ஆளுநர் பதிலடி

ஆளுநரை மாற்றியே தீரவேண்டும் என திமுக வரிந்து கட்டி நிற்கின்றது, பல்கலைகழக துணைவேந்தர் பதவியினை அரசே நிர்வகிக்க வேண்டும் என மல்லுகட்டுகின்றது

ஆளுநரோ அதுபற்றி கொஞ்சமும் கவலைபடாமல் அமைதியாக பதிலடி கொடுக்கின்றார், அப்படியே புதிய கல்வி கொள்கைகளுக்கு எதிரான பேச்சுக்களுக்கும் தன் பாணியில் பதிலடி கொடுக்கின்றார்

பல்கலைகழக துணைவேந்தர்களுக்கான மாநாடு ஒன்றை நடத்தி அதில் நவீன கல்வியின் தேவையினை பக்கம் பக்கமாக விளக்குகின்றார்

கல்வி எப்படி இருக்கவேண்டும், துணைவேந்தர்கள் எப்படி இயங்கவேண்டும் என மேடையிலே பலத்த அறிவுரைகளை வழங்குகின்றார்

தன் உரையின் முடிவில் அவர் சொன்ன விஷயம்தான் ஹைலைட்

காஷ்மீரிலும்,வடகிழக்கிலும் தீவிரவாதம் அதிகம் இருந்தது இப்பொழுது அவை எல்லாம் கட்டுக்குள் வந்து அங்குள்ள மாணவர்கள் நல்ல கல்வி கற்கின்றார்கள்

ஆளுநர் செய்த காரியங்களும் அவர் கடைசியா சொன்னவிஷயமும் சாதாரணம் அல்ல‌

பல்கலைகழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் விட்டுகொடுக்க போவதில்லை என்பது முதல் அடி

கல்வி எப்படி இருக்கவேண்டும் என சொன்னது வீரமணி கும்பலுக்கான பதிலடி

காஷ்மீரிலும் வடகிழக்கிலும் அமைதி திரும்பிற்று என சொன்னது தற்போது தன் வாகன தொடரணி மேல் நடந்த தாக்குதலுக்கான பெரும் எச்சரிக்கை

ஆக ஒரு முடிவோடுதான் இருக்கின்றார் ஆளுநர், வாழ்த்துக்கள்