அமெரிக்க காந்தி மார்ட்டின் லுத்தர் பிறந்த நாள் இன்று

Image may contain: 2 people, people smiling

வெள்ளையன் அமெரிக்காவினை அடைந்த காலத்தில் இருந்தே அது வெள்ளையருக்கு மட்டும் சொந்தமான நாடு என்ற எண்ணம் அவர்களிடை வந்தது

செவ்விந்தியர் மூர்க்கமாக அழிக்கபட்டனர், ஆப்ரிக்காவில் இருந்து கருப்பர்கள் அடிமைகளாக கொண்டுசெல்லபட்டு சொல்லணா துயருற்றனர், அமெரிக்க விடுதலைக்கு பின்னும் அது 100 ஆண்டு தொடர்ந்தது

மாமனிதன் ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் அடிமை இல்லை என அறிவித்தார், அதனால் கொல்லவும் பட்டார்

அன்றே உள்நாட்டு போரால் அமெரிக்க உடைந்திருக்க வேண்டியநிலையில் இருந்தது, அதனை எல்லாம் காத்து இன்று ஒரே அமெரிக்காவாக இருக்க காரணம் லிங்கனே , ஆனாலும் இனவெறி அவரை கொன்றது

அதன் பின்னும் அவர்களுக்கு உரிமைகள் இல்லை, வாக்குரிமை கூட இல்லை

வெள்ளையன் அதிகார வர்க்கம் , ஆயுத போராட்டம் வெற்றிபெறா நிலையில் தவித்து நின்றனர் கருப்பர்கள்

அவர்களுக்கு கிடைத்த மாமணிதான் மார்ட்டின் லுத்தர் கிங். அவர் ஒரு பாதிரி ஆனால் சிந்திக்க தெரிந்த பாதிரி

நாமெல்லாம் கிறிஸ்தவர்கள் என்கின்றீர்கள், ஆனால் எங்களை ஒதுக்கியே வைத்திருக்கின்றீர்கள். சக மனிதனை மனிதனாக கூட மதிக்காத நீங்கள் எப்படி உன்னத கிறிஸ்தவராக முடியும் என பகிரங்க கேள்விகளை எழுப்பினார்

அப்பொழுது அவர் பெயர் மைக்கேல் கிங், ஐரோப்பாவில் போப்பினை எதிர்த்து புரட்சி செய்த மார்ட்டின் லுத்தர் பெயரை இவர் தனக்கு சூட்டிகொண்டு போராடினார்

ஆனாலும் பலனில்லை, இந்த உலகில் யாரின் வழி அமைதியான ஆனால் வலுவான போராட்ட வழி என அவர் தேடியபொழுது ஒன்றும் கிட்டவில்லை

அமைதி வழி என் வழி என போராடினார், அப்பொழுது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது

அக்கால அமெரிக்க பேருந்தில் வெள்ளையர்களே அமர வேண்டும், கருப்பர் அமர்ந்தால் வெள்ளையர் வந்ததும் எழுந்துவிட வேண்டும், இது தொடர்பாக ஒரு கருப்பு பெண்ணை வெள்ளையர் அறைந்துவிட மோதல் வெடித்தது

அடிபடுவது ஒன்றும் கருப்பருக்கு புதிதல்ல, ஆனால் மார்ட்டின் லுத்தர் காந்தி வழியில் எதிர்ப்பு தெரிவித்தார். போக்குவரத்து கழக கருப்பர்கள் இச்சிக்கல் தீரும்வரை பணிக்கு வரமாட்டார்கள்

அமெரிக்க அரசு என்ன பழனிச்சாமி அரசா? கண்டவனையும் போட்டு பேருந்தை இயக்க? போராட்டம் பரவ அமெரிக்கா ஸ்தம்பித்தது

விஷயம் விவகாரமாகி வேறுவழியின்றி கருப்பர் கோரிக்கை ஏற்கபட்டு கருப்பர்கள் பேருந்தில் அமரலாம் என முடிவாயிற்று, கருப்பர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுதான்

இந்த உற்சாகத்தில் போராட ஆரம்பித்தார் மார்ட்டின் லூத்தர், எனக்கொரு கனவு உண்டு, இதே அமெரிக்காவில் கருப்பர்கள் சம உரிமை பெற்று வாழவேண்டும், நாமும் மனிதர்களே என அவர் உருகி கேட்டது உலக மக்கள் இதயத்தை எல்லாம் உசுப்பியது

உலகின் கவனத்தை பெற்றார் மார்ட்டின் லுத்தர், சர்வதேச ஆதரவு பெருகியது. அமெரிக்க வெள்ளையரோ அவரை மிரட்டினர்

“இந்த போராட்டத்தில் இறங்கும்பொழுதே எனக்கு சாவு நிச்சயம் என தெரியும், ஆபிரகாம் லிங்கனையே இனவெறிக்கு கொன்ற தேசம் என்னை எப்படி விடும்?”என அமைதியாக சொன்னார் மார்ட்டின் லுத்தர்

1959ல் இந்தியா வந்தார், பல இடங்களை சுற்றி பார்த்தபின் சொன்னார், இனி என் வழி காந்திவழி

காந்திய வழியில் அவரின் போராட்டம் பெருகியது, அமெரிக்க அரசு இறங்கி வந்தது, கருப்பருக்கு சில சலுகைகள் கிடைத்தன‌

1964ல் நோபல் பரிசும் அவருக்கு கிடைத்தது, காந்திய கொள்கை பெற்றுகொடுத்த நோபல் அது.

