இன்று அன்னை தெரசா பிறந்தநாள்

Image may contain: one or more people and close-up

இன்று அன்னை தெரசா பிறந்தநாள், இப்பொழுது பதிவு எழுதியவுடன் சங்கிளுடன் மல்லுகட்ட வேண்டும்

அன்னையின் தொன்டை பற்றி சொன்னால் “ஏ சதிகாரா, நீ கிறிஸ்தவன் அவள் கிறிஸ்தவச்சி, மதமாற்றிய கிறிஸ்தவச்சி” என சங்கிகள் பொங்குவார்கள்

திமுகவினருடன் சண்டை முடிந்த நிலையில் இன்னும் சில மணிதுளிகளில் சங்கிகளுடன் அடுத்த யுத்தம் தொடரும்

இன்று அவர்களோடு மல்லுகட்டு என எம்பெருமான் இட்டமுடன் எழுதியிருக்கின்றான்


கிறிஸ்து இயேசு எப்படி போதித்தார்?,

“ஒடுக்கபட்டோருக்கும், அனாதைகளுக்கும், ஆதரவில்லா அபலைகளுக்கும், நோயுற்றோருக்கும்வாழ வழியற்றவருக்கும் வாழ்வளிக்கும் பொருட்டு நானே வந்தேன்” அப்படித்தான் போதித்தார்.

அப்படி அவர் ஏழையாக வந்தார், சமூகத்தால் விரட்டபட்டோருடன் வாழ்ந்தார், நோயாளிகள், பாவிகள் என ஒதுக்கபட்டோர், புறக்கணிக்கபட்டோர் என யாருடனும் பழக அவருக்கு தயக்கமில்லை.

அவர்களுக்கு எது தேவையோ அதனில் உதவினார். பசி,நோய் என அவர்கள் பிணியினை விரட்டினார்.

ஒரு யூதன் பாவிகள் எனப்படும் ஏழைகளுடன் இப்படி உறவாடுவதா எனும் வன்மத்தில் அவர் அடித்துகொல்லப்ட்டார், ஒரு கவுரவ கொலை அது.

சாகும் பொழுதும் அவர் ஒருவனுக்கு பார்வை அளித்துதான் செத்தார். அவரின் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது

அப்படிபட்ட கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள், அவர் போலத்தான் வாழ்வார்கள். அடுத்தவருக்காக உழைத்து கொண்டே இருப்பார்கள், தன்னலம் என்பது சிறிதும் இருக்காது. எங்கெல்லாம் உதவிபெற மக்கள் கையேந்திகொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் இருப்பார்கள்.

பைபிளில் இயேசு சொல்கிறார் “அந்த கைவிடபட்டவரோரில் இருப்பதெல்லாம் நானே, அவர்களுக்கு செய்வதை எல்லாம் எனக்கே செய்கின்றீர்கள்”.

நல்ல ஊழியர்கள் அதனைத்தான் செய்தார்கள், அவரில் ஒருவர்தான் நாம் கண்ணால் கண்ட மானிட தெய்வம்
அன்னை தெரசா

அவர் அல்பேனிய பிறப்பு, துறவற சபையினில் சேர்ந்து ஒரு ஆசிரியையாக இந்தியா வந்தார், ஆனால் பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையோரம் கிடந்த நோயாளிகள், முதியவர்கள், பசியாளர்களை தாண்டி செல்லும் பொழுது அம்மக்களின் தேவைகளில் இயேசுவினை கண்டார், அவர்களுக்கு உழைப்பதே இயேசுவிற்கு செய்யும் பணி என சுய தர்மத்தை வகுத்துகொண்டார்.

மேலிடம் சீறியது, ஒழுங்காக பாடம் மட்டும் நடத்து என்றது. அவர் அசரவில்லை மாறாக சபையினை விட்டே வெளியேறினார். மாற்று உடை இல்லை, தங்க இடமில்லை, அடுத்தவேளைக்கு உத்திரவாதமில்லை கையில் இருந்ததோ 5 ரூபாய், அதோடு கிளம்பினார்

அந்த நோயாளிகளை அரவணைத்தார், நல்ல செய்தி சொன்னார். அதுதான் நற்செய்தி அதுதான் சமஸ்கிருதத்தில் சுவிஷேசம். நான் இருக்கின்றேன் உன் துயரம் போக்குவேன் என தாழகிடப்பவனிடம் சொல்வதே நற்செய்தி.

