இந்திய சுதந்திர போராட்ட வரலாறு: 10

1857ல் எல்லா இந்திய மன்னர்களையும் அடக்கி அல்லது ஒப்பந்தமிட்டு கையினை கட்டிபோட்டு ஆளதொடங்கினான் வெள்ளையன், அந்த சூழல் இந்தியருக்கு புதியது

அதுவரை மன்னர்களே ஆண்டு மன்னர்களே சண்டையிட்டு மன்னர்களே வழிநடத்திய இந்திய கண்டத்தில் ஆட்சி அன்னியன் அதுவும் இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லா ஐரோப்பியன் வசம் சென்றிருப்பதும் இந்திய மன்னர்களெல்லாம் அடக்கபட்டிருப்பதும் பெரும் குழப்பத்தை கொடுத்தன‌

பல யுகங்களாக மன்னர்களால் வழிநடத்தபட்ட இந்தியர்களால் இனி என்ன செய்துவிடமுடியும், இனி நம்மை அசைக்கமுடியாது என மமதையில் இருந்தான் பிரிட்டிஷ்காரன்

இனி எக்காலமும் இந்தியா மீளமுடியாதபடி குழம்பி தன் காலை சுற்றவேண்டும் என்ற வஞ்சகத்தில் அவன் முதலில் கைவைத்தது இந்து உணர்வு, இந்து நம்பிக்கை, இந்துக்களின் வாழ்வியலிலே

ஒருவனிடம் இருக்கும் வைரத்தை பறிக்கவேண்டுமானால் அதை அவன் வீசி எறியவேண்டுமானால் அது வைரம் இல்லை என பழிக்கவேண்டும், உனக்கு ஒன்றுமே தெரியவில்லை என முட்டாளாக்க வேண்டும் அதைத்தான் இந்துமதம் மேலும் இந்துக்கள் மேலும் வீசினான் வெள்ளையன்

தான் நாகரீகமானவன் அறிவாளி என்றும் இந்துக்களும் இந்தியர்களும் முட்டாள்கள் என்றும் கருத்தை பரப்பினான் , அரைபிடி மிளகுக்கு அவன் கையேந்திவந்த பழைய வரலாற்றையெல்லாம் மறைத்தான்

ஆனால் இந்துஸ்தானம் மெல்ல தான் யாரென காட்டிற்று

மன்னர்கள் இல்லை இம்மக்களுக்கு இனி யாருமில்லை என வெள்ளையன் போட்ட சதிகளை ஒவ்வொருவருராக உடைக்க கிளம்பினார்கள், முதலில் அதனை தொடங்கி வைத்தது தாதாபாய் நவுரோஜி

அவர்தான் வெள்ளையன் செய்யும் சுரண்டலை முதலில் சொன்னார், அவர் பார்சி வம்சம் அப்பொழுதே தொழிலதிபரும் பொருளாதாரமேதையுமாய் இருந்தார், அவரை லண்டனின் இந்திய பிரதிநியாக வெள்ளையன் வைத்திருந்தான்

“அவர்தான் சொன்னார் ஒவ்வொரு இந்தியனுக்கும் வரவேண்டிய மாதம் 20 ரூபாயினை வெள்ளையன் பறித்து செல்கின்றான்”

1870களில் இருபது ரூபாய் என்பது இன்று பல லட்சங்களுக்கு சமம், எவ்வாறான கொள்ளையில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டுள்ளது என முதலில் சொன்னவர் அவர்தான்

அது உலகமே மக்களாட்சிக்கும் புரட்சிக்கும் மாறிகொண்டிருந்த காலம், மானிட உரிமை அடிமை ஒழிப்பு என உலகம் புதுகோலம் கொண்ட காலம் என்பதால் பல கேள்விகளுக்கு வெள்ளையன் பதில் சொல்லும் கட்டாயத்தில் இருந்தான்

தாதாபாய் நவுரோஜிதான் முதலில் வெள்ளையன் சுரண்டலை எதிர்த்தவர் தொடர்ந்து கோலார் தங்கம் என்னாயிற்று, இந்த பணம் என்னாயிற்று என கேள்வி மேல் கேள்விகள் எழுந்தன‌