தொடர்ந்து போராடினார், மக்களை நாடெங்கும் திரட்டி கொண்டே இருந்தார், கருப்பர்கள் அவரை தேவ தூதனாகவே கண்டார்கள்

பொறுக்காத இனவெறி வெள்ளையன் 1968ல் அவரை சுட்டு கொன்றான். லிங்கன், காந்தி வரிசையில் மானிடத்திற்காய் மக்களை நேசித்த பாவத்திற்காய் அவன் செத்தபொழுது வயது வெறும் 39

உலகம் அவனுக்காய் அழுதது, உலகெங்கும் உரிமை குரல்கள் எழும்பின குறிப்பாக தென்னாப்ரிக்கா போன்ற நாடுகள் அமைதி வழியில் உரிமை பெறுவது முடியும் என நம்பின, மண்டேலா போன்றோர் உருவானார்கள்

அமெரிக்காவிலும் கருப்பர்களுக்கு உரிமைகள் கிடைக்க தொடங்கின, முகமது அலி மைக்கேல் ஜாக்சன் போன்றோர் வெளி தெரிந்தது அங்கீகாரம் பெற்றது லுத்தரின் சாவுக்கு பின்னாலேதான்

அந்த லுத்தர் கொடுத்த சக்தியில்தான் அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பு அதிபராக ஒபாமா பின்னாளில் வந்தார்

நிச்சயம் 1950கூட அடுத்த 50 ஆண்டுகளில் கருப்பர் அமெரிக்காவினை ஆள்வார் என யாரும் நம்பி இருக்க முடியாது அவ்வளவு கொடுமையான காலங்கள்

ஆனால் அஹிம்சையான போராட்டம் மாபெரும் திருப்பத்தை கொடுத்தது

மிக சிறிய வயதிலே போராட வந்து, 39 வயதிற்குள் சாதித்துவிட்டு அம்மக்களுக்காக செத்த அந்த மார்ட்டின் லுத்தர் இந்த உலகில் விட்டு சென்ற அடையாளம் வலுவானது, கருப்பர்களை அடையாளபடுத்தி உரிமை கொடுத்த அவதாரமாகவே அவர் பார்க்கபடுகின்றார்

அவருக்கு வழிகாட்டியது காந்தி என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைபடலாம்

காந்தியின் கொள்கைகள் அவ்வளவு உயர்வானவை, உன்னதமானவை என உலகம் காந்திக்கு பின் கண்டது அவரில்தான்

அந்த மாமனிதனுக்கு இன்று நினைவுநாள், ஒடுக்கபட்ட மக்களுக்காக போராடுகின்றோம் என சொல்லிகொள்பவர் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய மகான் அந்த லுத்தர் கிங்

ஒடுக்கபட்டோருக்கான தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி தொலைநோக்கோடு சிந்திக்க வேண்டும் என சொன்னவர் அவர், அப்படி நல்ல தலைவன் பின் சென்றால் அமைதியான வளமான நாட்டை உருவாக்க பங்களிப்பினை செய்ய முடியும் என செய்துகாட்டியவர்கள் அமெரிக்க கருப்பர்கள்

இன்று அந்நாடு உச்சத்தில் இருக்கின்றது,

உரிமைக்காக துப்பாக்கி தூக்கிய தேசங்கள் அழிந்து கிடக்கின்றது அதுவும் பக்கத்து தீவே சாட்சி

நிச்சயம் லுத்தர் பிரிவினை பேசவில்லை, எங்களை தனியாக விடு என கத்தவில்லை மாறாக எங்களுக்கும் உரிமை கொடுங்கள் நாங்களும் இந்நாட்டிற்கு பாடுபடுகின்றோம் என்றுதான் முழங்கினான் உயிர்விட்டான்

அப்படிபட்ட தலைவர்களே இன்று உலகெங்கிலும் உள்ள ஒடுக்கபட்டோருக்கு தேவை, குறிப்பாக இந்தியாவில் நான் தலித் தலைவன், போராளி, இனமான போராளி என சொல்லிகொள்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்கள் நோக்கம் உன்னதமாக இருந்தால் மார்ட்டின் லுத்தரை பின்பற்ற தயங்கமாட்டார்கள்

ஆனால் எங்காவது நீங்கள் இந்த கும்பல்களிடம் லுத்தர் படம் பார்க்கமுடியுமா?

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், சே என பல வெளிநாட்டு தலைவர்கள் இருக்கும் படத்தில் நிச்சயம் லுத்தர் படமும் இருக்க வேண்டும் ஆனால் வைக்கமாட்டார்கள்

ஏனென்றால் அவன் உரிமை கோரியவன் ஆனால் அமெரிக்க அபிமானி, இவர்களோ இந்திய எதிர்ப்பு எனும் ஒற்றை புள்ளியில் சுழல்பவர்கள் அதனால் லுத்தர் இவர்களுக்கு தேவையில்லை

“எனக்கொரு கனவுண்டு..” என அவன் முழங்கியதில் பாதி நடந்திருக்கின்றது, முழுவும் நனவாக இன்னொரு முறை அவன் பிறந்து வரவேண்டும்

வரலாற்றில் மிகபெரும் தடம் பதித்த அந்த அமெரிக்க காந்திக்கு இன்று பிறந்த நாள், ஆழ்ந்த அஞ்சலிகள்..