மாறாக செத்துகிடப்பவனிடம் ஞானஸ்நானம் வாங்கு, கிறிஸ்தவனாக மாறு என சொல்வது அப்பட்டமான வியாபாரம், அது நற்செய்தி அல்ல மாறாக பேரம்

முதலில் ஓட அடித்தார்கள், அவமான படுத்தினார்கள். கொஞ்சமும் தளராமல் போராடினார் தெரசா. தன் அவமானத்தையும் கண்ணீரையும் எல்லாம் இயேசுவோடு மட்டும் பகிர்ந்துகொண்டார். அவர் சபையோ இதற சபைகளோ அவரை ஏறேடுத்தும் பார்க்கவில்லை.

ஆனால் கடவுள் அவளை கண்காணித்துகொண்டே இருந்தார் கூடவே கல்கத்தா மக்களும்.

யார் இவள்? எங்கிருந்தோ வந்தாள், நமது மக்களுக்கு பாடுபடுகின்றாள் என சிந்திக்க தொடங்கினர், தெரசாவிற்கு ஒரு அங்கிகாரம் கிடைத்தது. முதலில் பழைய பொருள், மீதி உணவு கொடுத்தனர். அதன் பின் கொஞ்ச கொஞ்சமாக உதவி கரங்கள் நீண்டன‌

தொழுநோயாளிகளை, சாக்கடை புழுக்களாக சாலையோரம் சுருண்டு கிடந்த மக்களை மானிட நேயத்தில் அவர் தொட்டு அவரணைத்த பொழுது கல்கத்தா நகரம் கண்ணீர் விட்டு அவரிடம் மண்டியிட்டது.

இப்படி தனி ஆளாகத்தான் வளர்ந்தார் தெரசா, பின்னாளில் உலகெல்லாம் அறியபட்டார். அவருக்கு முதல் சிக்கல் அப்பகுதி சங் பரிவார கும்பலிடம் இருந்து வந்தது, அவர் மதமாற்றம் செய்கிறார், அவரை நாடு கடத்துங்கள் என முழக்கமிட்டு நேரு முன்னால் வெடித்தது சர்ச்சை

நேரு அவர்களின் தலைவர்களுடன் அன்னையின் ஆசிரமம் சென்றார், அங்கே நோயாளிகளுக்கு மருந்து இடுதல், முதியவருக்கு உணவூட்டுதல் போன்ற பணிகள் நடந்துகொண்டிருந்தன. இந்துக்கள் கீதையும் இஸ்லாமியர் குரானும் படித்துகொண்டிருந்தனர்

தெரசா அமைதியாக சொன்னார், மனிதர்களின் தேவையில் நான் என் இயேசுவை காண்கிறேன், அவருக்கு பணி செய்கிறேன். இவர்கள் எம்மதமோ, என்ன இனமோ எனக்கு பிரச்சினையே அல்ல. மனிதர்கள் அது போதும்.

இப்படித்தான் பரமன் இயேசு எங்களுக்கு கற்பித்தார், அதனைத்தான் செய்கின்றோம், இந்த சேவைதான் கிறிஸ்தவ மதம், இப்படி தன்னலமற்ற சிலுவையினை சுமக்கத்தான் எங்களுக்கு கற்பிக்கபட்டிருக்கின்றது. சுமக்கின்றோம், எங்களோடு அச்சிலுவை சுமக்க வருபவர்களை சேர்க்கின்றோமே தவிர வேறு ஒன்றுமல்ல. எங்கள் சபையில் இருக்கும் சகோதரிகளெ எல்லாம் அச்சிலுவை சுமக்க வந்தோரே.

எனக்கு தேவை மத்மாற்றம் அல்ல, மாறாக உங்களை போன்றவர்களின் மனமாற்றம். இம்மானிடருக்கு, சக மனிதருக்கு மனிதனாய் உதவும் மனமாற்றம். மதங்களை தாண்டிய மானிட நேய மனமாற்றம்.

