இதையா இஸ்லாம் போதித்தது?

இலங்கை கொடூர தீவிரவாதியில் ஒருவனுக்கு சிறு குழந்தை இருக்கின்றது

ராணுவம் வளைத்து நிற்கும் பொழுது அவன் மதிகெட்டு தற்கொலை தீவிரவாதியாய் செத்துவிட அக்குழந்தையும் காயம்பட்ட நிலையில் வாப்பா வாப்பா என கதறுகின்றது.

ராணுவம் குறிப்பிட்ட‌ வீட்டிலிருந்து அக்குழந்தையினை மீட்கின்றது,

அக்குழந்தையோ வாப்பா வாப்பா என அழுது என் அப்பாவிடம் என்னை சேர்த்துவிடுங்கள் என மழலையில் கத்துகின்றது

ராணுவம் அக்குழந்தையின் காயத்துக்கு மருந்திடும் பொழுதே வாப்பா வாப்பா என அது மழலையில் கதறுவது இந்த நூற்றாண்டின் உருக்கமான சோக காட்சி

அக்குழந்தைக்கு நடந்தது எதுவும் தெரியாது, புரியவும் செய்யாது

அது குழந்தை அதற்கு மதம் தெரியாது, தீவிரவாதம் தெரியாது, கடவுளுக்கு அதை தெரியுமே அன்றி அதற்கு கடவுள் தெரியாது.

தெரிந்ததெல்லாம் தந்தையும் குடும்பமும் அந்த மகிழ்ச்சியுமே

தன் தந்தை ஒருவனே தனக்கு பாதுகாப்பு எனவும், ராணுவம் தன்னை தூக்கி செல்கின்றது எனவும் அஞ்சி கத்துகின்றது.

இலங்கையர் எல்லோரும் கண்ணீர் சிந்தும் காட்சி அது ராணுவத்தார் உட்பட‌

பெற்ற குழந்தையினை தவிக்க விட்டு அவன் என்ன இஸ்லாமிய தியாகம் புரிந்தானோ தெரியவில்லை, அந்த அளவு மதிகெட்டிருகின்றான்

வரும் காலத்தில் உண்மை தெரியும் பொழுது இக்குழந்தை எவ்வளவு மனசிக்கலுக்கு ஆளாகும்?

மிக மிக கவனமாக வளர்க்கவேண்டிய குழந்தை இது, இது சந்திக்கபோகும் வலி கொஞ்சம் அல்ல‌

இதையா இஸ்லாம் போதித்தது?

அக்குழந்தையின் அழுகுரல் இலங்கையினை மட்டுமல்ல உலகையே உலுக்கிகொண்டிருக்கின்றது.

“வாப்பா.. வாப்பா” என்ற கதறல், சிலுவையில் “இயேசு என் தந்தையே.. என் தந்தையே” என கத்திய அந்த வலிக்கு ஈடானது.