நவ்ரோஜி அத்தோடுவிடவில்லை இந்தியரின் குரலை ஒருமித்து சொல்ல ஒரு அமைப்பு அவசியம் என உணர்ந்தார், அங்கு இணைந்த வெள்ளையன் விக்டர் ஹூயும் என்பவன் இந்திய காங்கிரஸை தொடங்கினான்

1885ல் அது தொடங்கபட்டது

மெல்ல மெல்ல இந்தியர்கள் விழித்து கொண்டனர், அரசன் இல்லாவிட்டால் என்ன நாங்கள் எங்கள் நாட்டுக்காய் போராடுவோம் என ஒவ்வொருவரும் கிளம்பினார்கள்

பாலகங்காதர திலகர் அதில் முக்கியமானவர் அவருடன் லஜபதி ராய் பிபின் சந்திரபால் ஆகியோரும் அணிதிரண்டார்கள்

வங்கமும் பஞ்சாபும் போராட்டத்தில் முன்னிலையில் இருந்தன அதோடு தமிழகமும் சேர்ந்து கொண்டது

தேசமெங்கும் பெரும் அணல் அடிக்க ஆரம்பித்தது, திலரின் பத்திரிகைகள் சுதேசமித்திரன் போன்றவையும் அணல் கக்க்கின‌

நிலமையினை கண்ணுற்ற வெள்ளையன் ஒரு தந்திரம் செய்தான் அதன்படி எந்த சுல்தான்களை எதிர்த்து இந்தியர்கள் வாளேந்தினார்களோ அவர்களும் இந்துக்களும் ஒரே அணிக்கு வரும்படி செய்தான்

அதாவது இது எங்கள் நாடு என இந்துக்கள் சொல்லி போராடியகாலம் மாறி இது நம்நாடு என சுல்தான்களும் தேசத்துக்கு சொந்தம் கொண்டாட தொடங்கினர், அந்நேரம் இந்துக்களுக்கும் வேறுவழி தெரியவில்லை

தேசம் தன் இலக்கைவிட்டு விலகியது இங்குதான் என்றாலும் அவர்கள் நோக்கம் வெள்ளையனை எதிர்ப்பதாக மட்டும் இருந்தது

காலம் யார் யாரையோ கொடுத்தது, பாரதி முதல் பலர் வந்தார்கள்

இந்துக்களிலும் ராஜாராம் மோகன்ராய் முதல் பலர் எழுந்தார்கள் இந்து சமூகம் தன் குறைகளை தானே சீர்படுத்த தொடங்கிற்று, உச்சமாக ஞானஜோதியாய் விவேகானந்தர் எழும்பினார்

இந்துமதத்தின் உயர்வுகளை பெருமைகளை அவர் போதிக்க போதிக்க பெரும் உத்வேகம் இந்துக்களிடம் வந்தது

வெள்ளையனின் மிஷனரிகளின் பள்ளிக்கும்மதமாற்றத்துக்கும் இந்துக்களும் கடும் சவால் கொடுத்தனர், இந்து பள்ளிகளும் கல்லூரிகளும் எழும்பி இந்துமதத்தை காத்தன‌

பெரும் புரட்சி நாடெங்கும் நடந்தது, பெரும் விழிப்புணர்வு மெலோங்கிற்று

1900க்கு பின் உலக நிலமைகள் மாறின , பிரிட்டனின் எதிரி நாடாக அறியபட்ட ஜெர்மனியுடன் இந்தியர்கள் இணைந்தனர் உலகளாவில் பெரும் உதவிகளை இந்தியாவுக்கு கொண்டுவந்தனர், ஐரோப்பாவிலே பிரிட்டனுக்கு எதிர்ப்புகள் பெருகுமாறு இந்தியர் பார்த்து கொண்டனர்

1905ல் ஒரு வரலாற்று புரட்சி நடந்தது, ஆசிய குட்டிநாடான ஜப்பான் பெரும் நாடான ரஷ்யாவினை தோற்கடித்திருந்தது, உலகளவில் பெரும் கவனத்தை அது பெற்றது