நேரு சொன்னார், “இவள் அந்நிய நாட்டுக்காரி, ஆனால் சேவை செய்வது நம் மக்களுக்காக, உங்கள் வீட்டு பெண்கள் இதற்கு தயார் என்றால் இவளை அனுப்பிவிடலாம்”

தலைகுனிந்த பரிவாரங்கள் அதன் பின் வம்பு வளர்க்கவே இல்லை, அந்த மனமாற்றம் அங்கே நடந்தது, அதன் பின் தெரசாவின் சேவைக்கு எல்லோரும் உதவினார்கள்.

உலகமே கொட்டி கொடுத்தது, அவருக்கு கிடைக்காத பரிசுகள் இல்லை, குவியாத காணிக்கை இல்லை. கிரிக்கெட் வீரர்கள் கூட கல்கத்தாவில் விளையாடினால் வெற்றி பணத்தில் ஒரு பங்கினை எடுத்து வைத்தார்கள்.

எப்படி அவ்வளவு பெரும் சேவை நிறுவணத்தை அவரால் இயக்க முடிந்தது? எளிதான விஷயம், பைபிளில் 5 ஆயிரம் ஏழைகளுக்கு உணவளித்தார் இயேசு, பல இடங்களில் அது காணகிடக்கின்றது, எத்தனையோ பேருக்கு நோய் தீர்த்தார் என்பதும் இருக்கின்றது

அன்னை தெரசா கல்கத்தா நகரில் அந்த பைபிள் காட்சியினைத்தான் நிகழத்தினார். அந்த அக்காலத்து இஸ்ரேலிய காட்சிகள்தான் பின் கல்கத்தாவில் அரங்கேறின, சேவையாய் அறங்கேறின.

அதுதான் கிறிஸ்தவம, இதுதான் ஊழியம்.

இதனை விட்டுவிட்டு பொறியல் கல்லூரி நடத்துவது, மேடைகளில் பெர்மார்மன்ஸ் காட்டுவது, இயேசு எனக்கு அப்படி கட்டளையிட்டார் என பிதறுவது, அடுத்த மதத்தாரை சாடுவது, உலகம் அழியபோகிறது என பயமுறுத்துவது. எழுப்புதல் , மிரட்டுதல் அந்நியபாஷை அலப்பறைகள் எல்லாம் கிறிஸ்தவம் ஆகா

அது அப்பட்டமான பிழைப்புவாதம். தொழில்
தவிப்பவன் வாயில் தண்ணீர் விடுவதுதான் கிறிஸ்துவமே தவிர, அவன் தலையில் தண்ணீர் ஊற்றி ஞானஸ்நானம் பெறு என்பதா கிறிஸ்தவம்?

இன்று அவர்கள் அதனைத்தான் செய்கின்றார்கள். முழுக்க சுயநலம் எல்லாம் தன்னலம், அதற்கு மேல் தன் மதத்தாருக்கு மட்டுமான அப்பட்டமான சுயநலம். இதில் எங்கிருந்து வாழும் கிறிஸ்தவம்?

தெரசாவின் தன்னலமற்ற சேவையில் மகிழ்ந்தர் கிறிஸ்து, உயிர்த்து நின்றார் இயேசு. அவர் உயிரோடுதான் இருப்பார். தெரசா போன்றோரின் சேவையில் அவர்தான் தெரிந்தார், அவருக்கு அங்கு மரணமில்லை

ஆனால் இந்த அழிச்சாட்டிய பிழைப்புவாத கிறிஸ்தவர்களின் அட்டகாசத்தில் தினகரன் & சன், சார்ள்ஸ் ஆபிரகாம் , ஏஞ்சல் டிவி அழிச்சாட்டியத்தில் அவரை தினசரி கொல்கின்றார்கள்.

அன்னை தேரசா எங்காவது தன்னை விளம்பரம் செய்தாரா? இயேசு அழைக்கின்றார், விசிலடிக்கின்றார், அலாரம் அடிக்கின்றார் என இம்சை செய்தாரா? இஞ்சினியரிங் காலேஜ் கட்டினாரா? எந்த அரசியல்வாதியினை தேடி சென்று போஸ் கொடுத்தாரா?

