Vanamalai Ramamoorthi

நெஞ்சை பிளக்கும் செய்தி ஒன்று தாக்கி இருக்கின்றது

எம் தந்தை , கலைஞர் என அடுத்தடுத்த இடிகளில் நிலைகுலைந்த எனக்கு இது மூன்றாம் அடி, மனம் நொறுங்கி கிடக்கின்றது

நினைவுகள் மங்கிவிட்டன, மனம் அந்த மனிதரையே தேடுகின்றது

ஆம் பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneriமறைந்துவிட்டாராம்

அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு 2012 வாக்கில் தொடங்கியது, நான்குநேரிக்காரர் என்பதால் வள்ளியூர் முகநூல் குழுவில் அறிமுகமானார்

நான் ஒரு உபயோகமற்றவன் என்பதில் பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் தந்தையும் அலுவலத்தில் மேல் அதிகாரியும் அபார நம்பிக்கை வைத்திருந்தார்கள்

எமக்கும் அதில் சந்தேகமே இல்லை, அதனால் நாம் செய்யும் எந்த வேலையும் சரிவராது என இன்றும் மனமார நம்புகின்றேன்

அப்படித்தான் முகநூல் எழுத்தையும் இதுகாறும் நினைத்திருக்கின்றேன்

ஆனால் அந்த மனிதர் என் எழுத்துக்களை நேசித்தார், பாதுகாக்க நினைத்தார் எனக்கும் அவருக்குமான வயது இடைவெளி 40க்கும் மேல் இருக்கும்

அவர் குரலை கூட சில இடங்களில்தான் கேட்டிருக்கின்றேன்

பெரும் படிப்பு படித்து , கெமிக்கல் துறையில் மிகபெரும் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்று ஐதராபாத்திலே வசித்தவர்

ஐதரபாத்தில் வசித்தவர் என்பதால் அவரை பார்த்தது கூட இல்லை

ஆனால் ஒருநாள் என் பதிவு இல்லை என்றாலும் உடனே செய்தி அனுப்பி விசாரிப்பார்

எமக்கே ஆச்சரியமான மனிதர் அவர், அவரின் சுபாவம் அப்படி

பேசமாட்டாரே தவிர என்னை கண்காணித்துகொண்டே இருப்பார்

சனிகிழமை வரை என் பதிவுகளை பிளாக்கில் போட்டுகொண்டே இருந்தார், நேற்று இல்லை

இன்று கேட்டால் அவரே இல்லை

மிக மிக துயரத்தில் மனம் நசிந்து கிடக்கின்றது, என் எழுத்தையும் ரசித்து எம்மை எழுத தூண்டியவரில் அவர் முக்கியமானவர்

மூட்டையிலிருந்து விழும் தானியங்களை எறும்பு சேமிப்பது போல் சேர்த்து வைத்தவர்

எப்பொழுதோ உருப்படியாக நாம் எழுதியதை முத்துக்களாக கோர்த்தவர், சில நேரம் அதை பார்வையிடுவேன், நாமா இப்படி எல்லாம் எழுதினோம் என்ற ஆச்சரியம் மேலிடும்

என்னை என்னைவிட நன்றாக புரிந்த மனிதர், உறுதியாக சொல்வேன்

முகநூலில் வந்து பழகி சண்டையிட்டு பிரிந்தவர் ஏராளம், அவரோ இறுதிவரை என்னோடு பயணித்தார், கோர்த்தார்
முகநூலில் நான் தொடர்ந்து எழுத அவரே பெரும் காரணம்

எம் பதிவுகள் பலரை சென்றடையவும், இன்று பல இடங்களில் அது சுற்றவும் பலர் எம்மை கவனிக்கவும் அவரே காரணம்

என் எழுத்து கைவிளக்கு அணைந்தது போலவும், என் எழுத்தை சுமந்த ஓடம் மூழ்கிவிட்டது போலவும் மனம் கதறுகின்றது

எப்பொழுதோ உருப்படியாக நாம் எழுதியதை முத்துக்களாக கோர்த்தவர், சில நேரம் அதை பார்வையிடுவேன், நாமா இப்படி எல்லாம் எழுதினோம் என்ற ஆச்சரியம் மேலிடும்

என்னை என்னைவிட நன்றாக புரிந்த மனிதர், உறுதியாக சொல்வேன்

முகநூலில் வந்து பழகி சண்டையிட்டு பிரிந்தவர் ஏராளம், அவரோ இறுதிவரை என்னோடு பயணித்தார், கோர்த்தா

இனி என் எழுத்தை சேமிப்பவர் யார் என தெரியவில்லை, என் கணக்கு பிள்ளையினை இழந்துவிட்டேன்

மிக சிறந்த மனிதரையும், கண்காணா மிகபெரும் நண்பரையும் இழந்துவிட்டேன்

இனி அவர் இல்லை, அவரின் செய்தி இல்லை

ஆனால் என் எழுத்தின் முதல் ரசிகன் என்ற வகையில் எந்நாளும் என் நினைவில் அவர் வாழ்வார்

காலம் வாய்ப்பளித்தால் நான் எழுதும் நூல்களை அவருக்கே சமர்பிப்பேன்

நிறத்தால் மட்டுமல்ல மனதாலும் வெண்மையான அந்த மனிதரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்

அவர் என் எழுத்துக்களை கோர்த்தெடுத்த அந்த பிளாக் அனாதை ஆயிற்று

இப்போதைக்கு ஓ என அழுவதை தவிர வேறு எண்ணம் ஏதுமில்லை

அவருக்காக அழவேண்டும், நிச்சயம் கதறி அழவேண்டும். எமக்காக பெரும் சிரத்தை எடுத்தவர் அவர்

கொஞ்சம் அழுதால்தான் நிம்மதி, அந்த கண்ணீர் நன்றி காணிக்கை கண்ணீராகவும் இருக்கும்

Image may contain: 2 people, including Ramamoorthy Vanamamalai Nanguneri, people standing and outdoor