ஆறுமுக நாவலர்
ஓலைசுவடியில் இருந்த தமிழை அச்சுக்கு கொண்டுவந்தவர் உ.வே சாமிநாதய்யர் என்றாலும் அதற்கு சில முன்னோடிகள் இருந்தார்கள் அதற்கு காரணமும் இருந்தது
தமிழகமும் இலங்கையும் இரட்டை சகோதரர்கள் என்றாலும், மூவேந்தர்களுக்கும் தென்னிலங்கை வட இலங்கை மன்னர்களுக்கும் மண உறவுகள் இருந்தன என்றாலும், பாண்டிய சிங்கள தொடர்ச்சியாக நாயக்க சிங்கள தொடர்புகள் இருந்தன என்றாலும் ஒரு கட்டத்தில் அந்த தொடர்பு அறுந்தது 17ம் நூற்றாண்டின் சில அரசியல் சூழலும் மேவேந்தர் கால தமிழக கப்பல்படை இல்லாததும் அதற்கு காரணம்
அந்த காலத்தில் 16, 17ம் நூற்றாண்டில் ஐரோப்பியரால் இந்தியாவில் கால் வைக்க முடியாதபடி வீரசிவாஜியின் மராத்தி சேனையும் மொகலாய படைகளும் காணும் இடமெல்லாம் மோதின, தஞ்சாவூர் வரை அம்மோதல் இருந்தது
இதனால் இந்தியாவின் கடற்கரை ஓரம் தவிர வெள்ளையர்களால் கால் வைக்க முடியவில்லை தங்கள் முகாமை இலங்கைக்கு மாற்றினார்கள், சிறிய தீவான அந்நாட்டின் சிற்றரசர்களை வளைப்பது அவர்களுக்கு சிரமமில்லை இதனால் முதல் காலணியாக 17ம் நூற்றாண்டிலே இலங்கை மாறிற்று
அங்கு கல்விசாலைகளும் மதமாற்றங்களும் நடந்தன, ஈழதமிழர்கள் இந்திய தமிழ்மாகாண தமிழரை விட கல்வியில் 100 ஆண்டு முன்னால் இருக்க இதுதான் காரணம்
அந்த வட இலங்கையில் சைவம் தளைத்திருந்தது, அங்கிருக்கும் திரிகோண மலையும், கேதார ஆலயமும் இன்னும் பலவும் சைவ மரபின் தொடர்ச்சியாக இருந்தன
அங்கே கல்விசாலை வேலை என மெல்ல ஊடுருவிய மிஷனரிகள் மெல்ல மெல்ல இந்து அழிப்பினை மேற்கொண்டனர் இது ஆரம்பத்தில் தெரியவில்லை போக போக தெரியவந்தது, இந்துக்கள் சுதாரித்தனர்
அவர்கள்தான் தமிழ்சுவடிகளை இனி அச்சுக்கு கொண்டுவராமல் இனி சைவத்தை காக்க முடியாது என தமிழுகாக அல்லாமல் சைவத்துக்காய் ஓலைசுவடிகளை அச்சில் ஏற்ற துடித்தனர், உழைத்தனர்
இதை தொடங்கிவைத்த பெருமகன் ஆறுமுக பிள்ளை, பின்னாளில் ஆறுமுக நாவலர்
அவர் காலத்திலும் அவருக்கு பின்னாலும் நெல்லை மதுரை சைவர்களும் அவர் வழியில் சைவ நூல்களை அச்சுக்கு கொண்டுவந்தனர், இதை திரு வி.க அழகாக சொல்வார்
“தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்; சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாதையர்.”