இந்தியாவிலும் அது பெரும் நம்பிக்கை கொடுக்க பிரிட்டிஷார் தன் நரிதந்திரத்தை அரங்கேற்றினார்கள், பழைய இந்துக்களுக்கும் சுல்தான்களுக்குமான போருக்கு அடுத்தவடிவம் கொடுத்தார்கள்

முஸ்லீம் லீக் எனும் அமைப்பு உருவாகி இந்நாட்டில் ஆப்கானிய நவாபுகளுக்கும் உரிமை உண்டு என பேச ஆரம்பித்தது, தொடக்கத்தில் யாரும் அதை பெரிதாக கருதவில்லை

ஆனால் கர்சன் அந்த நோக்கில் வங்கத்தை இரண்டாக பிரித்தான், அப்பொழுதும் அதாவது 1900களிலும் வெள்ளையன் தலைநகராக கல்கத்தாவே நீடித்தது, தன் காலடியில் இந்து முஸ்லீம் அளவை வைத்து வங்கத்தை இரண்டாக பிரித்தான் கர்சன்

ஆனால் தேசம் பொங்கிற்று பெரும் புரட்சியும் கலவரமும் வெடித்தன, அதிலும் குதிராம் போஸ் எனும் 16 வயது சிறுவனை வெள்ளையன் தூக்கிலிட்டபொழுது நாடெங்கும் புரட்சி வெடித்தது

அஞ்சினான் வெள்ளையன் ஆனாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினான், இந்திய மக்களின் கோபம் இன்னும் கூடிற்று

அப்பொழுது மிகபெரிய கொதிநிலையினை தேசம் எட்டிற்று

மேடம் காமா ஜெர்மனியில் இந்தியாவின் கொடியினை அறிமுகபடுத்தினார், அதுவரை இந்தியருக்கு கொடி இல்லை

ஒரு பக்கம் வ.உ.சி போன்றோர் கப்பல் விட்டனர், தேசமெங்கும் பெரும் தேசவிடுதலை எழுச்சி 1910களிலே வந்தது

ஆனாலும் தன் வழமையான தந்திரத்தால் எல்லாவற்றையும் வெள்ளையன் சமாளித்தானே தவிர எதையும் முழுமையாக களைய அவனால் முடியவில்லை

1911ல் பிரிட்டிஷ் மன்னன் இந்தியா வர இருந்தபொழுது ஆங்கில கலெக்டரையே கொன்று அதிரவைத்தான் வாஞ்சிநாதன்

இன்னும் தேசமெங்கும் சந்திரசேகர ஆசாத், இன்னும் பலர் வன்முறை பாதையில் இறங்கினர், பெரும் கொலையும் கொள்ளையும் ஆங்கிலேயருக்கு எதிராய் நிகழ்த்தபட்டன‌

ஆனால் தன் கைகூலிகள் சிறந்த உளவுபடை மூலம் எதிர்ப்புகளை வெள்ளையன் முறியடித்து வந்து கொண்டே இருந்தான், மக்களை சமாளிக்க இந்தியாவுக்கு பல சலுகைகளை அறிவிக்கும் அவசியமும் அவனுக்கு வந்தது

அந்நேரம் உலக காலநிலை மாறிற்று, முதல் உலகப்போர் 1914ல் தொடங்கிற்று, அந்த காலம் பெரும் எதிர்ப்பினை இந்தியராலும் கொடுக்கமுடியவில்லை ஆனால் போராடிகொண்டே இருந்தார்கள்

சென்பகராமன் போன்றோர் சென்னையின் வெள்ளையன் கோட்டைவரை ஜெர்மன் கப்பலில் வந்துதாக்கியது அப்பொழுதுதான், “ஜெய்ஹிந்த்” என அவர் முழங்கியதும் அப்பொழுதுதான்

முதல் உலகபோரின் முடிவில் ஒரு உண்மை உலகுக்கு தெரிந்தது, ஆம் அதுவரை எதிரியே இல்லா பிரிட்டனுக்கு சரிநிகர் சக்தியாக அமெரிக்கா எழும்பிற்று என்பது அது

