அமெரிக்க முன்னாள் முதல் குடிமகள் பார்பரா புஷ் மரணமடைந்தார்

அமெரிக்க முன்னாள் முதல்குடிமகள் பார்பரா புஷ் மரணமடைந்தார். 92 வயதான அவருக்கு டிரம்ப் கிளிண்டன் ஒபாமா என அந்நாட்டு தலைவர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்துகின்றனர்
அமெரிக்க கொடி அரைகம்பத்தில் பறக்க உத்தரவிட்டிருகின்றார் டிரம்ப்
அவர் அரசுபதவியில் கூட இல்லை, பின் ஏன் மரியாதை என்றால் அமெரிக்காவில் பெண்களை அதிபராக்கவில்லையே தவிர அவர்களுக்கான மரியாதை உண்டு. மனைவி இன்றி பொது இடங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ அதிபர்கள் செல்லமாட்டார்கள்
இந்த பார்பராவின் கணவர் சீனியர் புஷ் , இரும்பு ஆசாமி வளைகுடா போரினை நடத்தி குவைத்தை அவர்தான் மீட்டார்
பார்பராவின் மகன் ஜூனியர் புஷ், இவர்தான் சதாமிடம் அணுகுண்டு இருப்பதாக கதைகட்டி படையெடுத்து சிக்கல்களை உருவாக்கினார், பதிலுக்கு பின்லேடன் அமெரிக்காவினை துணிச்சலாக தாக்கினார்
கணவன் மகன் என இருவரையுமே அமெரிக்க அதிபராக பார்த்து நிறைவாழ்வு வாழ்ந்தவர் பார்பரா
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
தன் கணவனும் தன் வாரிசும் உச்சபதவியில் அமர்வதை காணும் யோகம் வெகுசிலருக்கே கிடைக்கும்
இந்தியாவின் கமலா நேருவிற்கு அந்த கொடுப்பினை இல்லை.
சோனியா காந்திக்கும், தயாளு அம்மாளுக்கும் இப்பொழுது இருக்கின்றது
இதில் தயாளு அம்மாள் அல்மைசரால் பாதிக்கபட்டவர் என முன்பு கோர்ட்டில் மருத்துவர் சொல்லியிருப்பதால் முக ஸ்டாலின் முதல்வரானும் அம்மையார் புரிந்துகொள்வது சிரமம் என நம்பபடுகின்றது, நம்பித்தான் ஆகவேண்டும்.
அதனால் சோனியா காந்தி ஒருவருக்கே இப்போதைக்கு இந்தியாவில் வாய்ப்பு.