ஆசான் Pa Raghavan ருசியியலில் ரசம் வைப்பது எப்படி?
ஆசான் Pa Raghavan ருசியியலில் ரசம் வைப்பது எப்படி என இலக்கிய ரசம் சொட்ட சொட்ட விளக்கியிருந்தார், விடியற்காலமே கண்ணில் பட்டது.
ஒரு மனுதன் ரசத்தை கூடவா இப்படி ரசித்து ரசித்து குடித்திருப்பான்? அவர் குடித்திருக்கின்றார்.
அவர் சொன்ன பதத்தில் அப்படியே ரசம் வைத்தால் வானலோக அமிர்தமாக தித்திக்கும் சுவையில் அப்படியே வருகின்றது.
அவர் வெஜிடேரியன் ஆனது நிச்சயம் இந்த அசைவ உணவு ரசனை உலகிற்கு பெரும் சாபம், தீரா சோகம்
பனீர் எனும் வஸ்துவை பலருக்கு அறிமுகபடுத்தி பிரபலபடுத்திய பெரும் புரட்சியினை ஆசான் Pa Raghavan செய்திருக்கின்றார்
மலேசியாவின் வெகு சில கடைகளிலே பனீர் கிடைக்கும், அப்படி சில இடங்களில் பார்க்கும்பொழுது அது முகமாகவே தெரிகின்றது
பனீர் சமைக்க பெரும் அனுபவமும், பக்குவமும் வேண்டுமாம், இல்லாவிட்டால் கூழாக திரிந்துவிடும் என பலர் எச்சரிக்கின்றார்கள், இன்னொன்று இங்கு கிடைப்பது தரமான பனீர் என சொல்லவும் முடியாது
அதனால் ஆசானை உணவு ருசியில் அப்படியே பின்பற்ற முயலும் நம்மால் பனீரில் மட்டும் முடியவில்லை, அதனை நினைத்தாலே கண்ணீர் வருகின்றது