ஐரோப்பாவிலும் பலத்தமாற்றங்கள் வந்தன, ஆட்டோமன் துருக்கிய சாம்ராஜ்யம் முடிவுற்றது இன்னும் பல விஷயங்கள் முறிந்தன‌

1920களை உலகம் எட்டியபொழுது பெரும் ஆபத்து உலகை மிரட்டியது அது கம்யூனிசம்

இந்தியா போன்ற நாடுகளில் கம்யூனிசம் வளரும் சாத்தியம் உண்டு என்பதால் வெள்ளையன் அஞ்சினான், ஒருவகையில் முதல் உலகபோருக்கு முன்பே இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை அவன் தன் அடக்குமுறையாலும் தந்திரத்தாலும் முறியடித்திருந்தான்

சாவர்க்கர் போன்றோரை முதலிலே ஒடுக்கியது அப்படித்தான்

திலகர் முதல் வ.உ.சி வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மாசாரி என எல்லோரையும் அடக்கிய வெள்ளையன் புரட்சி குழுக்கள் விடுதலை குழுக்கள் உருவாகாமல் பார்த்து கொண்டான்

ஆனால் 1920களில் உலகளாவிய தாக்கம் வரும்பொழுது சோவியத் தாக்கம் இந்தியாவில் வராமல் இருக்க அவனுக்கு சில நாடகங்கள் தேவைபட்டன‌

முதலாவது இந்தியருக்கு சில உரிமைகள் கொடுப்பது போல் காட்டிகொள்வது, அப்படியே புரட்சி விடுதலைஎன யாரும் எழும்பினால் நசுக்குவது

முதலாவது விஷயத்துக்கு மாண்டெகு செம்ஸ்போர்டு அறிக்கை, உள்ளாட்சி தேர்தல் என பலமுகம் காட்டிவிட்டு இன்னொரு பக்கம் ரவுலட் சட்டம் போன்றவற்றை கொண்டுவந்தான்

இந்த காலகட்டத்தில்தான் தனக்கு ஆபத்தே இல்லா ஒரு குழப்பமான மனிதரை இந்தியாவில் அனுமதித்தான் வெள்ளையன் அவர் பெயர் காந்தி

அவர் தென்னாப்ரிக்காவில் சில உரிமைகளை பெற்றுகொடுத்தார், தனி நாட்டையோ சுதந்திர தென்னாபிரிக்காவினையோ அவர் அடையவில்லை, ஒரு சில போராட்டங்களை நடத்தினார், உற்பத்தி பாதிக்கபட்ட வெள்ளையன் சில உரிமைகளை வியாபார நலனுக்காக அனுமதித்தான்

அவ்வளவுதான் தென்னாப்ரிக்காவில் நடந்ததே தவிர காந்தி பெரும் வெற்றி எதையும் பெறவில்லை

ஆனால் காந்தி ஏதோ சாதித்ததை போல வெள்ளையன் தன் கைகூலிகளால் பெரும் பிம்பத்தை பரப்பிவிட்டான் காந்தியும் இந்தியா வந்தார் அது 1917ம் ஆண்டாக இருக்கலாம்

அப்பொழுது யாரும் காந்தியினை கண்டுகொள்ளவில்லை

இந்நிலையில் 1919ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது, இன்னும் என்னவெல்லாமோ நிகழ்ந்தது, பகத்சிங் போன்றோர் தூக்கிலிடபட்டும் காந்தி கொஞ்சமும் அசையவில்லை

எல்லோரும் ஒடுக்கபட்டபின் போராட்டம் காந்தி கைக்கு வந்தது, காந்தி ஒரு மடாதிபதிக்குரிய குணங்களை கொண்டிருந்தார் அவர் நாட்டின் தலைவருக்குரிய குணங்களை கொண்டிருக்கவில்லை

அஹிம்சா, சத்தியாகிரகம் என என்னவெல்லமோ செய்து மக்களை திசைதிருப்பினார், நிறைய இழந்திருந்த இந்தியர்களும் அவரை நம்பினார்கள்

ஆனால் அவரின் போக்கு முதலிலே தெரிந்தது, வெள்ளையன் இன்னும் பல கைகூலிகளை ஏவிவிட்டான்

