அந்த மெய்டன் மருத்து கம்பெனி சர்ச்சை

அந்த மெய்டன் மருத்து கம்பெனி சர்ச்சை

இந்தியாவின் ஹரியானாவில் உள்ளது மெய்டன் மருந்த்து தயாரிப்பு நிறுவணம், இந்த நிறுவணத்தின் மருந்துகளை உட்கொண்ட ஆப்ரிக்க காம்பியா நாட்டு குழந்தைகள் பலர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கின்றது

இந்திய கம்பெனி மருந்துகளே சாவுக்கு காரணம் என ஐ.நா சுகாதார மையம் அறிவிக்க அந்த மருந்துக்கு அனுமதிகொடுத்த இந்திய மருந்துகழகமும் இப்பொழுது சிக்கலில் உள்ளது

முதல்கட்ட விசாரணையில் அந்த மருந்துவகை காம்பியாவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யபட்டது என்றும் இதர மக்களின் பயன்பாட்டில் இல்லை எனவும் சொல்லபடுகின்றது

இந்த மருந்து குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்து மரணம் ஏற்படுத்தியிருப்பதாக குற்றசாட்டு பரவுகின்றது

இப்பொழுது அக்கம்பெனியின் 4 மருந்துகள் தடை செய்யபட்டு விசாரணை தீவிரமாகின்றது

இது இருவகையாக பார்க்கபட வேண்டிய விஷயம்

முதலில் எல்லா மருந்தும் எல்லா நாட்டிலும் ஒரேமாதிரி வேலை செய்யாது, அவர்களின் உணவு காலநிலை மரபணு பொருத்து மருந்துகளின் தன்மை மாறும்

இதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்ததா இல்லை உண்மையிலே மருந்து கோளாறா என்பது தெரியவில்லை, இதுகாலமும் சர்ச்சையில் மாட்டாத மெய்டன் நிறுவணம் இப்பொழுது மாட்டுவதும் அதிர்ச்சி

பொதுவாக மருந்து கம்பெனிகளுக்குள் எழும் போட்டி அதிகம், ஆப்ரிக்காவில் இருந்து இந்திய மருந்து கம்பெனிகளை வெளியேற்றினால் அங்கு சீன கம்பெனி இல்லை இதரநாட்டு கம்பெனிகள் வியாபாரம் செய்ய வாய்ப்பாகும்

மத்திய அரசு இதுபற்றி தீவிர விசாரணையில் இருக்கின்றது

இந்தியாவில் இந்த மருந்து இதுவரை எந்த புகாரையும் பெறவில்லை என்பதால் எவ்வித சிக்கலும் இல்லை வீண் வதந்திகளை பரப்பாமல் இருப்பது நல்லது

ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு அப்படி மருந்து அவசியம் என்றால் மருத்துவரின் முழு உத்திரவாதத்தோடு கொடுக்கலாம் அது ஆபத்தில்லாதது