமும் விழுங்கத்தான் வெறியோடு அலைகின்றது இதனை எதிர்ப்பவர்கள் மீது […]