இது போக ச.வையாபுரிப்பிள்ளை என பெரும் பட்டியலே உண்டு
இதில் திராவிட கும்பலுமில்லை, நீதிகட்சியுமில்லை என்பதை குறித்து கொள்ள வேண்டும்
யார் இந்த ஆறுமுக நாவலர்? அவர் எப்படி உருவானார் என்றால் அந்த காலமும் வரலாறும் சுவாரஸ்யமானது
யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் தம்பதியருக்குப் புதல்வனாக 1822-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி பிறந்தவர் அந்த ஆறுமுகம், வழிவழியாக சைவ தமிழறிஞர் குடும்பம் அது
மிக சிறுவயதிலே தமிழை கசடற கற்ற ஆறுமுகம் மதுரை நெல்லை வந்து சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்று தன்னை மேம்படுத்தினார், 15ம் வயதில் யாழ்பாண மிஷினரிகளின் மெதடிஸ்ட் கல்லூரியில் படித்து அதில் சிறந்து அங்கேயே பணிக்கும் செல்லும் அளவு புலமை பெற்றார்
அங்கேதான் அவரின் வாழ்வு திசைமாறிற்று, பல உண்மைகளும் கிறிஸ்தவ கோஷ்டிகளின் சுயரூபமும் தெரியவந்தது
ஆம், மதமாற்றமும் சைவ வெறுப்புமே அவர்களின் அடிநாதமாக இருக்க கண்டார், இந்த அனுபவத்தை அவருக்கு கொடுத்தவர் பேர்சிவல் எனும் வெள்ளையன்
அக்காலத்தில் கிறிஸ்துவத்தை பரப்புவதில் சில கோஷ்டிகளுக்குள் தகறாறு இருந்தது, இதை தொடங்கி வைத்தவன் சீசன் பால்கு எனும் ஜெர்மானிய மிஷனரி
இவனுடன் சண்டையிட்டது விரமாமுனிவர், ராபர்ட் தே நோபிலி போன்ற கோஷ்டிகள், கால்டுவெல் இவர்களுக்கு பிந்தையவன்
அதாவது முதலில் தமிழில் கிறிஸ்தவ நூலை கொண்டுவர விரும்பியவன் சீசன் பால்கு, அவன் தமிழக மகாணம் தரங்கம்பாடி கோட்டையில் இந்தியாவின் முதல் அச்சு எந்திரத்தை கொண்டுவந்து இறக்கி கிறிஸ்தவ பைபிளை தமிழில் கொடுக்க முயன்றான் ஆனால் துண்டு துண்டாக கொடுத்தான்
பிபிலி எனும் கிரேக்க சொல்லை விவிலி என தமிழிக்கு கொண்டுவந்து விவிலியம் என ஒரு கிறிஸ்தவ நூலை கொடுக்க முதலில் முயன்றது அவனே
ஆனால் விவிலி என்றால் அந்நிய சாயல் உண்டு, இந்தியாவில் வேதநெறிகள் இருப்பதால், அதற்கு ஆகமங்களும் வேத நாதங்களும் இருப்பதால் நாம் பைபிளை வேதநூல் என்றுதான் சொல்லவேண்டும் , கிறிஸ்துவத்தை வேதம் என்றுதான் பரப்ப வேண்டும் அதற்கு இதை “வேத ஆகமம்”” என சொல்லவேண்டும் என வீரமாமுனிவர் போன்றோர் வலியுறுத்தினர்
இதற்குத்தான் தமிழ்படித்தான் அந்த ஜோசப் கான்ஸ்டான்டைன் பெஸ்கி எனும் இத்தாலியன்
எவ்வளவு பெரும் அட்டகாசம்? இந்துக்களின் பூமிக்கு வந்து அவர்களின் வேத நூலுக்கு போட்டியாக நாங்களும் வேதநூல் தயாரிகின்றோம் என்றால் இந்துக்கள் எந்த அளவு வஞ்சிக்கபட்டிருக்கின்றார்கள்?