அதுவரை ஒலிக்கா குரல்களான சாதிவெறி இந்தியா, தலித் இந்தியா, அடக்குமுறை மனுதர்மம் என என்னவெல்லாமோ கேட்க தொடங்கின, புது புதுகுழபப்மெல்லாம் வர ஆரம்பித்தது

இந்துமதம் பெரும் சவாலை சந்தித்த நேரம் இந்துக்கள் இந்துமகாசபை என ஒன்றை தொடங்கி மதம் காக்க முயன்றனர், அதுவும் கொஞ்சம் பலனை கொடுத்தது

அடுத்த 18 ஆண்டுகளுக்கு போராட்டம் காந்தியின் கையிலே இருந்தது , காந்தி வெள்ளையனுக்கும் வலிக்காமல் சுதந்திரமும் கேட்காமல் ஏதோ குழப்பிகொண்டிருந்தார்

1930களை உலகம் எட்டும்பொழுது அடுத்த போருக்கு உலகம் தயாராவது தெரிந்தது, நேதாஜி போன்றோர் அதை பயன்படுத்தி சுதந்திரம் வாங்கலாம் என்றபொழுது காந்தி மறுத்தார் நேதாஜி தன் வழியில் பயணித்தார்

1940களில் உலகை ஒருவன் தனிமனிதனாக மிரட்ட ஆரம்பித்தான், அவன் பெயரை கேட்டால் உலகமே அஞ்சி ஒடுங்கிற்று, பிரிட்டனை தன் ஜென்ம பகையாக கருதிய அவன் ஐரோப்பாவில் ஆட ஆரம்பித்தான்

சுருக்கமாக சொன்னால் பிரிட்டனின் ஆணிவேரை அவன் அறுக்க ஆரம்பித்தான் அவன் பெயர் ஹிட்லர்

ஹிட்லரின் வெறிதனமான அடியில் மேற்குலகம் சீர்குலைந்தது , இன்னொரு பக்கம் ஜப்பான் நேதாஜியுடன் இந்திய எல்லைக்கே வந்து கொண்டிருந்தது

அதுவரை “வெள்ளையனை வெளியேறு” என சொல்லாத காந்தி,அப்பொழுதுதான் ஆரம்பித்தார்

அதுவரை அவர் பெறாத வெற்றிகளை வெள்ளையனே வெளியேறு போராட்டம் பெற காரணம் அப்பொழுது எழுந்திருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம்

ஆர்.எஸ்.எஸ் இயக்க கொள்கை கலாச்சாரம் நாட்டுபற்று என இருந்தது, அவர்கள் பெரும் போராட்டத்தில் குதிக்கவில்லை என்றாலும் நாடுதழுவிய பெரும் புரட்சிக்கு தயாரானார்கள், அந்த புரட்சிக்கான ஒத்திகையாய் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை பயன்படுத்தினார்கள்

அந்த போராட்டத்தின் வீரியம் அதிகம், வெள்ளையனே காந்தியினை மாளிகை சிறையில் வைத்தான், வழக்கம் போல் வெளியிலும் விட்டான்

1945களில் பிரிட்டன் பெரிதும் உலக அளவில் மதிப்பினை இழந்தது

அமெரிக்கா, சோவியத் என இருபெரும் சக்திகள் வளர்ந்திருந்தன, ஹிட்லர் அடித்த அடியில் பிரிட்டனின் பொருளாதாரம் சரிந்தது, பிரிட்டனின் செல்வாக்கை அமெரிக்கா தட்டி சென்றது

இனியும் சுமார் 70 நாடுகளை கட்டிமேய்க்கும் வல்லமைதனக்கு இல்லை என்பதை உணர்ந்த பிரிட்டன் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தது

ஆனால் இந்தியாவின் வளமும் வரியும் அவன் முழுக்க அறிந்திருந்ததால் இந்தியாவினை அப்படியே விட்டுசெல்ல அவன் விரும்பவில்லை, ஒரே வருடத்தில் இந்தியா பெரும் பலமாகும் என அஞ்சினான் அதுபோக அவன் நாட்டினரின் சொத்துக்களும் ஆலைகளும் இங்கு நிரம்ப இருந்தன‌

