அது திராவிடம் தோற்ற இடம், அதன் முகமூடி கிழிந்த இடம்

முருகன் எக்காலமும் தமிழகத்தின் அரசன், அவன் ஆட்சியே இங்கு நடக்கும் அவனை தொழாமல் யாரும் தமிழகத்தை ஆளமுடியாது

வரலாற்றில் இதனை பார்க்கலாம் மூவேந்தர்கள் முதல் நாயக்கர் காலம் வரை தொடர்ந்தது, டச்சுக்காரர்கள் திருசெந்தூர் ஆலயத்தை தொட்டுவிட்டு அலறி அடித்து நாட்டைவிட்டு ஓடிய வரலாறெல்லாம் உண்டு

அது வீரபாண்டிய கட்டபொம்மன் முதலான எத்தனையோ மன்னர்களின் விருப்பமான கோவில், அய்யா வைகுண்டர் போன்ற மகான்களை உருவாக்கி கிறிஸ்துவ மிஷனரிகளை கதறவைத்த கோவில்

வெள்ளையன் ஆட்சியிலும் அக்கோவிலுக்குரிய மரியாதை சரியாக செலுத்தபட்டது

வெள்ளையன் இங்கு ஆண்டது வெறும் குறுகிய காலமே, அதுவும் ஆலய நிர்வாகமெல்லாம் இந்துக்கள் வசமேதான் இருந்தன‌

வெள்ளையனுக்கு பின் தமிழகத்தை ஆண்டதும் குமாரசாமி ராஜா அவருக்கு பின் ராஜாஜி காமராஜர் என பலர் வந்தாலும் அவர்களெல்லாம் திருசெந்தூர் முருகன் மேல் ஒரு பக்தி கொண்டவர்களாக இருந்தார்கள்

காமராஜரின் முன்னோர்கள் அவ்வாலய பக்தர்கள், காமராஜர் தன் தலைவன் நேரு வழியில் தன்னை நாத்திகனாக காட்டினாலும் தெய்வங்களை பழிக்கவில்லை

காமராஜருக்கு பின் கொடிய நாத்திகம் தலையெடுத்தது, அந்த நாத்திகம் பின்னால் மிஷனரிகளும் கள்ளகைகூலிகளும் இருந்தார்கள்

பின் வருவதைமுன்பே அறிபவனல்லவா முருகன், அவன் அங்கே ஒரு முருகபக்தனை முன்பே தேரந்தெடுத்திருந்தான் அவர் பெயர் எம்.ஜி.ராமசந்திரன்

சிறுவயது முதலே அபார முருகபக்தி கொண்டவர் எம்ஜிஆர், ஆச்சரியமாக மருதமலை முருகன் அடியானாகிய சின்னப்ப தேவரால் அவர் சினிமாவில் வளர்க்கபட்டார்

அந்த எம்ஜிஆர்தான் திமுகவின் ஒரே அடையாளம் அவர் இல்லாமல் திமுக இல்லை

அண்ணாதுரையின் நாத்திக ஆட்சி 1 வருடமே ஆடி முடிந்த நிலையில் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார், முருகன் மெல்ல சிரித்தான்

திருமுருக கிருபானந்தவாரி எனும் முருகபெருமானின் அடியார் திமுகவினரால் தாக்கபட்டதுதான் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை கொடுத்தது, அந்த நிகழ்வுக்கு பின் பகிரங்கமாக தான் ஒரு ஆத்திகன் என அறிவித்து கிருபானந்தவாரியினை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் எம்ஜிஆர்

அதன்பின் எம்ஜிஆர் முதல்வரானார், காஞ்சி பெரியவருக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார் பெசன்ட் நகர் முருகன் கோவிலெல்லாம் அப்படி வந்ததே

அந்நேரம் அரசியலில் இருந்து முழு ஓய்வில் அல்லது இனி அரசியல் சன்னியாசம் எனும் நிலையில் இருந்த கருணாநிதி திருசெந்தூர் கோவிலின் வைரவேலுக்காக நடையாய் நடந்தார்

அதன் பின்புதான் அரசியலில் அவருக்கு இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கிற்று, அதன் பின் கருணாநிதியின் மனைவியர் அடிக்கடி திருசெந்தூர் கோவிலில் தென்படலாயினர்

ஜெயலலிதா முதல்வரானாலும் சசிகலாவுக்கு திருசெந்தூர் கோவிலுக்குமான பக்தி உலகறிந்தது

இவர்களுக்கு அடுத்து வந்த பன்னீரும், பழனிச்சாமியும் முருகபெருமானின் பக்தர்கள்

இப்படி காலமெல்லாம் முருகபெருமான் தன் அனுகிரஹம் பெற்றவர்களை தன்னை பணிபவர்களை மட்டுமே தமிழகத்தில் ஆள அனுமதிப்பான், அப்படிபட்ட காலத்தில்தான் ஸ்டாலினார் முதல்வரனார்

அவரும் அவர் சபைநாயகரும் கிறிஸ்தவர் மடியில் தவழ்ந்து “இது உங்களால் உருவான அரசு, உங்கள் அரசு” என உருகியபொழுது முருகபெருமான் புன்னகைத்தார்

சிறுபான்மை நாடகத்தை முக ஸ்டாலின் தூக்கிபிடித்து என்னென்ன குழப்பமெல்லாம் செய்துகொண்டிருந்தபொழுது, கிறிஸ்தவர் இஸ்லாமியர் நலனை உயர்த்திபிடித்தும் இந்துக்களை புறக்கணித்ததாக காட்டிகொண்டிருந்தபொழுதுதான் அந்த செய்தி வந்தது

அது முக ஸ்டாலின் நிழலும் ஆட்சியில்செல்வாக்கு செலுத்துபவருமான அவர் மருமகன் சபரீசன் திருசெந்தூரில் யாகம் நடத்தினார் என்பது

அதை அவரும் அவர் குடும்பத்தாரும் மறுக்கவில்லை என்பதில் அது முழுக்க உண்மை என்பது தெரிகின்றது

ஆக எல்லா தமிழக முதல்வர்களையும் ஆட்கொள்ள்ளும் திருசெந்தூர் முருகன் முக ஸ்டாலினார் குடும்பத்தையும் இழுத்து தன் காலடியில் போட்டு கம்பீரமாக அமர்ந்திருப்பது தெரிகின்றது

எக்காலமும் இம்மண் முருகபெருமானின் மண் என திருசெந்தூர் ஆலய மணி முழங்கி சொல்வது தெரிகின்றது

முருகபெருமான் தன் சக்தியினை காட்டிகொண்டிருக்கின்றார், திராவிட முகதிரை கிழிந்து தொங்கி கொண்டிருக்கின்றது, அந்த மாயமான் அடிபட்டு குற்றுயிராய் கிடக்கின்றது

“திருசெந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
திருட்டு மிஷனரி கூட்டமெல்லாம் ஒடுங்கி நிற்கும் ராஜாங்கம்”

அது திராவிடம் தோற்ற இடம், அதன் முகமூடி கிழிந்த இடம்
ஆளும் கூட்டமெல்லாம் வந்து அடிபணிந்து நிற்கும் இடம்”