இதே கோஷ்டி வேறுமதங்களுக்கு எதிராக அவர்கள் நூல் சாயலில் பேசமுடியுமா விடுவார்களா? இந்துக்கள்தான் ஏமாளிகள்
அந்த பைபிளை முழுவதும் தமிழ்படுத்த பேர்சிவலுக்கு நாவலர் உதவினார், உதவிய பின்புதான் அது “வேத புத்தகம்” ஆனதை உணர்ந்து வருந்தினார், மெல்ல மெல்ல சூழ்ச்சி விளங்கிற்று
அந்த நொடியில்தான் அவர் சிந்தித்தார் இனி இந்து நூல்களை அச்சுக்கு ஏற்றாவிட்டால் சைவம் அழியும், வேத தர்மமே ஒழியும் இனி விட கூடாது
உடனே செயலில் இறங்கினார், அச்சு எந்திரம் வாங்கி அச்சாலை நிறுவினார் ” வித்தியானு பாலன யந்திரசாலை” என பெயரிட்டார், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் ஓடி ஓடி அலைந்து சைவ நூல்களை அச்சுக்கு கொண்டுவந்தார்
அவர் அச்சு எந்திரம் வாங்கிய வரலாறு உருக்கமானது
சைவ வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார், கையில் பணமில்லை
சைவ பாட நூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்தார் அவரின் தமிழ் புலமையின் அசந்து போன ஆதீனம் அவருக்கு அச்சு எந்திரம் வாங்க உதவி செய்தது, சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
எந்த அளவு சைவம் காக்க துணிந்தர் என்றால், தாம் புரிந்த பதவியையும் உதறித் தள்ளினார். திருமணமும் செய்து கொள்ளவில்லை.
பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டார். நாயன்மார்களி வாரிசுகளில் ஒருவராக தன்னை அர்பணித்து கொண்டார்
இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்தார்.
இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதி குவித்தார்
16 தமிழ் சைவ நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருமுருகாற்றுப்படை முதலான இலக்கியங்களை அச்சில் முதலில் கொடுத்தவர் அவரே
ஆம் வெறும் பாடல் என்றால் இனிவரும் தமிழனுக்கு புரியாது என உணர்ந்து விளக்கமும் அதற்கு தகுந்த எடுத்துகாட்டுகளும் கொடுத்தவர் அவரே
ஆங்கில நூல்கள் பதிக்கப்படுவதைப் போன்றே உள்ளடக்கம், பொருள் அடைவு, பாடவேறுபாடு, அடிக்குறிப்பு ஆகிய பகுதிகளோடு சிறப்பாகப் பதிப்புச் செய்தார். பதிப்புப்பணியில் இன்று இருக்கும் எல்லா நுணுக்கங்களை அவர்தான் கொடுத்தார்
தமிழ் உரைநடை இவருக்கு முன் கொடும் தமிழ் நடையாக இருந்தது, மிகக் கடினமாக எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது.
ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தற்குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவர்தான். இன்னும் எவ்வளவோ முயற்சிகளுடன் தமிழை எளிமைபடுத்தினார் ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்று அறிஞர்கள் பாராட்டினர்.
தமிழகத்தில் சைவ புரட்சியினை 18ம் நூற்றாண்டில் தொடங்கிவைத்தார், கால்டுவெல் கோஷ்டிகள் இன்னும் போப் கோஷ்டிகளின் மதமாற்றத்தை தடுத்து மிகபெரிய சைவ எழுச்சி அவரால்தான் தொடங்கி வைக்கபட்டது
சிதம்பரத்தில் 1864-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி சைவ வித்தியாசாலையை நிறுவினார். சிதம்பரத்தில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து தமிழையும், சைவத்தையும் கற்பித்தார்.
வெள்ளையன் அறிமுகபடுத்திய கொள்கை மது வழக்கம், இன்றைய இந்திய தமிழக அரசுக்கு அவனேதான் முன்னோடி
தான் ஆளவரும் இடத்தில் மக்கள் குடித்து சீரழிந்து கிடந்தால்தான் தனக்கு நல்லது என அவன் அதை ஆன்ம சுத்தியுடன் செய்தான் அதை 18ம் நூற்றாண்டில் இலங்கையில் செய்தான், அதை இன்று தமிழக அரசு தமிழகத்தில் செய்கின்றது
அன்று இலங்கையில் ஆங்கிலேய அரசு மதுவிற்பனை மூலம் வருவாயைப் பெருக்கிக்கொள்கிறதே என வருந்தினார். ஆறுமுக நாவலர் 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்” எனக் குறிப்பிட்டு சாடி மதுவழக்கம் இந்துதர்மத்தை சைவ வாழ்வினை அழிக்கும் கொடும் வழக்கம் என சாடினார்
இலங்கையின் திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோவில் ஆகிய கோவில்களின் தொன்மைச் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறிப் பராமரிப்பு இன்றி இருந்த ஆலயங்கள் மீண்டும் அமைய வழிவகுத்தார்.
