அமெரிக்காவில் அய்யா ராம்சாமி ….

அமெரிக்கா எப்பொழுதுமே இனவெறி கொண்ட நாடு, பொதுவாக ஐரோப்பியருக்கு தாங்களே உயர்ந்தவர்கள் எனும் மேட்டிமை மனம் மனதால் உண்டு, கிரேக்கருக்கும் ரோமருக்கும் இருந்த அந்த உயர்ந்த மனப்பான்மை அவர்களுக்கும் உண்டு, ஹிட்லர் கூட அப்படித்தான் உருவாகியிருந்தான்

இதனால் ஐரோப்பியரை தவிர எல்லோரையும் தாழ்வாகவும் மரியாதை குறைவாகவும் நடத்தும் தன்மை அவர்கள் ரத்தத்திலே உண்டு, என்னதான் இயேசுவின் அன்பு சமதர்மம் என பேசினாலும் அந்த உயர்ந்த மனப்பான்மை வெறியினை மாற்றவே மாட்டார்கள்

அது அவர்கள் உலகெல்லாம் ஆளும்பொழுது தெரிந்தது, தென்னாப்ரிக்காவில்தெரிந்தது, இந்தியரை சிறுமைபடுத்தி ஆளும்பொழுது தெரிந்தது இன்னும் பல இடங்களில் தெரிந்தது

அமெரிக்காவில் அது பட்டவர்த்தனமாக 17ம் நூற்றாண்டிலே தெரிந்தது

ஆப்ரஹாம்லிங்கன் பலமான அமெரிக்காவுக்காக அடிமை முறையினை ஒழித்தார், அதாவது அதுவரை ஆப்ரிக்க கருப்பின மக்களை மனிதர்களாக கூட கருதாமல் ஆடுமாடுகளை போல் பிடித்துவந்து சந்தையில் விற்று கொண்டிருந்தார்கள் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள்

ஆம், சக மனிதனை மனிதனாக கூட கருதாமல் ஆடுமாட்டை போல ஏலம் விற்ற கும்பல்ல்தான் இந்தியாவில் அன்பே இயேசு என மதமாற்றம் செய்து கொண்டிருந்தது

ஆபிரஹாம் லிங்கம் கருப்பர்களும் மனிதர்கள் என சொன்னதற்காக சுட்டு கொல்லபட்டார், வெள்ளை இனவெறி அவரை சுட்டு கொன்றது

அதன் பின்னும் பெரும் சர்ச்சைகள் அமெரிக்காவில் நடந்தன, இன்றுவரை அவை உண்டு, அவ்வப்போது வெடிக்கும், உலகை சுரண்டி அவர்கள் கொட்டும் பெரும்செல்வம் ஒன்றாலே அத்தேசம் நீடிக்கின்றது இல்லையேல் சிதறிவிடும், உள்ளிருக்கும் நெருப்பு அப்படி

இந்நிலையில்தான் உலகெல்லாம் இருந்து மக்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள் அல்லது திறமையுள்ளோர் வருவது நாட்டுக்கு நல்லது என அமெரிக்காவும் ஏற்றுகொண்டது

அவ்வகையில் இந்தியர்கள் பலர் குடியேறினார்கள் பல வாய்ப்புக்களை பெற்றார்கள் வாழ்கின்றார்கள்

இதனை பல அமெரிக்கர்கள் விரும்பவில்லை, இந்தியர்களை எப்பொழுதுமே இழிவாக கருதும் அவர்கள் மனநிலை இப்பொழுது அவர்கள் வேலையினை பறிக்க வந்த கூட்டமாக பார்க்க தொடங்கிவிட்டது

இது ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் உண்டு என்றாலும் அமெரிக்காவில் இப்பொழுது அதிகமாக தெரிகின்றது

இவ்வளவுக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளின் உற்பத்திக்கு இந்தியாதானே சந்தை, சந்தையில்லா அமெரிக்கா என்ன வியாபாரம் செய்யும் எனும் சிந்தனை துளியுமில்லை

