இந்த பேரரிவாளன் விவகாரம் மட்டுமல்ல

இந்த பேரரிவாளன் விவகாரம் மட்டுமல்ல தங்கள் இலங்கை நிலைபாட்டிலே மத்திய அரசு வெளிபடையாக இருத்தல் வேண்டும் தங்கள் திட்டத்தை தமிழக மக்களுக்கு சொல்லவேண்டும் காங்கிரஸ் அரசு அதை செய்யாததால்தான் பெரும் குழப்பம் ஏற்பட்டது

இப்பொழுது பாஜக அரசு அதையே செய்வது போல் தோன்றுகின்றது, அப்படி செய்தால் அது பெரும் குழப்பமாக முடியும் பாஜகவுக்கு இவ்விவகாரத்தில் சில வெளிபடைதன்மை அவசியம்

ஈழவிவகாரம் தமிழகத்தில் 1983க்கு முன்பு கிடையாது, வரலாற்றில் ஈழதமிழருக்கும் தமிழக தமிழருக்கும் ஒரு இடைவெளி பெரிதாக இருந்திருக்கின்றது, தமிழக தமிழர்களை யாழ்பாண தமிழர்கள் ஒருமாதிரி விலக்கி வைத்ததும் இன்னும் பல “கள்ளதோணி” “நாகரீகமற்ற தமிழன்” என பாகுபாடு காட்டியதெல்லாம் வரலாறு

1960களில் கூட 5 லட்சம் மலையக தமிழரை கதற கதற இலங்கை அரசு விரட்டி இந்தியாவுக்கு அடித்தபொழுது, மாபெரும் அந்த கொடுமையில் கூட தமிழகம் அமைதிதான் காத்தது

தனிதமிழீழம் முதலில் கேட்ட செல்வநாயகம் வந்து ஈரோட்டு ராம்சாமியிடம் ஆதரவு கேட்டபொழுது கூட ராம்சாமி மறுத்தது வரலாறு, அவ்வளவுதான் ஈழ தமிழர் தமிழக தமிழர் உற்வுகள்

1975களில் இருந்து ஈழதமிழர் சிங்களர் மோதல் தொடங்கினாலும் தமிழகம் அதன் போக்கில் இருந்தது

1980களில் கூட இந்தியாவின் இந்திரா அரசு திரிகோணமலை துறைமுகம் இன்னும் பல அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் கால் வைத்தது, அப்போதைய இலங்கை எதிர்கட்சி தலைவரும் தமிழர் பிரதான தலைவருமான அமிர்தலிங்கத்தை இந்திரா கையில் எடுத்தபொழுதுதான் ஈழ அரசியல் இங்கு நுழைந்தது

இலங்கை அரசுக்கு ஈழசிக்கலால் இந்திய தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் இந்திய அரசு தலையிடவேண்டும் என காட்டுவதற்கும் விரும்பினார் இந்திரா, அதிலிருந்துதான் ஈழதிணிப்பு வலிய நடந்தது

ஆனால் அதை காங்கிரஸ் செய்யாமல் தமிழகம் செய்வதாக மக்கள் புரட்சிபோல் அவர் எழுப்ப விரும்பினார், அதே நேரம் இலங்கையில் தமிழருக்கு தனிநாடு கொடுக்கும் ஆசையும் அவருக்கு இல்லை

அப்படி ஒரு விருப்பம் இருந்தால் 1983லே இந்திய ராணுவம் இலங்கைக்கு சென்றிருக்கும்

ஆனால் வங்கபோர் என்பதற்கும் ஈழம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு, வங்கத்தில் ஒரேமொழி என்றாலும் மதம் வேறு, கிழக்குவங்க மக்களால் மேற்கு வங்கத்தில் சிக்கல் இல்லை என்பதால் தனிநாடு உருவாக தடையில்லை

ஆனால் தமிழீழம் எனும் தனிநாடு உருவானால் அது தமிழ்”நாடு” எனும் திராவிட பிரிவினைவாத மாநிலத்தை நிம்மதியாக இருக்கவிடாது, பல கனவுகள் தமிழகத்தில் உருவாகும் கடல் கடந்த தமீழிழமும் அதற்கு உதவினால் இந்தியாவுக்கு சிக்கல் என்பதும் இந்திராவுக்கு தெரிந்தது

இதனால் தன் திட்டத்தை வெளிகாட்டாமல் தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பை உருவாக்கினார்

அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது “நாவலரே வருக” என கருணாநிதி மாலையோடு நிற்க, முதல்வர் எனும் வகையில் எம்ஜிஆரைத்தான் சந்திப்பேன் என அமிர்தலிங்கம் எம்ஜிஆரோடு செல்ல அதிலிருந்துதான் ஈழ அரசியல் தமிழகத்தில் தொடங்கிற்று

தொடர்ந்து இந்திராவின் உத்தரவில் பிரபாரகனின் புலிகள் உள்ளிட்ட 4 குழுவினருக்கும் இந்திய ராணுவபயிற்சி தொடங்கியது தமிழகம் இன்னும் உற்சாகமானது