எழுத்து மட்டுமல்ல இவரது முதல் சொற்பொழிவு யாழ்பாண பவண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொற்பொழிவு ஆற்றினார். இவரது பொழிவைக் கேட்டு நிறையப் பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர்.
புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச்சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர்.
அங்ஙனம் மாறிவந்தவர்களுள் கிங்ஸ்பரி என்னும் பெயரைக் கொன்டவரே பின்னாளில் சி.வை.தாமோதரம்பிள்ளை என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்னும் பெருமைக்குரிய இவர் மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசியராகப் பணிபுரிந்து பின்னர், ஆறுமுகம் பிள்ளை போல போல் பதிப்புப்பணியிலும் ஈடுபட்டார்.
ஆறுமுகம் ஏற்றிவைத்த சைவ தீ கொழுந்துவிட்டு எரிந்தது தமிழகத்தில் ஏகபட்ட கழகங்கள் உருவாயின, சைவ சித்தாந்த கழகம் உள்ளிட்ட எவ்வளவோ சைவ கழகங்கள் எழுந்து இந்து எழுச்சியினை கொடுத்தன
அவைதான் ஆறுமுகம் பிள்ளைக்கு “நாவலர்” என பட்டமும் கொடுத்து பணிந்தன. , திருவாடுதுறை ஆதீனமே நாவலர் எனும் பட்டத்தை அவருக்கு வழங்கிற்று, அதன் பின் அவர் பெயர் ஆறுமுக நாவலர் என்றாயிற்று
வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.
குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள்.
அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.
1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.
அவருக்கும் வள்ளலாருக்கும் சில கருத்து வேறுப்பாடுகள் தோன்றின அதை பேசி தீர்க்கவும் வாதிடவும் வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு ஆறுமுக நாவலரும் சென்றார் எனினும் அது சர்ச்சையாயிற்று
அது இந்துக்கள் தங்களுக்குள் அடித்து கொள்ள ஏற்படுத்தபட்ட சதி என்பது பின்னாளில்தான் தெரிந்தது என்றாலும் அன்று வழக்காகி நீதிமன்றம் வரை சென்றது மஞ்சக்குப்பம் நீதிமன்ற வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.
இலங்கையில் அவர் தொடர்ந்து சைவ உழைப்பினை கொட்டினார்
1870-இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சைவத்தின் எதிர்காலம் அறிந்து கவலையுற்ற நாவலர் அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.
(எனினும் இதுதான் பின்னாளைய யாழ்பாண இந்து கல்லூரிக்கு அடிதளமாயிற்று, இன்று அக்கல்லூரி சிறந்த அறிவுநிலை அடையாளமாய் விளங்குகின்றது
அதை கண்டுதான் தமிழக ஆதீனங்களும் மடங்களும் இந்து தனவான்களும் இந்து கல்வி நிலையங்களை உருவாக்கி இந்து அழிவினை மதமாற்றத்தை ஓரளவு தடுத்தனர்)
1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார்.
