இன்று தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள்
உலகில் முதலில் கட்டபட்ட அணைகளில் எகிப்து அணைகளும், கல்லணையும் குறிப்பிடதக்கவை
இருநாடுகளிலுமே அணையால் விவசாயம் செழித்து கலைகள் வளர தொடங்கின , சிந்தனை பெருகியது.
சிந்தனை எப்பொழுது பெருகும்? பசி ஒழிந்து கவலை மறந்தாலொழிய சிந்தனை பெருகாது
இங்கு பெருகிற்று
இதனால்தான் பிரமீடும், தஞ்சை பெரிய கோவிலும் அதிசயமாக இன்றும் நிற்கின்றன. அந்த அறிவு அப்பொழுதே கிடைத்திருக்கின்றது
அப்படிபட்ட சோழநாட்டில் முத்தமிழும் செழித்தது. அது காவேரி கரையில் இசைதமிழாக பாடபட்டது, நாடகங்களிலும் பாடபட்டது
காவேரி ஆற்றங்கரையில் நாடகதமிழின் இசை “கரை நாடக இசை” என அழைக்கபட்டது, இந்த கரை நாடக இசை பன்னெடுங்காலம் தொடர்ந்தது
சங்க இலக்கியம் எல்லாம் என்ன வகை? எல்லாமே பாடல்கள். குறள் முதல் கம்பராமாயணம் வரை எல்லாமே ஏழு ஸ்வரங்களுக்குள் அடைபடும் அட்டகாச பாடல்கள்
கரை நாடக இசைக்கு பொருந்துமாறே தமிழகத்தின் எல்லா இலக்கியங்களும் அன்று பாடல் வடிவில் எழுதபட்டன. பாடவும் பட்டன. அந்த இசைவடிவ பாடல்களே அவை
இங்கு கரை நாடக இசையில்தான் பாடல் முதல் பக்தி இலக்கியம் வரை இருந்தது.
இன்னார்தான் ராகங்களை உருவாக்கினார் என சொல்லமுடியா அளவு அது பழமையானது
பின் நாயக்கர் காலத்தில் தெலுங்கர்கள் காவேரி கரையில் ஆதிக்கம் பெற்றனர். எல்லா கலையும் அவர்கள் வசம் சென்றது
கரை நாடக இசையும் “கர்நாடக இசை” ஆனது
இதில் பிரசித்தி பெற்றவர்தான் தியாகராஜ சுவாமி . அவர் கர்நாடக இசையில் தெலுங்கு கீர்த்தனைகளை, வடமொழி கீர்த்தனைகளை எழுதினார்.
அதன் ஆதாரம் தமிழரின் இசை ஆனால் கர்நாடக இசை ஆயிற்று
இந்த தியாகராஜரை பெரும் பிம்பம் ஆக்கினார்கள். அவர்தான் இசையின் பிதாமகன் என்றார்கள், இன்னும் இசைகடவுள் என்றார்கள். இன்னும் சொல்கின்றார்கள்
திருவையாற்றில் அவர் சமாதி முன் இன்றும் வருடா வருடம் தெலுங்கு கீர்த்தனை பாடி அவரை மகிழ்விக்கின்றார்கள்
அவர் தெலுங்கில் கீர்த்தனை கொடுத்திருக்கலாம், ஆனால் ராகங்கள் தாளங்கள் எல்லாம் அவர் உருவாக்கியது அல்ல. அவை அதற்கு முன்பே இருந்தன
தமிழன் இழந்த பெருமைகளில் அதுவும் ஒன்று. அதுவரை கரை நாடக இசையில் தமிழ்பாடல்களே இருந்தன,
இந்த தியாகராயர் தெலுங்கினை புகுத்தினார்
அவர்கள் அரசு அவர்கள் ஆதிக்கம் என்பதால் தியாகராயர் பெரும் பிம்பம் ஆக்கபட்டார். அப்படியே அவரை போல இன்னும் இருவரை சேர்த்துகொண்டு மும்மூர்த்தி ஆக்கிவிட்டார்கள்
தமிழனின் புராதான இசையினை களவாடி, ஏதோ இந்த மும்மூர்த்திகள்தான் இசையினையே உருவாக்கினார்கள் என்ற மோசடி பிம்பம் இங்கு உருவாக்கபட்டது.
தெலுங்கு கீர்த்தனை ஆந்திராவில் பிரபலமில்லையாம், தெலுங்கானவில் இல்லையாம் ஆனால் தமிழகத்து காவேரி கரையில்தான் பிரசித்தியாம்,
ஏன் என்றால் சொல்ல தெரியாது
கர்நாடகத்திற்கு சம்பந்தமே இல்லா இசை எப்படி கர்நாடக இசை ஆயிற்று என கேட்டாலும் சொல்ல தெரியாது.
தமிழர் இசையினை களவாடி, தமிழ்பாடலை நீக்கிவிட்டு தெலுங்கு வார்த்தைகளை போட்ட மோசடி அது
பின் வேறுயாருக்கும் அது பழகும் வாய்ப்பினை கொடுக்காமல் குறிபிட்ட இனம் தன் சந்ததிக்கு மட்டுமே கடத்தி வந்தது
இது கிட்டதட்ட 500 ஆண்டுகாலம் நீடித்தது. கர்நாடக இசை பிராமணர் குல சொத்து ஆனது இப்படித்தான்.
அப்படி களவாடி கொடுத்தற்குத்தான் தியாகபிம்பம் என தியாகராயரை விழுந்து விழுந்து வணங்குவார்கள்
இந்நிலை தமிழ்திரையுலகிலும் நீடித்தது, அவர்கள்தான் இசை அவர்கள்தான் பாடகர் அவர்கள் சொல்வதுதான் ராகம் தாளம் விமர்சனம் என்றிருந்தது
இந்த 500 ஆண்டுகால மோசடியினை உடைத்தெறிந்து உச்சம் தொட்டவர்தான் இளையராஜா. இதனால்தான் இன்றுவரை சிலர் வயிற்றெறிச்சலில் அவரை சாடிகொண்டே இருப்பர்
பின்னாளில் சில சதியால் ரகுமானும் உருவாக்கபட்டு அவர் பழிவாங்கபட்டார். செய்தவர்கள் யாரென்றால் எல்லாம் தியாகராசர் கோஷ்டி
இளையராஜா மீது இன்றுவரை அவர்களுக்கு இருக்கும் வெறுப்பு கொஞ்சமல்ல
அது நீங்காது அதற்கு பல காரணங்கள்
இன்று தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள். அவர் இசை பிதாமகன் , ராகங்களின் ஜெனரேட்டர், தாளங்களின் அனலைசர் என வணங்குபவன் வணங்கிகொண்டே இருக்கட்டும்
ஆனால் கரை நாடக இசை எனும் தமிழ் இசையினைத்தான் கருநாடக இசை என சொல்லி அதில் தெலுங்கு கீர்த்தனைகளை மட்டும் புகுத்தி செந்தமிழ் சோழநாட்டிற்கும் தமிழர் இசைக்கும் பாடலுக்கும் எதிரான காரியங்களை செய்தவர் அவர்
அதை எம்மால் உறுதியாக கூற முடியும், அதில் தயக்கம் ஏதுமில்லை
(ஆர்.எஸ்.எஸ் அனுப்பும் அந்த 200 ரூபாய் இனி ஒரு மாதம் கட் ஆகிவிடும்
இளையராஜா ரசிகர்களே, தமிழ் உணர்வாளரே தயவு செய்து மதிய சாப்பாட்டிற்கு வழி செய்துவிடவும்)