இந்தியாவின் முதல் பெண் உரிமை போராளி மோகன்ராய்

Image may contain: 1 person, standing, hat and text

வெள்ளையர்தான் காட்டுமிராண்டிகளான இந்தியரை மனிதராக்கினர், வெள்ளையர்தான் இங்கு உடன்கட்டை ஏறும் கொடுமையினை, விதவை மறுமணம், குழந்தை திருமணம் தடுத்தது என்றெல்லாம் பேசி கொண்டிருக்கின்றார்கள்

அப்படி ஒரு கருத்து இங்கு நிறுத்தபட்டிருக்கின்றது, அது முழுக்க சரியானதல்ல , பிராமணரிலும் பல நல்ல வழிகாட்டிகள் இருந்தார்கள்

பிராமண கட்டுப்பாடு என அதை சொல்வதும் சரியல்ல, அக்கால இந்திய‌ பழக்கவழக்கம் அப்படி இருந்தது. பின்னாளில் அதை ஒழிக்க வந்ததும் பிராமணரே. அப்படி ஒருவர் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க வந்தார்

அவர் பெயர் ராஜாராம் மோகன் ராய், வங்க பிறப்பு

அவர் அக்காலத்திலே படித்திருந்தார். இந்துக்களின் மூடபழக்கங்களை கூட சாடினார்

தீண்டாமை என்பது மதம் சொல்வதன்று, மாறாக ஏதோ ஒரு கொள்ளை நோய்காலத்தில் தொட்டால் நோய்வரும் என பாதுகாப்பிற்காக இருந்த விஷயம் பின் மூடநம்பிக்கையாயிற்று என்று கூட சொல்லியிருந்தார், ஆனால் கேட்கத்தான் யாருமில்லை

(இன்று நிபா வைரஸ் பரவுகின்றது. அப்பகுதியில் உள்ளோர் எவ்வளவு சுத்தபத்தமாக இருப்பார்கள் என்பது சொல்ல வேண்டியதில்லை,

கொள்ளை நோய்காலங்களில் இதை உலகெங்கும் காணலாம், நோயாளிகள் தொட்டதையோ இல்லை அவர்கள் அருகிலோ செல்லமாட்டார்கள், அவ்வளவு பயம்

மருத்துவ உலகம் முன்னேறிவிட்ட காலத்திலே இப்படி என்றால் காரணம் தெரியா காலம் எப்படி இருந்திருக்கும்?

இப்படி அன்றே எங்கோ தொடங்கிய விஷயம் பின் தீண்டாமை ஆயிற்று, பின் பல காரணங்கள் கற்பிக்கபட்டு அது திசைமாறி வளர்ந்தது)

தீண்டாமை போன்ற கொடிய விஷயம் இதெல்லாம் மாற்றபடவேண்டும் என சொன்னார்

அக்காலத்தில் அது யார் செவிக்கும் ஏறவில்லை, மாறாக அதைவிட கொடிய விஷயம் இருந்தது

அது கணவன் செத்துவிட்டால் மனைவியினை வலுகட்டாயமக தூக்கி தீயில் போடுவது

இப்பழக்கத்தின் மூலம் எது என பார்த்தால் பல விஷயங்கள் வருகின்றன. அக்காலத்தில் கணவன் செத்தால் பாசமிகு பெண்கள் உடனே செத்துவிடுவார்களாம், குறிப்பாக போரில் கணவன் கொல்லபட்டால் எதிரிக்கு அஞ்சி கணவனுடனே அப்பெண்ணும் மரிப்பாளாம்

இவை எல்லாம் பின்னால் வலுகட்டாய நிகழ்வாகி பெரும் கொடுமையாய் இருந்தன‌

ராஜாராம் மோகன்ராய் இதனைத்தான் மாற்ற விரும்பினார், பிரம்ம சமாஜம் எனும் அமைப்பினை ஏற்படுத்தி பல மத கருத்துக்களை விவாதித்தார்

அப்படி அவர்கள் எடுத்த முடிவுதான் உடன் கட்டை ஏறும் கொடுமையினை தடுப்பது என்பது

அப்பொழுது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அதன் கவர்னர் வில்லியம் பென்டிக் என்பவரிடம் இந்த சீர்திருத்ததை 1830 சொன்னார்கள், அந்த அரசும் ஏற்றுகொண்டது, சதியினை தடை செய்தது

பின் 1857ல் அது பிரிட்டன் அரசின் சட்டமாயிற்று

கவனியுங்கள் வெள்ளையன் இங்கு ஆண்டானே தவிர இங்குள்ள கலாச்சாரம் பற்றியோ, மக்கள் அந்த பழக்கத்தால் சாவது பற்றியோ கவலையே படவில்லை அவனுக்கு தேவை வரி

அப்படித்தான் இருந்தது ஆட்சி, இங்குள்ள இந்துக்கள்தான் சீர்திருத்ததை சொல்லிகொடுத்தார்கள் அவன் சட்டமாக்கினான்

இங்கு இந்துமத காட்டுமிராண்டி தனங்களை அவர்களில் சிலரே சரி செய்தார்கள். பிராமண கொடுமை என திட்டலாம், ஆனால் அக்கொடுமைக்கு முடிவு கட்டியது பிராமணரே என்பதை மறைப்பது சரியல்ல‌

இது போக குழந்தை திருமணத்தை தடுப்பதிலும் முழு வேகம் காட்டியவர் மோகன் ராய்

இன்று அவரின் பிறந்த நாள்

இந்திய வரலாற்றில் மிக பெரும் சீர்திருத்தவாதியும், உடன்கட்டை ஏறுதல் எனும் கொடிய வழக்கத்தை தடுத்தவர் என்றமுறையில் இந்திய வரலாற்றில் அவருக்கு எக்காலமும் இடமுண்டு

கணவனை இழந்த பெண்ணும் வாழவேண்டும், இந்து பெண்கள் முக்காடு இட்டு அடிமைபோல் இருப்பதை தடுக்க வேண்டும், பெண் குழந்தைகள் சிறுவயதி திருமணத்தை தடை செய்ய வேண்டும் என அவர் உழைத்தது கொஞ்சமல்ல‌

நவீன இந்தியாவின் முதல் பெண் உரிமை போராளி நிச்சயமாக மோகன்ராய்தான்

ஆனால் இதுபற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள். கடவுளே பிறந்தாலும் பிராமணன் என்றால் பேசகூடாது என்பது இங்குள்ள நியதி , அவர்களை விடுங்கள்

இந்தியாவின் முதல் சீர்திருத்தவாதியாக இடம்பெற்ற, நவீன கால இந்தியாவிற்கு முதலில் வழிசொன்ன அந்த மோகன்ராயினை அவர் பிறந்தாளில் நினைவு கூறலாம்