1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்கினார்
நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று அதே யாழ்பாண வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879-ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டார்
அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
அவர் உண்மையில் ஒரு நாயன்மார், அப்படித்தான் அவரை வரலாறு குறித்த்து கொண்டது
ஒரு காலத்தில் அப்பரும் இன்னும் பலரும் சமணத்துக்கு எதிராக செய்த இந்து எழுச்சியினை கிறிஸ்தவ காலத்தில் தொடங்கி வைத்தது அவர்தான்
ஆனால் தமிழகத்தின் வழமையான ஆயுதமான சாதிவெறியன் எனும் பழி அவர்மேல் விழுந்தது, இன்னும் எவ்வளவோ பழிகளை சுமந்தார்
அந்த சாதியில் பிறந்து சைவத்துக்காய் உழைத்த முத்துராமலிங்க தேவர், வவேசு அய்யர் போன்றோர் மேல் எளிதாக சுமத்தபட்ட சாதிவெறி பட்டம் அவர்மேலும் சுமத்தபட்டது
இன்னும் நுணுக்கமாக அவரின் புத்தக மறுபதிப்புகளில் அவர் சொல்லா கருத்துக்களும் சேர்த்து அவர் விமர்சனத்துக்கு உள்ளாக்கபட்டார்
சமணர் காலத்தில் அப்பர் பட்டபாடுகளுக்கு கொஞ்சமும் குறையாதது அந்த மகான் ஆறுமுக நாவலரின் வாழ்வு
இவர் தொடங்கிவைத்த எழுச்சித்தான் பெரும் சைவ எழுச்சியாக பொங்கிற்று, இதனை முறியடிக்காமல் இனி தங்கள் வேலை நடக்காது என அஞ்சிய சக்திகளின் சில காரியங்களுக்கு பின்புதான் நீதிகட்சி போன்றவை வந்தன
சைவ சிந்தாந்த கழகம் இருந்த இடத்தில் திராவிட கழகம் வந்தது
சைவ கழகமும் இன்னும் பல எழுச்சியும் வெள்ளையன் கால ஊடக பலத்தாலும் திசை திருப்பலாலும் மெல்ல மெல்ல மறைக்கபட்டன
ஆறுமுக நாவலர் பெயரையே மறைக்க திமுகவில் ஒருவருக்கு “நாவலர்” என பட்டம் கொடுத்து அவர்களே மகிழ்ந்தனர்
இன்னும் என்னென்ன சதிகள் எல்லாமோ நடந்தது
ஆயினும் இந்து அமைப்புகளின் எழுச்சி ஒரு பக்கம் நடக்கத்தான் செய்தது, முத்துராமலிங்க தேவர், கிருபானந்தவாரி என நாவலரின் வழியில் காலம் ஒவ்வொருவரை அனுப்பிகொண்டேதான் இருந்தது
தென்னிலங்கையில் இருந்து நாவலர் வந்தது போல வட இந்தியாவில் இருந்தும் விவேகானந்தரின் சீட அமைப்புப்கள் இன்னும் பல இந்து அமைப்புக்கள் வந்து இங்கு இந்து எழுச்சியினை கொடுத்து கொண்டிருக்கின்றன
ஆனாலும் திராவிட எழுச்சியில் இவரை போன்றவர்கள் மறைக்கபட்டார்கள்
கருணாநிதி அரசு அமைத்த தமிழ் அறிஞர்கள் சிலை வரிசையில் வெள்ளையன் கால்டுவெல்லுக்கு இடம் உண்டு ஆனால் தமிழ் நூல்களை அச்சிக்கு கொண்டுவந்த ஆறுமுக நாவலர் சிலை இல்லை
இலங்கையில் அவர் கண்ட கனவுதான் யாழ்பாண இந்து கல்லூரி ஆனால் அதை கொலைகாரன் பேட்டை அளவுக்கு மாற்றிவைத்தான் பிரபாகரன்
தமிழகத்தை திராவிட இயக்கங்கள் நாசமக்கி சைவத்தை அழிக்க நினைத்து ஆறுமுக நாவலரின் பெயர் வராமல் பார்த்து கொண்டதென்றால் இலங்கையில் பிரபாகரன் அதை செய்தான்
