ஆதீனங்களின் தலமை
ஆதீனங்களின் தலமை பீடத்து சிவனடியார்களை விமர்சிக்கும் தகுதியோ அருகதையோ நமக்கு இல்லை, அவர்களை ஏதும் சொல்லவும் கூடாது, துறவிகளாகிய அந்த சிவனடியார்களின் மனதை சிவனே அறிவார்
ஆனாலும் “துறவிக்கு வேந்தன் துரும்பு” என்பதும் “நாம்யாருக்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்பதும் சிவனடியார்களின் தாரக கோஷம்
அந்த தனிதன்மை வாய்ந்த சிவனடியார்கள் தமிழக முதல்வர் அதுவும் இந்து தெய்வங்களை நம்பாத நாத்திக வேந்தரை வலிய சென்று சந்தித்ததெல்லாம் அவ்வளவு நல்ல விஷயம் அல்ல
மன்னனும் ஆள்வோரும் மடாதிபதிகளை தேடி செல்ல வேண்டும் என்பதுதான் மரபு, தமிழக ஆளுநர் அவ்வகையில் சரியாக இருந்தார் நேரடியாக சென்று உரிய மரியாதையுடன் மடத்தில் ஆதீனத்தை சந்தித்தார்
இப்பொழுது சர்ச்சை பெரிதாகும் பொழுது தமிழக அரச பிரதிந்திகள்தான் ஆதீனத்தை தேடி சென்றிருக்க வேண்டுமே தவிர ஆதீனம் அரச பிரதிநிதிகளை தேடி வந்தது சரியான சம்பிரதாயமாகாது
அதுவும் அறநிலையதுறை அமைச்சரின் வார்த்தைகளை ஆதீனம் அப்படியே கிளிபிள்ளையாய் சொல்லியதும், தனக்கு ஆதரவு தெரிவித்த ஜீயரை மென்மையாக கண்டித்ததும் இது அரசியல் ஆக கூடாது என்றதும் சரியான விஷயங்களாக இருக்கமுடியாது
ஜீயர் இந்த ஆதீனத்த்துக்கு ஆதரவு தெரிவித்ததை இப்படி கொச்சைபடுத்துவதும் சரியல்ல
நிச்சயம் தமிழக பாஜகவோ இந்து அமைப்புக்களோ வரிந்துகட்டவில்லை என்றால் பட்டன பிரவேசம் நடக்க அனுமதி வழங்கபட்டிருக்குமா என்பது கேள்விகுறி, அண்ணாமலையின் சீற்றத்துக்கு பின்பே அரசு நிலமையின் வீரியத்தை புரிந்து கொண்டது, ஆனாலும் இது அரசியலாக கூடாது என ஆதீனம் சொல்வது குழப்பமானது
தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான ஒரு மோதலின் தொடர்ச்சி இது என்பது யாருக்கும் தெரியாதது அல்ல
ஆளுநரை அழைத்ததால் ஏற்பட்ட சலசலப்பில் தமிழக அரசு ஆதீனத்தை நேரில் அழைத்து எதையோ சொல்லவருகின்றது, ஆதீனமும் தலையாட்டுகின்றது
அந்த இடத்திலும் சிதம்பரம் நடராஜபெருமானை கொச்சைபடுத்திய வீடியோ பற்றியோ, பட்டன பிரவேசத்தை தடுக்க வேண்டும் என போராடும் திக கோஷ்டிகளை பற்றியோ ஆதீனம் ஒன்றும் சொல்லவுமில்லை
சிவனடியார்களின் தனிபெரும் வலிமை அவர்களின் தைரியம் “நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே” என சீறும் தைரியம்
நக்கீரரும், பட்டினத்தாரும், அப்பர் சாமிகளும் இன்னும் பல அடியார்களும் வேந்தன் எமக்கு துரும்பு என சீறி நின்ற தைரியம், அந்த நெருப்பான சீற்றம்
அது இந்த ஆதீனத்துக்கு இல்லை, அது ஏன் என்பது தெரியவில்லை
ஒரு பெரும் சிக்கல் அமைதியாக தீர்ந்திருப்பது நல்ல விஷயம், ஆதீனத்தை அழைக்காமலே தமிழக அரசு இந்த முடிவினை எடுத்திருக்குமானால் நல்ல விஷயம் ஆனால் செய்யவில்லை
ஆதீனம் எப்படியும் இருக்கட்டும் அவரை கண்காணிப்பது சிவன் வேலை, ஆனால் இந்து எழுச்சி ஒன்றாலே தமிழக அரசு இறங்கி வந்திருப்பது நிஜம், அந்த எழுச்சி வாழ்த்துகுரியது, இது தொடர்ந்து நிலைக்கும் பட்சத்தில் மாற்றங்கள் வெகு எளிதாக நடக்கும், ஆன்மீக ஞானதாமரை மக்கள் மனதில் மலரும்
நாமர்க்கும் குடியல்லோம்…நமனை அஞ்சோம்….என்று ஆதினங்கள் இருந்தால் இவர்கள் போய் பார்க்காமல் அரசாங்கத்தை இவர்களிடம் வரவழைத்து இருக்கலாம்
எல்லா புகழும் அண்ணாமலைக்கு
ஆதிணங்கள் எதற்காக முதல்வரை சென்று சந்தித்தனர் அவர்களுக்கு சப்போர்ட் செய்தவரை முதுகில் குத்தியது தானே அர்த்தம்