இதனால் செல்லுமுன் பழைய மோதலை அதவாது எந்த அடிப்படையில் இந்நாட்டை பிடித்தானோ அதே சூழலை உருவாகிவிட்டு செல்ல முடிவு செய்தான்

ஜின்னா அதற்கு கைகூலியானான், காந்தியும் நேருவும் இன்னொரு பக்கம் கைகூலியானார்கள். பட்டேலும் சாஸ்திரியும் சூழல் கைதிகளானார்கள்

இது எங்கள் இந்துநாடு என 700 ஆண்டுகளாக இந்துக்கள் போராடிய போராட்டம் இப்பொழுது இது நம் நாடு என இந்துக்களுக்கும் ஆப்கானிய வாரிசுகளுக்கும் மோதிற்று, அப்படி அந்த சுதந்திரபோர் திசைமாறிற்று

அதனை தடுக்கும் சக்தி நேதாஜிக்கு இருந்தது, அவர் வந்திருந்தால் அந்த பிரிவினை நடந்திருக்காது, அவர் வராமல் போனது துரதிருஷ்டம்

முழு இந்துஸ்தானமும் இந்துக்களுக்கு என முடிந்திருக்கவேண்டிய போராட்டம் வெள்ளையனால் நாட்டின் ஒரு பகுதி இஸ்லாமியருக்கு என பிரித்து கொடுக்கபட்டது

காந்தியும் நேருவும் அந்த வஞ்சகத்துக்கு துணைபோனார்கள்

எனினும் கண்ணீரை துடைத்தபடி இனியாவது இந்துக்கள் நாடு அமையும் என சுமார் 850 ஆண்டுகாலம் போராடிய இந்துக்களுக்கு “இதுமதசார்பற்ற நாடு” என அதிர்ச்சி கொடுத்தது நேருவின் காங்கிரஸ் அரசு

உண்மையில் அது இந்துக்களுக்கு நிகழ்ந்த பெரும் கொடுமை, அப்பக்கம் பாகிஸ்தான் எனும் திடீர் இஸ்லாமிய நாடு உருவாயிற்று என்றால் இப்பக்கம் இந்துநாடுதான் இயல்பாக அமைய வேண்டும்

ஆனால் நேரு எனும் கைகூலி அதை விரும்பவில்லை, இந்தியாவில் இருந்து இஸ்லாமியர் பத்திரமாக பாகிஸ்தான்களுக்கு அனுப்பபட அங்கிருக்கும் இந்துக்களின் நிலை பெரும் பாதகமானது, பூமியின் எல்லா சித்திரவதைகளையும் அனுபவித்தார்கள்

அப்பொழுதுதான் அந்த கூட்டம் வெள்ளையனுக்கு அஞ்சி அடங்கியிருந்ததே தவிர எக்காலமும் இந்துக்களையும் இந்துமதத்தையும் மனதார வெறுத்த கூட்டம் என்பதே இந்துக்களுக்கு புரிந்தது

இரு தனிதேசம் கொடுத்தும் அவர்கள் காட்டிய வன்மம் ஆப்கானிய ரத்தத்தின் தொடர்ச்சி என்பதை உணர்ந்த தேசம் காந்தியிடம் கண்ணீர்விட்டது

ஆனால் காந்தி எதையும் புரிந்துகொள்ளும் நிலையில் தொடக்கத்தில் இருந்தே இல்லை, அதன் விலையாக அவர் உயிரையும் கொடுத்தார்

அவரின் கொலையினை காட்டி இந்து எழுச்சி ஒடுக்கபட்டாலும் காங்கிரஸின் இந்து வெறுப்பும் போலி நாட்டுபற்றும் காலத்தால் மக்களுக்கு தெரிந்தன‌

தேசம் கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்து 1990க்கு பின் மெல்ல விழித்தது, இப்பொழுது இந்துநாடாக தன்னை மாற்றி கொண்டிருக்கின்றது

1100களில் பிருத்விரஜன் தொடங்கிய போராட்டம் 1947ல் உடைந்த சுதந்திர இந்தியாவாக மலர்ந்தாலும் அதில் கறை இருந்தது