விளைவு இங்கு ராமசாமியும் இலங்கையில் பிரபாகரனுமே அடுத்த தலைமுறைக்கு தலைவன் என காட்டபட்டார்கள்
இந்த சதி இன்றளவும் உண்டு, திராவிடம் தமிழ் தேசியம் என சுற்றும் கோஷ்டியெல்லாம் சைவ விரோதிகள் இந்து எதிரிகள் உண்மையில் அவை தமிழுக்கும் எதிரிகள் என்பதுதான் காலம் காட்டும் உண்மை
இன்று ஆறுமுக நாவலரின் பிறந்த நாள்
அந்த கொடும் காலத்தில் , அமெரிக்க கண்டத்தின் பழமையான நாகரீகத்தை ஒழித்து அவர்களை அடையாளமும் வரலாறும் இல்லாதவர்களாக்கி அந்த அறியாமையில் அவர்களை மதமாற்றிய அதே கொடுமை தமிழகத்திலும் அரங்கேற இருந்தது
அதற்கு இந்து ஆலயங்களும் இலக்கியங்களும் தடையாய் இருந்தன, இந்த இரண்டையும் குறிவைத்டு வஞ்சகர்கள் அழிக்க தொடங்கிய காலங்களில் அதை கல்வி, சமத்துவம் இன்னும் என்னவெல்லாம் சொல்லி வஞ்சகமாக செய்த காலங்களில் அந்த சிவபெருமான் இந்த ஞானதூதனை அனுப்பினான்
அந்த ஞானமகன் இங்கு பெரும் காரியங்களை செய்துவிட்டு பிரம்மசாரியாய் வாழ்ந்து சுத்த சைவனாய் வாழ்ந்து இங்கு சைவ ஜோதியினை ஏற்றிவைத்து சென்றான்
பிரபாகரன் பெயரை சொல்லிகொண்டிருக்கும் வரை வட இலங்கையருக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை அவன் ஒரு மேற்குலக அடிமை
என்று ஆறுமுக நாவலரை அந்த இனம் கொண்டாடுமோ அங்கிருந்துதான் அவர்கள் வாழ்வு செழிக்கும் அந்த சிறிய சைவ இனம் தன் பொற்காலத்தை மீட்கும்
தமிழகத்தில் சென்னையிலும் மதுரையிலும் சிதம்பரத்திலும் அவருக்கு சிலைகளும் நினைவாலயங்களும் அவசியம்
அவர் பெயரில் விருதும் இன்னும் பல அடையாளங்களும் அவசியம்
தமிழகத்துக்கு தேவை அரசியல் அல்ல, திமுக எதிர்ப்பும் கைதுகளும் அல்ல, ஊழல் தமிழகத்தின் அன்றாட வாடிக்கையாகிவிட்ட நிலையில் எதுவும் அங்கு பலனளிக்காது
தமிழகம் மாற அங்கு சைவ சித்தாந்த கழகங்கள் உருவாக வேண்டும், இந்து எழுச்சி சைவ எழுச்சியாக கழகங்களும் சங்கமுமாக உருவாக வேண்டும் , அது மெல்ல மெல்ல எழுந்து நிச்சயம் பலனளிக்கும்
வரலாறு சுழலகூடியது, வரலாறே சில முந்தைய அடையாளங்களை காட்டி பாடமும் கொடுக்கும்
அவ்வகையில் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடியாத சூழ்ச்சிகளில், சைவத்துக்கு எதிரான ஒரு வலைபின்னலுக்கு ஏதோதோ முகமூடியும் அடையாளங்களுமிட்டு வரும் சூழ்ச்சிகளில் ஆறுமுக நாவலரும் அவர் காட்டிய வழியுமே அவசர தேவை
அதை செய்ய செய்ய தமிழகம் மெல்ல மெல்ல இந்த மாயைகளில் இருந்து விலகி தன் பழைய பொற்காலத்தை மீட்கும்
இரண்டாம் கால நாயன்மார்களில் முதல் நாயன்மாரான அந்த பெருமகனுக்கு , யாழ்ப்பாண சைவர்களின் தலைமகனுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்தி அவருக்கு ஒவ்வொரு சிவாலயத்திலும் விளக்கு ஏற்றி திருபுராணம் படித்து, சைவம் தளைக்க உறுதியேற்று அஞ்சலி செலுத்துவோம்
அதைவிட என்ன சிறப்பான அஞ்சலி இருந்துவிட முடியும்?

மிகவும்அருமை