அந்த திருவாரூர் இந்துஸ்தானத்தின் பழம்பெரும் தலங்களில் ஒன்று, கடலுள் மூழ்கிய பூம்புகாருக்கு இணையான பாரம்பரியமும் பழமையும் கொண்ட ஊர்

அந்த திருவாரூர் இந்துஸ்தானத்தின் பழம்பெரும் தலங்களில் ஒன்று, கடலுள் மூழ்கிய பூம்புகாருக்கு இணையான பாரம்பரியமும் பழமையும் கொண்ட ஊர்

அந்த ஊர் சிவனின் அடையாளம் ஒன்றால் அறியபட்டது, அரூர் எனும் அந்த நகரமே சிவாலயம் ஒன்றால் பெயர்பெற்றது, அந்த ஆலயம் இல்லையென்றால் அங்கு எதுவுமில்லை

அப்படிபட்ட ஆலயத்தின் சிறப்புகள் சொல்லி முடிக்க முடியாதவை, முற்கால சோழர் முதல் ராஜராஜசோழனின் கடைசி வாரிசுகள் வரை ஏன் பாண்டியரின் காலம் வரை அந்த ஆலயம் தனிசிறப்புடன் கொண்டாடபட்டது

“திருவாரூரில் பிறந்தால் முக்தி” எனும் அளவு அது சிறப்பான வரலாறு கொண்டது

சோழமன்னர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை விரிவாக்கினர், இன்று ஆசியாவின் மிகபெரிய வழிபாட்டு தலங்களில் அதுவும் ஒன்று

சுமார் ஐந்துவேலி அளவு ஆலயம், ஐந்து வேலி அளவு குளம், ஐந்துவேலி அளவு நந்தவனம் என மிக பிரமாண்டமான வகையில் அது உருவாக்கபட்டது

எத்தனையோ முனிகளும், சிவனடியார்களும் அங்கு சிவனை தரிசித்தார்கள்

நாயன்மார்களில் முக்கால்வாசி பேர் அந்த தலத்தை வணங்கியவர்கள், அங்கு வராத நாயன்மார்கள் குறைவு

சுந்தரர் அங்குதான் நாயன்மார்களின் திருதொண்டர் வகையினை பாடினார்

சோழமன்னர்கள் அங்கு செய்வித்த காரியம் கொஞ்சமல்ல, நாயன்மார் பாடிவைத்ததும் கொஞ்சமல்ல‌

அப்படிபட்ட ஊரில்தான் மனுநீதி சோழன் தேர்காலில் மகனை இட்டான் எனும் பெருமையும் பெற்றான், அந்த சோழனுக்கு சிவன் சோதனையினை கொடுத்ததாகவும் அந்த தேர்வடிவில் அவன் அதை வென்றதாகவும் நம்பிக்கை உண்டு

இதனால்தான் அந்த தேரினை உலகின் மிகபெரிய தேராக சோழமன்னர்கள் செய்தார்கள், இன்றும் உலகின் மிகபெரிய தேர் அதுதான்

அப்படிபட்ட பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட திருவாரூரில் , அதாவது செம்பியன் எல்லாளன் காலம் தொடங்கி 3ம் ராஜராஜசோழன் காலம் வரை சுமார் 4 ஆயிரம் ஆண்டு ஆண்ட மன்னர்கள் கூட ஒரு தெருவுக்கும் தங்கள் அடையாளத்தை இடவில்லை

கரிகால் சோழன், விஜயாலயன், பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் என எத்தனையோ உலக சக்ரவர்த்திகள் ஆண்டபொழுதும் அவர்கள் பெயர் இடபடவில்லை

அதிசிறந்த முனிகள் உலவிய மண் அது, ஒப்பற்ற நாயன்மார்கள் உலாவிய தெருக்கள் அவை அப்படியும் ஒரு நாயன்மார் பெயர் கூட அந்த தெருவுக்கு இல்லை

காரணம் அந்த ஒப்பற்ற தேர் ஓடும் வீதி தேரின் பெயரிலே அழைக்கபட வேண்டும் என கவுரவபடுத்தினார்கள்

தியாகராயர் வலம் வரும் வீதி தேர்வீதி அதில் அற்ப மன்னரின் பெயர் இருக்க கூடாது என பக்தியாய் ஒதுங்கினார்கள்

அப்படிபட்ட பாரம்பரியம் கொண்ட திருவாரூரின் தெற்கு வீதிக்கு கடவுளை நம்பாதவரும் முழு நாத்திகருமான கருணாநிதி பெயரை சூட்டும் அறிவிப்பெல்லாம் சரியானது அல்ல‌

கருணாநிதி அங்கு சில ஆண்டுகள் 7ம் வகுப்புவரை படித்ததாக வரலாறு உண்டு, அதிலும் தோல்வி, அவ்வளவுதான் அவருக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு, பின்னாளில் ஒருமுறை எம்.எல்.ஏவாக இருந்தார்

(அவர் ஓடாத தேரை ஓடவைத்தார் என்பதெல்லாம் வெற்றுவாதம் , இந்துக்கள் வாக்கும் இந்து அறநிலையதுறை நிர்வாகம் பெற்றிருந்த அவர் அதை செய்வது கடமை, அவர் அலுவல்)

இதற்காக அந்த ஊரின் புனிதமான தெருவுக்கு அவர் பெயர் என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது

கருணாநிதியும் சுமார் 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டார், காஞ்சி தேர்வீதிக்கு அண்ணா நாமம் , ஈரோட்டு தேர் வீதிக்கு ராம்சாமி நாமம், மதுரை தேர்வீதிக்கு மதுரை முத்து நாமம் என மாற்றவில்லை

அவர் செய்யாததை எல்லாம் இந்த அரசு செய்யுமானால் இது அவருக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல , இந்த அரசு சரியான வழியில் செல்லவில்லை என்பதையும் காட்டும் விஷயம்

இந்துக்களின் எதிர்ப்பு பலமாகின்றது, அதற்கு அரசு செவிமடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாகியுள்ளது, அரசு அதை ஏற்கும் என நம்புவோம்

தமிழக மக்களை முன்னேற்றவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவுமே இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்

மாறாக இந்துக்களுடன் எப்பொழுதும் உரசிகொண்டே இருக்கத்தான் இந்த வாய்ப்பினை தங்களுக்கு மக்கள் தந்திருப்பதாக சிலர் கருதுவார்களானால் அது நிச்சயம் நல்ல பலன்களை தராது.