அப்பல்லோ ஆளை கொல்லுமாம்…

ராஜாஜி காலத்தில் அப்பல்லோ ரெட்டியே இல்லை, மருத்துவமனை எப்படி வந்திருக்கும்?

அண்ணாவிற்கு கேன்சர், அமெரிக்க டாக்டர் மில்லர் கையினை விரித்தபின்பு அவர் அடையாறில் சிகிச்சை பெற்றதாக செய்தி

மூப்பனார் ஒருவிதமான தொண்டை அழற்சி, சுவாச கோளாறால் பாதிக்கபட்டு ராமசந்திராவில்தான் காலமானார் என நினைவு

எம்ஜிஆர் முதலில் அப்பல்லோ எனினும் பின் அமெரிக்க புருக்கீளின் மருத்துவனை சிகிச்சையும் எடுத்து வீட்டில்தான் மறைந்தார்

உண்மை இப்படி இருக்க, அப்பல்லோ ஆளை கொல்லுமாம், அதனால் கலைஞர் தப்பிவிட்டாராம்

மருத்துவனை சாவினை தள்ளிபோடுமே தவிர அதனை வெல்லாது.

ஆளாளுக்கு அப்பல்லோவில்தான் எல்லோரும் செத்தான் என கிளப்பிவிடுகின்றார்கள்

காந்தி,நேரு, இந்திரா, ராஜிவினை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள் அவர்களையும் அப்பல்லோவில் கொன்றால்தான் என்ன?

ஏன் இந்த வஞ்சகம்?

இப்படிபட்ட அறிவார்ந்த மக்கள் வாழும் மாநிலத்தை கைபற்ற பாஜக வேறு சதி செய்கிறதாம்?

தமிழிசையை தலைவராக்கும் பொழுதே தெரியவில்லையா, பாஜக தமிழகம் என்றால் தலை தெரிக்க ஓடுகிறது என்று.