2014க்கு பின்பே சுத்தமான இந்தியாவாக இந்து இந்தியாவாக அது மாறிகொண்டிருக்கின்றது, இப்பொழுதுதான் ராமர் கோவிலும் இன்னும் பலவும் எழும்பி காஷ்மீரும் இந்திய பகுதியாயிற்று

இன்னும் பூரண சுதந்திரத்தை அடைந்துவிட்டோமா என்றால் இல்லை, என்று இந்நாடு பூரண இந்துகுடியரசு என அறிவிக்கபடுமோ அதுவரை போராட்டம் தொடரும்

அவ்வகையில் ஆப்கானியரோடும், வெள்ளையனோடும் போராடி மீண்ட இந்துஸ்தானம் இப்பொழுது வெள்ளையனின் கைகூலிகளுடனும் அவன் வளர்த்துவிட்ட மர்ம சக்திகளுடனும் கடைசிபோரில் ஈடுபட்டுள்ளது

இப்போரிலும் வெற்றிமுகம் காட்டும் இந்தியா விரைவில் பூரண சுதந்திரத்தை அடையும்

முதலில் பிருத்விராஜன் பின்னர் நாயக்க மன்னர்கள் பின் சிவாஜி அதன் பின் திலகர், காந்தி என வந்த வரிசையில்தான் மோடிமிகபெரிய மறைமுக போரை நடத்துகின்றார்

வெள்ளையனின் கைகூலிகளுக்கு எதிராக 75ம் ஆண்டு போர்நீடிக்கின்றது என்றாலும் தேசம் வெற்றிமுகத்தில் நிற்பது பெரும் ஆறுதல்

இந்தியா எப்பொழுதும் தெய்வத்தால் ஆசீர்வதிக்கட்ட நாடு, அது சந்திக்கும் ஒவ்வொரு ஆபத்திலும் சில நன்மை உண்டு

முன்பு கிரேக்கம், பவுத்தம், சமணம் என பலவற்றை கடந்து எளிதாக மீண்டது இந்தியா

பின்பு ஆப்கன் மன்னர்களை உள்வாங்கி அது செங்கிஸ்கானிடம் இருந்து தன்னை காத்து கொண்டது, இன்னும் பல ஆபத்துகளை முறியடித்தது

பின் வெள்ளையனை உள்வாங்கி ஆப்கானியருக்கு முடிவு கட்டி இன்னொரு பெரும் ஆபத்தை அது முறியடித்தது அது கம்யூனிசம்

வெள்ள்ளையன் வராவிட்டால் இந்துக்களின் நிலை துருக்கி பேரர்சில் சிக்கிய யாசிடி பழங்குடியினர் போல் ஆகியிருக்கலாம், குர்துகள் போல இந்துக்கள் நிலை உலகளவில் தெரியாமலே போயிருக்காலம்

அது வெள்ளையனால் முறியடிக்கபட்டு இந்நாட்டில் ஆப்கானியர் ஆட்சி அவனால் முழுக்க வேறறுக்கபட்டது

அப்படியே கம்யூனிச பெரும் ஆபத்தில் இருந்தும் இத்தேசம் வெள்ளையனால் காக்கபட்டது, அவன் மட்டும் 1940 வரை இங்கு இல்லாவிட்டாலோ இல்லை சில ஏற்பாடுகளை செய்யாமல் கிளம்பியிருந்தாலோ இந்த மாபெரும் இந்துதேசம் நாத்திக கம்யூனிஸ்டுகள் கையில் சிக்கி பெரும் நாசமாயிருக்கும் இந்துமதம் பெரும் அழிவை சந்தித்திருக்கும்

அவ்வகையில் வெள்ளையன் ஆட்சியும் பல நன்மைகளை நாட்டுக்கு வழங்கிவிட்டு வெகு விரைவாக விடைபெற்றும் கொண்டது

ஆக உலகின் மிகபெரும் நீண்ட போராட்டத்தை நடத்திய நாடு இந்தியா எனும் பெருமையுடன் பூரண சுதந்திரத்தை நோக்கி கம்பீரமாக சென்று கொண்டிருக்கின்றது இந்துஸ்தானம் எனும் இந்துக்களின் இந்தியா