ஆங்கில நாடக ஆசிரியர்களில் தனித்து நிற்பவன் ஷேக்ஸ்பியர்

ஆங்கில நாடக ஆசிரியர்களில் தனித்து நிற்பவன் ஷேக்ஸ்பியர்
மனிதனுக்கு ரசனை இருந்திருக்கின்றது, அவனளவு காதலை ரசித்து சொன்னவர் அவன் காலத்தில் யாருமில்லை, அவனுக்கும் பின்பும் குறைவு
ஷேக்ஸ்பியரின் கதைகள் சொந்த சரக்கு அல்ல, ஆனால் நடந்த கதைகளை காதல் ரசமும் சோகமும் சொட்ட சொட்ட சொன்னதில் அவன் நிலைத்துவிட்டான், அவன் கலை உள்ளம் அப்படி இருந்திருக்கின்றது
வார்த்தைகளை அப்படி கோர்த்தெடுத்திருக்கின்றான், அவனின் வசனங்கள் உள்ளத்தை தொடுபவை
எந்த கதையும், சம்பவமும் சொல்பவனின் சுவாரஸ்யத்திலேதான் இருகின்றது, அதனால்தான் எத்தனையோ பேர் பாடிய ராமயணம் , கம்பன் பாடும்பொழுது தனி இடம் பெற்றது
ஷேக்ஸ்பியர் வரலாறு கொஞ்சம் ஆச்சரியமானது, எழுத்து அவனுக்கு எப்பொழுது வந்தது என அவனுக்கே தெரியாது. ஓரளவு பள்ளி வகுப்பு முடித்திருந்தான், தொழில் என எதுவும் நிரந்தரமில்லை
தொழுவத்தில் குதிரை சாணம் அள்ளும் தொழில் எல்லாம் செய்திருக்கின்றான்
அடிக்கடி நாடகம் பார்க்கபோன அவனுக்கு அதிலே ஈர்ப்பு வந்து அவனுள் இருந்த கலைஞனை வெளிகொண்டுவந்தது
நமது புராணத்தில் ஆடுமேய்த்த காளிதாசன் திடீர் கவிஞன் ஆனது போல் அவனுக்கும் ஒரு மாறுதல் நிகழ்ந்திருக்கின்றது
அவனின் புகழ்பெற்ற கதைகளான ஜூலியஸ் சீசர், ஆண்டனி கிளியோபாட்ரா கதை ரோமர் வரலாறு, ரோமியோ ஜூலியட் கூட வரலாற்று சம்பவங்களே
கிரேக்க இதிகாச, ரோம இதிகாச வரலாற்று சம்பவங்களை தனக்கே உரித்தான ஸ்டைலில் சொல்ல தொடங்கினான்
சுருக்கமாக சொன்னால் நாடகம் எப்படி இருந்தால் அவன் ரசிப்பனோ, அதை அப்படியே எடுத்தான், மக்கள் விருப்பமும் அதுவாக இருந்ததால் அவன் நாடகங்கள் ஓடின
வசனங்களும் கவிதைகளும் அவனுக்கு தனி இடம் பெற்றுகொடுத்தன
வரலாற்று சம்பவங்களை காதலும் சோகமும் கலந்து கொடுத்தால் அது மாபெரும் படைப்பாகும், மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நுட்பத்தை வரலாற்றில் முதலில் செய்த எழுத்தாளன் அவனே
பின்னாளில் பலர் அதே பாணியில் ஜெயித்தார்கள்
தமிழில் மணிரத்னமும், ஹாலிவுட்டில் ஜேம்ஸ் காமரூனும் அப்படியானவர்கள்
மணிரத்னம் படங்கள் ரோஜா முதல் பம்பாய், உயிரே வரை அதை காணலாம், கன்னத்தில் முத்தமிட்டால் கூட ஒரு பிஞ்சு குழந்தையின் பார்வையில் தாய் மகள் உறவு போராட்டத்தில் ஈழபிரச்சினையினை நோக்கிற்று
டி.ராஜேந்தரின் தொடக்ககால படங்கள் கூட ஷேக்ஸ்பியர் கதைகள் சாயலே, பின்னாளில்தான அவர் டண்டனக்கா ஆகிவிட்டார்
காதல், பாசம் போன்ற மெல்லிய உணர்வுகளை வரலாற்று சம்பவத்தோடு கலந்தால் அது பார்ப்பவர் மனதை உருக வைக்கும்
அந்த வித்தையில் கில்லாடி ஷேக்ஸ்பியர்.
ஜூலியஸ் சீசர் கதையினை அவன் சீசருக்க்கு நேர்ந்த துரோகத்தோடு உருக்கமாக சொன்னான், “நீயுமா புருட்டஸ்” என்பது சீசரின் வார்த்தை அல்ல, ஷேக்ஸ்பியரின் நாடக வார்த்தை. “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்” என்பதெல்லாம் அவன் வார்த்தை ஜாலமே
ஆண்டனி கதையினை கிளியோபாட்ராவின் காதலோடு சொன்னான், அப்படி ஒரு காதலை அவர்களே செய்திருக்கமாட்டார்கள். ஆனால் தன் பார்வையில் மிக ரசனையாக சொன்னான் ஷேக்ஸ்பியர்
அது அவனுக்கு பெரும் புகழை கொடுத்தது.
ரோமியோ ஜூலியட் தற்கொலை செய்த இரு காதலர் கதை, அதை தன் விருப்படி மாற்றி மக்களை கொண்டாட வைத்த நுட்பம் அவனுடையது.