இல்லை தெருவோரம் கண்ட அனாதைகளிடம் சேவை செய்தார், அவர்களிடம்தான் கிறிஸ்துவத்தின் தேவை இருந்தது, கண்டார் அடைந்தார்.

அதனால் புனிதரும் ஆனார்

நாம் வணங்கிகொண்டிருக்கும் அந்தோணியார் பெரும் புனிதர். அவர் வாழ்ந்த காலத்தில் பிறருக்காகவே வாழ்ந்தார், அனைத்து அற்புதங்களையும் பிற மக்களுக்காகவே செய்தார், தனக்காக துளியும் செய்தவரில்லை அவர்.

கிட்டதட்ட தமிழக சித்தர்களின் வாழ்க்கை சாயல்

இன்றும் அவர் ஆலயங்களில் எல்லா மத பக்தர்களும் வழிபடுகின்றார்கள், பலன்பெறுகின்றார்கள், அவர்கள் எம்மதம்? ஞானஸ்நானம் பெற்றவர்களா? இயேசு தெரியுமா? என்பதல்லாம் பிரச்சினையே அல்ல, கண்ணீர் விடும் மனிதானா?, போதும் அவர் அற்புதம் நிகழ்த்துகின்றார்

அப்படி பிறருக்காக வாழ்ந்த புனிதர்கள் வரிசையில் தெரசாவும் வருவதில் ஆச்சரியமில்லை, புனிதர் எனும் வார்த்தைக்கு அன்றே திருவள்ளுவன் குறள் எழுதி வைத்தான்

வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்தில் வைக்க படும்

இக்குறளுக்கு லத்தீனில் விளக்கம் அளித்து அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்வே அந்த புனிதர் பட்டம். அதுதான் விஷயம். அவ்வளவுதான்

வாழ்வாங்கு வாழ்வதென்றால் அம்பானி, டாடா, பில்கேட்ஸ், தமிழக அரசியல்வாதிகள் ஸ்டைல் அல்ல, மாறாக அடுத்தவருக்காக வாழ்வினை அற்பணித்து வாழ்பவர்கள் வரிசை, வானில் வாழும் தெய்வத்தின் வரிசை

அன்னை தெரசாவும் அந்த தெய்வ வரிசையினை பெற்றுவிட்டார், அவர் என்று அல்ல முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக், வேலூர் மருத்துவமனை கண்ட ஐடா ஸ்கேடர், நெல்லையின் சாரா டக்கர் போன்றவர்கள் எல்லாம் அந்த புனிதர்கள் வரிசையே

காசுக்காக இயேசுவினை கூறுபோடுபவர்களும், பைபிள் வசனத்தால் பிழைப்பு நடத்துபவர்களும் ஒருநாளும் அத்தகுதிக்கு வரமாட்டார்கள். அவர்கள் வியாபாரிகள்

மதமாற்றம் எனும் வியாபாரம் செய்வார்களே ஒழிய மனமாற்றம் என்பதை சிந்திக்க மாட்டார்கள்.

மானிடனுக்கு அடிப்படை உதவி தேவைபடும் இடங்களில் எல்லாம் இயேசு இருப்பார், நான் உலக முடிவுவரை உங்களோடு இருப்பேன் என அவர் சொன்ன தத்துவமும் அதுவே.

“மனம் மாறுங்கள், வானுலக அரசினை படைப்போம்” என பரமன் இயேசு ஏன் அழைத்தார்?

ஏழைகளுக்கு உதவ “மனம் மாறுங்கள்”, ஒடுக்கபட்டோருகு உதவ “மனம் மாறுங்கள்”, பாவிகளை ஏற்றுகொள்ள, நோயுற்றோரை அரவணைக்க “மனம் மாறுங்கள்” என அழைத்தார்.