பயிற்சியில் புலிகள் உள்ளிட்ட எல்லோரும் இந்தி கற்றுகொண்டதும் உண்டு, திராவிட கும்பல் அப்பொழுதெல்லாம் மகா அமைதி

(இந்த இந்திதான் பின் புலிகள் இந்திய ராணுவத்தோடு மோதும்பொழுது புலிகளுக்கு கைகொடுத்தது)

இக்காலகட்டத்தில் நடந்த இந்திராவின் மரணம் காரியத்தை குலைத்தது, இந்திரா இல்லா இடத்தில் ராஜிவும் குழம்ப விவகாரம் தமிழக அரசியல்வாதிகள் கைக்கு சென்றது, ராஜிவால் அதை தடுக்க முடியவில்லை

அப்பொழுது எம்ஜிராம்சந்திரன் பிரபாகரனை தன் கைபாவையாக்கி ராஜிவினை நோக்கி புன்னகைத்தார், கருணாநிதிக்கு மற்ற குழுக்கள் கிடைத்தன‌

இந்திரா ரகசியமாக செய்த ஈழ அரசியல் தமிழக அரசியல்வாதி கைகளுக்கு வந்ததை ராஜிவால் தடுக்க முடியவில்லை , ஈழகுழப்பம் இங்குதான் தொடங்கிற்று

தொடர்ந்து எம்ஜிராம்சந்தரின் மரணம், இந்திய அமைதிபடை இலங்கை சென்றது, இந்திய இலங்கை ஒப்பந்தம் என எல்லாமே குழப்பி அடிக்க ராஜிவ் திணறினார்

தேர்ந்த அரசியல்வாதியான கருணாநிதி ஆட்டத்தை அடித்து ஆடினார், டெல்லி பெரும் குழப்பத்தில் சிக்கியது

1983ல் இந்திராவின் உத்தரவுக்கு கட்டுபட்ட தமிழக அரசியல் கோஷ்டிகள் 1988ல் ராஜிவினை குழப்பி அடித்தனர்

இந்த கால்கட்டத்தில் புலிகளோடு உறவாடியவன் இந்த பேரரிவாளன், அவன் இலங்கை சென்றது உண்டு புலிகளோடு உறவாடியது உண்டு, “சாத்தானின் படைகள்” என இந்திய படைகளை புலிகள் கொச்சைபடுத்தி அச்சடித்தபொழுது அதற்கு உதவியன் இந்த பேரரிவாளன்

அப்பொழுது 17 வயது கொண்ட அவனை முகமூடியாக கொண்டுதான் ராஜிவ் கொலைசதிகாரன் சிவராசன் களமாடினான்

சென்னையில் பத்மநாபா கொலையினை வெற்றிகரமாக முடித்த சிவராசன் கருணாநிதி ஆட்சியில் தப்பினான் பின் அவர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டபின் மறுபடி ராஜிவ் கொலைசதியோடு வந்த அவனுக்கு கார் பேட்டரி (வயர்லெஸ்ஸை இயக்க) ,காவசாகி பைக் என எல்லாமும் ஏற்பாடு செய்தது பேரரிவாளனே

அந்த குறிப்பிட்ட காலத்தில் சிவராசனின் எல்லா நடவடிக்கையும் அவன் அறிவான், இன்னும் அவனிடம் ரகசியம் உறங்கிகொண்டிருக்கின்றது, நளினிபோல முழு அப்ரூவராக அவன் மாறவில்லை என்பது நிஜம்

ராஜிவ் கொலையில் போட்டோ எடுத்து செத்துபோன ஹரிபாபுவுக்கும் பேரரிவாளனுக்கும் நல்ல நட்பு உண்டு என்பது இன்னொரு கோணம்

அப்படிபட்ட பேரரிவாளன் ராஜிவ் கொலையில் சிக்கினான்

விஷயம் பேரரிவாளன் இல்லை என்பதால் இத்தோடு நிறுத்திவிட்டு விஷயத்துக்கு செல்லலாம்

அப்படி தமிழக அரசியல்வாதிகள் கையில் ஈழவிவகாரம் சிக்கியபின்புதான் நினைத்துபார்க்கமுடியா விபரீதமெல்லாம் தமிழகத்தில் நடந்தன‌

இலங்கையில் இந்திய ராணுவத்தை கொன்ற புலிகள் இந்திய தமிழகத்தில் மிக உல்லாசமாக வளைய வந்தனர், அவர்கள் தமிழகத்தை இரண்டாம் தலமாக பயன்படுத்தி மருத்துவமனை முதல் பெட்ரோல் நிலையம் வரை அமைத்து தளமாக்கினர்

அதனை டெல்லி தடுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம் குறைந்தபட்சம் தங்கள் ராணுவத்தை கூட தமிழகத்துக்கு அனுப்பவில்லை

டெல்லியின் இந்த குழப்பத்தைத்தான் தமிழகம் “ஈழ அரசியல்” என பயன்படுத்தியது, கருணாநிதி விபிசிங்கோடு சேர்ந்து அமைதிபடையினை மீளபெற்றார், அதைவரவேற்காமல் அவமானபடுத்தவும் செய்தார்

இந்த உற்சாகத்தில்தான் இந்திய ராணுவத்தையே தாங்கள் எதிர்த்தபொழுது தமிழகம் தங்களோடு இருந்தது எனும் உற்சாகத்தில்தான் ராஜிவ் கொலைவரை சென்றான் பிரபாகரன்

ஆனால் அதன் பின் கொஞ்சகாலம் தமிழத்தில் புலி ஆதரவு இல்லை, ஜெயின் கமிஷன் ஆதரவு வேறு திமுக வாயினை கட்டிபோட்டது

பின் மெல்ல மெல்ல தேச எதிர்ப்பு அரசியலுக்காக திமுகவும் அதிமுகவும் ஈழவிவகாரத்தை தொட்டன, அப்பொழுதும் தனிஈழம் தமிழீழம் என சொல்லாமல் இந்த 7 பேர் விடுதலை என ராகத்தை மாற்றின‌

அதன்பின் ஈழஇறுதிபோர் வந்தது, திமுக ஆட்சியில் இருந்ததால் தமிழகம் தப்பித்தது இல்லையேல் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும்

இப்பொழுது பேரரிவாளன் விடுதலை என அடுத்த ரவுண்ட் ஆரம்பிக்கின்றது

நாம் சொல்வது இதுதான்

நிச்சயம் பேரரிவாளன் மத்திய அரசின் அனுசரனையின்றி விடுவிக்கபட்டிருக்க முடியாது, உள்துறை அமைச்சு இதர பாதுகாப்பு உளவு அமைப்புக்கள் பல கட்சி தலைவர்கள் கூடி எடுத்தமுடிவு இது என்பது தெரிகின்றது

பேரரிவாளனே விடுதலையான நிலையில் வழக்கின் அப்ரூவரும் ராஜிவ் கொலையின் மர்மத்தை உடைத்தவளுமான நளினி விடுதலைசெய்யபடத்தான் வேண்டும் அதுதான் சரி

இப்பொழுது பாஜக ஈழதமிழர் அரசியலை தொடங்குகின்றது, தமிழக தமிழர்களுக்கும் ஈழ தமிழர்களுக்கும் தாங்கள் எதிரி அல்ல என காட்டி ஈழ அரசியலை கையில் எடுக்கின்றது

நாட்டுக்கு அது நல்லது, இலங்கை எனும் தந்திரகார நாட்டைமிரட்டி வைக்க ஈழ அரசியலும் அதற்கு தமிழகத்தில் ஒரு ஆதரவும் அவசியம் அது அல்லாது இலங்கையினை பேச்சுவார்த்தைக்கு அழைக்கமுடியாது

அப்படி ஒரு அவசியம் இருந்தால்தான் வங்கப்போரை காட்டி இலங்கையினை மிரட்டலாம் அதுவரை சரி

ஆனால் மத்திய பாஜக அரசு இந்திரா தமிழக அரசியல்வாதிகளை தன் கையில் வைத்து ஈழ அரசியல் செய்தது போல் செய்யட்டும் மாறாக ராஜிவ் விபிசிங் மன்மோகன் போல ஈழவிவகாரத்தினை தமிழக அரசியல்வாதிகள் கையில் விட்டு குழப்பி அடித்து தீராசிக்கலில் தமிழகத்தையும் தேசத்தையும் தள்ளியது போல் குழப்பாமல் இருக்கட்டும்

தங்களின் ஈழகொள்கை என்ன என்பதையும் தங்களின் திட்டம் என்ன என்பதையும் அண்ணாமலை மூலமாக அவர்கள் தொடக்கத்திலே விளக்கிவிடுவது நல்லது

ஆம், நிச்சயம் மத்திய அரசின் ரகசிய அனுமதியுடனே பேரரிவாளன் விடுவிக்கபட்டிருப்பது எல்லோரும் அறிந்தது, அண்ணாமலையும் அதனை வரவேற்றிருக்கின்றார்

ஆனால் “உச்சி மன்ற குடுமைய்னை பிடித்த ஸ்டாலின், உருண்டு புரண்ட டெல்லி”, “முத்துவேலர் மகன் முறைத்தார் திறந்தது சிறை கதவு” “ஸ்டாலின் பெயரை கேட்டதும் நீதிமன்றம் தீர்ப்பு” என ஒரு கோஷ்டி ஆரம்பித்துகொண்டிருக்கின்றது

இன்னொரு கோஷ்டி இதை கேட்டுவிட்டு சொல்வதுதான் விபரீதம் “ஆமா, இல்லாட்டி எங்க அண்ணன் சும்மா விடுவாரா?

எங்க அண்ணனுக்குத்தான் சென்னை, டெல்லி, நீதிமன்றம் எல்லாம் பயந்திருக்கு புஹஹஹ்ஹஹ்ஹஹா”

இம்மாதிரி பழைய குழப்பங்கள் மறுபடி கூடாமல் இருக்க மத்திய அரசு தங்கள் நிலைபாட்டை விளக்கி மாகாணத்தை அமைதியாக்கி, 1980க்கு முன் இருந்த நிலையினை கொண்டுவருவது மகா அவசியம்