அந்த மாபெரும் பாடகனுக்கு இன்று பிறந்தநாள்

Image may contain: 1 person, glasses, sunglasses and close-up

மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கருக்கு பட்டு துணி மீது படுபிரியம், அதனை நெய்து கொடுக்கவே சில‌ சவுராஷ்ட்டிரா குடும்பங்களை கொண்டு வந்து மதுரையில் குடியமர்த்தினார்

அவர்கள் பலுகி பெருகினர், மங்கா பல அடையாளங்கள் அதில் உருவாயினர்

அதில் ஒருவர்தான் டி.எம், சவுநத்ரராஜன்

தன் வெண்கல குரலால் கிட்டதட்ட 30 ஆண்டுகாலம் தமிழகத்தை கட்டி போட்ட பாடகர், தியாகராஜ பாகவதர் எனும் மாபெரும் பாடக பிம்பம் டி.எம். சவுந்தர ராஜன் பாடல்கள் வந்தபின் மங்கி போயிற்று

ராமசந்திரன், சிவாஜி என இரு பெரும் ஜாம்பவான்களுக்கு பாடிய ஒரே பாடகர் அவர்

தமிழ் பாடல் உலகின் அற்புதமான பாடல்கள், கண்ணதாசன் வாலியின் வரிகள் எல்லாம் அவரால் சாகா வரம் பெற்றன‌

பாடக என்பதையும் தாண்டி மிகபெரும் முருக பக்தர், அதனால்தான் யாரும் பாடமுடியாத அருணகிரி நாதரின் முத்தைதிரு எனும் அற்புத பாடலை அவரால் மகா சிறப்பாக பாட முடிந்தது

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்

சீர்காழி கோவிந்த ராஜன், சவுந்திர ராஜனுக்கு பின்னால் எந்த பாடகர்கள் குரலிலும் ஆண்மை ஓங்கி ஒலிக்கவில்லை

இன்றுள்ள பாடகர்களில் எது ஆண்குரல் எது பெண்குரல் என கண்டுபிடிக்கவே மகா சிரமமாய் போயிற்று

தமிழ் திரையுலகில் அழியா பாடல்களை கொடுத்த, அவனின்றி பாடல் பாட ஆளில்லை என்ற அளவு கோலோச்சிய அந்த டி.எம் சவுந்திரராஜனுக்கு இன்று பிறந்த நாள்

அவர் குரலால் பாடல்களில் புகழ்பெற்ற ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் அவருக்கு என்ன கைமாறு செய்தார்கள் என்பது நினைவில் இல்லை

அப்படி நடந்ததாகவும் தெரியவில்லை. ராமசந்திரனுக்கு தன்னை விட சிவாஜிக்கு டிஎம்ஸ் சிறப்பாக பாடியது போல் தோன்றிற்று

உண்மையில் சிவாஜியின் அபார நடிப்பிற்கும் கணீர் குரலுக்கும் டிஎம்ஸ் குரல் பொருந்தியதே தவிர வேறு அல்ல,

ஆனால் ராமசந்திரனுக்கு அது பொறுக்கவில்லை, சில சர்ச்சைகள் வந்ததாய் சொல்வார்கள்

உண்மையில் டி.எம்.எஸ் வாழ்ந்த காலத்திலே அவருக்கு விழா எடுத்த ஒரே நபர் மு.க அழகிரி

(இம்மாதிரி மகா நல்ல விஷயங்களையும் அவர் செய்தார், ஆனால் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் எல்லாம் கூட வைத்து தன் பெயரை கெடுத்தும் கொண்டார்)

அந்த மாபெரும் பாடகனுக்கு இன்று பிறந்தநாள். தமிழ் திரை இசை பாடல்கள் உள்ள வரை அவருக்கு மரணமில்லை