கடந்தவாரம் அமெரிக்க டெக்சாஸில் இந்திய பெண்கள் வெள்ளை இன பெண்களால் தாக்கபட்டதும் இன்னும் சில இடங்களில் இந்த இனவெறி தாக்குதல் தொடங்கியிருப்பதும் பரபரப்பான செய்திகள்

அமெரிக்கா இதனில் மவுனம் காக்கின்றது, இந்திய தரப்பும் நேரடியாக பேசாமல் மறைமுகமாகவும் அமெரிக்காவின் இந்திய சமூகம் சார்பாகவும் பேசுகின்றது

வெள்ளையர்கள் துப்பாக்கி போன்ற‌ ஆயுதம் வைக்க உரிமை கொடுத்திருக்கும் நாடு அமெரிக்கா இந்தியர்கள் அதை பெறமுடியாது எனும் வகையில் ஏதும் மோதல் வந்தால் நிலமை சிக்கல்தான் எனும் வகையில் கடும் பதற்றம் மெல்ல எழுகின்றது

நிலமை இப்படி இருக்க, உலகமே ஒரு அமைப்பை உன்னிப்பாக கவனிக்கின்றது அது அமெரிக்காவில் இருக்கும் திராவிட பெரியார் அமைப்புக்கள்

ஆம், எங்கெல்லாம் பணம் உண்டோ அங்கெல்லாம் கொள்கை மறந்து அலுவலகம் திறப்பார்கள் பெரியாரிஸ்டுகள்

இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் இந்துமத ஒழிப்பு என கடை திறந்தவர்கள், மலேசியா சிங்கப்பூரிலும் திறந்தார்கள், அரபு நாடுகளில் திறந்தார்கள், ஐரோப்பாவில் திறந்தார்கள், அமெரிக்காவிலும் திறந்தார்கள்

அடிக்கடி வீரமணி போன்றோர் கூட அங்கு சென்று பகுத்தறிவு, மானிட நேயம், சமூக நீதி என பேசிவிட்டு வருவார்

இப்பொழுது அமெரிக்காவில் இனவெறி அதிகரித்து வெள்ளை மேட்டிமை கொள்கை வலுபெறும் நேரம் திராவிட பெரியாரிஸ்ட் அமைப்புக்களெ அதை தடுக்கும் என உலகம் நம்புகின்றது

இந்தியாவில் தீண்டாமை, பார்பானிய கொடுமையினை உடைத்து புதைத்து ஐநா விருதெல்லாம் வாங்கிய பெரியாரிஸ்டுகள் அமெரிக்காவிலும் சக மனிதனை மனிதனாக மதிக்காக சமூக இழிவினை உடைத்து அமெரிக்கா வெள்ளையருக்கு மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் சமம் என போராடி உரிமை மெற்று கொடுப்பார்கள் என உலகம் நம்புகின்றது

பன்றிக்கு வெள்ளை அடித்தல், வெள்ளையன் படத்தை கருப்பு செருப்பால் அடித்தல் என கருப்பு சட்டை அணிந்து போராடி அவர்கள் அமெரிக்காவில் மனித இழிவினை ஒழித்து “சமூக நீதியினை” காக்க பெரும் போராட்டம் நடத்துவார்கள் என உலகம் ஏங்குகின்றது

திராவிட அய்யா வீரமணி தராசில் பெரும் பணம் பெற்றது அமெரிக்கா செல்ல டிக்கெட்டுக்கும் அங்கு தங்கி போராடி சமூக நீதியினை பெற்றுகொடுப்பதற்கும் என்பதை அறிந்த உலகம் அவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என ஆனந்த கண்ணீருடன் அவர் வாஷ்ங்டன்னை அதிரவைக்க போகும் காட்சிக்காக ஏங்கி நிற்கின்றது

“சமூக நீதி” எனும் வார்த்தையினை ஆபிரஹாம் லிங்கன் உலகுக்கு சொல்லியிருக்கலாம் ஆனால் அமெரிக்காவில் அதை செயல்படுத்தபோவது அமெரிக்க திராவிட கழகம் என்பதை இனிதான் உலகம் காண போகின்றது..