“மனம் திரும்புங்கள் கடவுளின் அரசு சமீபத்திலிருக்கின்றது..” எனும் வசனத்திற்கு நீங்கள் மனம் திரும்பினால் கடவுளின் அரசினை படைப்பது, அதாவது சமத்துவ உலகினை படைப்பது மிக அருகில் இருக்கின்றது என்ற பொருளும் உண்டு.

இப்படித்தான் மனம் திரும்ப அழைத்தார் இயேசு.
மாறாக எங்காவது அவர் ரோமையரை, கிரேக்கரை இன்னும் பல அடுத்த மதத்து மக்களை “மதம் மாறுங்கள்” என அழைத்தாரா? ஒருக்காலும் இல்லை, இல்லவே இல்லை .
இவை எல்லாம் பின்னால் வந்த அழிச்சாட்டியம், இன்று தமிழகத்தில் வியாபாரமாய் நடக்கும் அழிச்சாட்டியம்.

இந்த தத்துவத்தை சரியாக பிடித்து, அதற்காக வாழ்ந்து மானிடரை நேசிக்கும் மனிதராக மனம் மாறுங்கள் என பறைசாற்றி நின்றவர்தான் அன்னை தெரசா

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவி ரோமில் பலபேர் கூடுகின்றனர், சுஷ்மா சுவராஜ் தலமையில் இந்தியர் செல்வதை உலகமே கவனிக்கின்றது, காரணம் அந்த மானிட தேவதை உழைத்தது நமக்காக, நம் இந்திய சகோதரர்களுக்காக‌

இந்த தேசமும் அவருக்கு பாரத ரத்னா வரை கொடுத்து கவுரவித்தது, தன் பங்கிற்கு அவரை போற்றிகொண்டுதான் இருக்கின்றது, மறக்கவில்லை.

இனி அவர் புனிதர் தெரேசா அதாவது அவரிடம் வேண்டினால் அது நடக்கும் என கத்தோலிக்க தலமை பீடம் அறிவிக்க போகின்றது, அவர் பெயரில் ஆலய பீடங்கள் இனி எழும்பும், எல்லோரும் பிரார்த்திப்பார்கள்

ஆனால் கடவுளிடம் அன்னை தெரசா எப்படி பிரார்த்திகொண்டிருப்பார்?

“எனக்கு மிக பிடித்தமான இந்த இந்திய மக்கள், மதம் கடந்த மானுட நேயத்திலும், உதவி செய்யும் சகோதர மனப்பான்மையிலும் ஒற்றுமையாய் வளர்ந்து, உன்னத சமூகமாக திகழ அருள்புரிவாய் சர்வேஸ்வரா

இந்தியாவில் மானுடம் வாழட்டும், மனிதநேயம் செழிக்கட்டும். சகமனிதனை புறந்தள்ளாமல் அரவணைக்கும் தெய்வீகபண்பு ஓளிவீசட்டும், அவர்கள் துன்பமெல்லாம் தீர அருள்செய் பரம்பொருளே, “

இதுதான் அவரின் பிரார்த்தனை, அது இபபடித்தான் இருக்கும். எல்லா மானிடருக்காகவும் இருக்கும், அவர்கள் துன்பம் தீர்க்கும் பிரார்த்தனையாக இருக்கும்.

கல்கத்தாவின் காவல் தெய்வம் காளி என்பார்கள், இருக்கட்டும். எல்லா தெய்வமும் ஒன்றே.

அந்த பெரும் தெய்வம் சாந்தமான பெண் உருவெடுத்து கல்கத்தாவினில் கொஞ்சகாலம் சேவை செய்து மக்களை காப்பாற்றியிருக்கின்றது,

பின் வரும் அபலைகள் , ஏழைகள், வறியர்கள் எங்கிருந்தாலும் வாழவும் அது பெரும் வழி செய்துவிட்டு மறைந்திருக்கின்றது.

தெரசாவின் வாழ்க்கை அதனைத்தான் சொல்கின்றது.

இன்று அவரின் பிறந்த நாள், எங்கிருந்தோ வந்து இத்தேசத்தின் கல்கத்தா மக்களுக்கு தன் வாழ்வினை அர்பனித்த அந்த கடவுளின் மகளுக்கு ஆழ்ந்த நன்றியும் அஞ்சலிகளும்