சாதாரண விஷயம் என மானிடர் கடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உணர்ச்சி கண்ணால் பார்த்து அதற்கு சாகா வரம் கொடுத்த கடவுள் ஷேக்ஸ்பியர்
52 வயதிலே இறந்தாலும் தன் வாழ்நாளில் 12 பெரும் காவியங்கள், 11 வரலாற்று நாடகம், 16 துன்பியல் காமெடி நாடகம் என படைத்திருந்தான்
கவிதைகள் தனி கணக்கு
இவ்வளவு படைத்தும் அவன் வாழ்நாளில் பெரிதாக கொண்டாடபடவில்லை, இதனால்தான் என்னவோ அவனின் துன்பியல் காமெடி நாடகங்கள் பிற்காலத்தில்தான் கொண்டாடபட்டன, அவன் அப்போது இல்லை
ஆம் அவனின் எழுத்து கூட அச்சில் வந்ததில்ல, அவன் காலத்திற்கு பின்பே அச்சுக்கலை வந்தது
அவன் எழுதி குவித்த நாடகம் எல்லாம் அவன் காலத்தில் அரங்கேற்றம் காணவுமில்லை, பல நாடகங்கள் அவன் காலத்திற்கு பின்பே அரங்கேறியது
அவன் எவ்வளவு எழுதினான் என்பது அவனுக்குத்தான் தெரியும், உலகத்து கையில் கிடைத்தது கொஞ்சம்தான், அதிலே அவன் புகழின் உச்சியில் நிற்கின்றான்
விக்டோரியா ராணி காலத்தில் அவன் அருமை தெரிந்தது, பிற்கால சந்ததி அவனை போற்றி புகழ்ந்தது
இன்று அவன் இங்கிலாந்தின் தேசிய
கவிஞன் என போற்றபடுகின்றான்
இன்று அவனின் நினைவு நாள், உலக இலக்கிய உலகம் அவனுக்கு அஞ்சலி செலுத்துகின்றது
உலகமெல்லாம் கொண்டாடபட்ட ஷேக்ஸ்பியர் தமிழகத்திலும் கொண்டாடபட்டான், அண்ணா அவனை பற்றி சில விஷயங்களை எழுதினார்
கண்ணதாசன் கூட திருடித்தான் புகழ்பெற்றான் ஷேக்ஸ்பியர் என எழுதினார், அதே நேரம் கம்பனிடம் இருந்தும் ஆண்டாள், ஆழ்வார்களிடமிருந்தும் அவர் திருடியதை மறைக்கவில்லை
ஷேக்ஸ்பியருக்கு இருந்த நுண்ணிய ரசனை கண்ணதாசனிடமும் ஓரளவு இருந்தது, நிச்சயம் இருந்தது
தமிழகத்து ஷேக்ஸ்பியர் சர்ச்சைகள் சுவாரஸ்யமானவை
ஜெயாவிற்கு நோபல் கேட்டார்கள் என காமெடி செய்தவர்கள், 2008ல் டெல்லியில் திமுக எம்பி ஒருவர் சொன்னதை மறந்துவிட்டார்கள்
என்ன சொன்னார் அன்னார்?
“கலைஞர் ஷேக்ஸ்பியரை தாண்டி சென்றுவிட்டதால் அவருக்கும் நோபல் வேண்டும், இந்தியா வாங்கிதர வேண்டும்” என பகிரங்கமாக கேட்டார்
அது அபினவ் பிந்திரா சீன ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நேரம் என்பதால் இந்த காமெடி பெரிதாகவில்லை
அதே நேரம் காந்திக்கே நோபல் கிடைக்கவில்லையாம் , கலைஞருக்கு கிடைக்காதது ஆச்சரியமில்லை என சில திமுகவினர் கண்களை துடைத்துகொண்டனர்
ஷேக்ஸ்பியர் இங்கு பட்ட பாடு இப்படி.
மாபெரும் கவிஞனாகவும், மிகபெரும் நாடக ஆசிரியராகவும் இன்று அவன் கொண்டாடபடுகின்றான்
ஷேக்ஸ்பியர் காலத்தால் முந்திவிட்டதால் அவனால் பாடாமல் போன விஷயங்கள், காவியங்கள் வடிக்காமல் போன அற்புதமான விஷயங்கள் இரண்டு
முதலாவது நெப்போலியன் போனபார்ட் ஜோசப்பின் காதல், நிச்சயம் வரலாற்றில் நின்ற அற்புத காதல் அது
மானிட வரலாற்றில் ஆச்சரியமான காதல் அது, நெப்போலியனின் காதல்ரசம் சொட்டும் கடிதங்கள் இன்றும் சிலாகிக்கபடுபவை
ஷேக்ஸ்பியர் அதனை எழுதியிருந்தால் அது அவனின் தலைசிறந்த படைப்பாக இருந்திருக்கும்
இரண்டாவது தலைவி குஷ்பு, அவரும் காலத்தால் பிந்தியதால் அவனால் காவியம் வடிக்க முடியவில்லை, இல்லாவிட்டால் அந்த “டெஸ்டிமோனா” வின் அழகை பாடியது போல் அப்படி பாடியிருப்பான்
இந்த இரு விஷயங்களுக்கும் வாய்ப்பின்றி போனவன் ஷேக்ஸ்பியர் என்றாலும், வரலாற்று விஷயங்களை தன் அழியா காவியத்தில் காதலும், சோகமுமாக பதித்துவிட்டு சென்றவன்
இலக்கிய உலகின் தலைமகன் அவன், அவனுக்கு அழிவே இல்லை
அந்த உன்னத கலைஞனுக்கு ஆழ்ந்த கவிதாஞ்சலி
