இன்று பக்தவச்சலம் பிறந்த நாள்
இன்று பக்தவச்சலம் பிறந்த நாள்
சுதந்திர போராட்ட தியாகி , காமராஜருக்கு அடுத்து பதவிக்கு வந்தவர் என பெரும் அடையாளம் அவருக்கு உண்டு
ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்
திமுக வளர மிக உதவியவர்கள் இரண்டுபேர்
ஒருவர் குமாரசாமி ராஜா (அப்படி ஒரு முதல்வர் இருந்தார்) இன்னொருவர் இந்த பக்தவச்சலம்
குமாரசாமிராஜா எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்து திமுக நடத்திய ரத்தகளறி போராட்டமே மக்களை திமுகபால் இழுத்தது, குமாரசாமி அமைதியாக இருந்தால் திமுக பெரும் பிம்பம் காட்டியிருக்காது.
பின்பு பக்தவத்சலமும் இந்தி எதிர்ப்பு என திமுக கிளம்பும்பொழுது அதனை அடக்க எண்ணி காட்டிய எதிர்ப்புகள் காங்கிரசுக்கே வினையாகிற்று
எனினும் பக்தவச்சலம் மிகபெரும் பண்பாளர் என்பதில் சந்தேகமில்லை. கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் இருந்தபொழுது, கலைஞரை விரைந்து விடுவிக்க அவர் செய்த முயற்சிகள் வரலாறு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மூலம் ஏற்பட இருந்த பெரும் கலவரத்தை தடுத்தது பக்தவத்சலத்தின் மென்மையான அணுகுமுறை
அது பற்றி எரிந்திருந்தால் கிட்டதட்ட பாபர்மசூதி போன்ற சிக்கலாகியிருக்கும். இன்று அப்பிரச்சினை அடங்கிவிட்டதற்கு பக்தவச்சலம் காரணம்
ஆட்சியினை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் காமராஜர் முடிதுறந்தார்
அந்நாளைய சிக்கலும் திமுகவின் விஸ்பரூபமும் அவரை தடுமாற செய்தன
தமிழக முதல்வர்களில் குறிப்பிட கூடிய அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி.