இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள்
இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள்
2004ல் இந்த நாளில்தான் தமிழ் செம்மொழி என தமிழன் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது அறிவிக்கபட்டது
உலகின் தொன்மையான 6 மொழிகளில் ஒன்றான தமிழுக்கு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து தாமதமாக கொடுக்கபட்டது என்றாலும் , கிடைக்கபெற்றது
இதற்காக கலைஞர் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது, தன் வாழ்விலே அதனை செய்வேன் என சொல்லி பெற்றும் கொடுத்தார், அவரின் அரசியல் வாழ்வில் பெரு வெற்றி அது.
இதனை தொடர்ந்த செம்மொழி மாநாடும், “செம்மொழியான தமிழ்மொழியே..” எனும் ஒருவகையான கலைஞரின் வசன பாடலும் மறக்கமுடியாதவை
செம்மொழி மாநாடு கலாமை அழைக்காததால் சர்ச்சையானது, பொதுவாக கலைஞர் அப்படி செய்பவர் அல்ல ஆனால் செய்தார். பெரிய மனிதற்கள் சில தவறுகள் செய்வார்கள், கலைஞர் செய்த தவறு அது
அந்த செம்மொழி பாடலுக்கு இசை அமைத்திருக்க வேண்டியது சாட்சாத் இளையராஜா, அவர்தான் அமைத்திருக்க வேண்டும், அல்லது எம்.எஸ் விஸ்வநாதனிடம் கொடுத்திருக்கலாம்
மேற்கத்திய இசைவடிவமான ரகுமானிடம் கொடுத்தது சரியான முடிவல்ல, தமிழக இசை கருவிகளின் இசை தமிழக இசையாக ஒலிக்கவில்லை என்பது பெரும் குறை..
அதாவது கலைஞரை மீறி நடந்த காரியங்கள் இவை
அப்பாடல் ரகுமானின் புகழை குறைத்ததோடு மட்டுமன்றி, அதற்கான உயரத்தை எட்டவில்லை, கலைஞர் எழுதிய பாடல் என்பதோடு சரி
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து ஏற்பட கலைஞர் மட்டும் பாடுபடவில்லை 1890களிலே அக்குரல் ஒலித்தது, அப்பொழுது பரிதிமாற்கலைஞர் தான் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்
அதாவது எல்லா காலத்திலும் தமிழுக்காக பலர் உழைத்துகொண்டுதான் இருந்தார்கள், இன்னும் உழைப்பார்கள்,அப்படி 1902ம் ஆண்டு பரிதிமாற் கலைஞர் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கோரினார்
அந்த பரிதிமாற் கலைஞரின் கோரிக்கை 104 ஆண்டுகள் கழித்து கலைஞரால் மேற்கொள்ளபட்டு நிறைவேற்றபட்டது
அது என்ன பரிதிமாற்கலைஞர்?
அவர் இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி, அது வடமொழிபெயர் என உணர்ந்து தமிழில் பரிதிமால் கலைஞர் என மாற்றிகொண்டார்
அப்படிபட்ட தமிழ் உணர்வாளர்கள் இருந்திருக்கின்றார்கள்
இன்று தமிழ் செம்மொழியான நாள், கலைஞருக்கு மட்டும்தான் அந்த பற்று இருக்கவேண்டுமா? அந்த பொறுப்பு எல்லோருக்கும் உண்டு
நாமெல்லாம் பெருமைபடவேண்டிய நாள் இது
அந்த பரிதிமாற் கலைஞர் முதல் இதற்காக போராடிய எல்லோரையும் நன்றியோடு நினைத்துகொள்வோம்…
இப்பொழுது ஒருவரை ஒரு தமிழுணர்வாளரை இழுத்து வைத்து கேட்கலாம்
சைமன் என்பது யூத கிரேக்க கலப்பு வார்த்தை, அதன் தமிழாக்கம் என்பது வேறு, முடிந்தால் அந்த தமிழ்பெயரை வைக்கலாம்
ச்சையினை…. ச்ச்ச்சீ என இழுத்து சீமான் ஆக்கினால் அது தமிழ்பெயராகுமா? ஆகாது
சீமான் எனும் வார்த்தையே தமிழ் வார்த்தை அல்ல எனும் சலசலப்பு வருகின்றது, சீமந்தம், சீமந்த புத்திரன் எனும் வார்த்தைகள் தமிழ் அல்ல, சீமான் என்பதும் தமிழ் வார்த்தை அல்ல
விரைவில் அங்கிள் சைமன் அந்த ஹீப்ரு சொல்லுக்கு தமிழ் அர்த்தம் கண்டுபிடித்து பரிதிமாற்கலைஞர் போல மாற்ற வெண்டும்
சையினை, சீமானாக்கி, செபாஸ்டியனை செந்தமிழனாக்கி நான் செந்தமிழன் சீமான் என தமிழகத்தில் சொல்லிகொண்டிருந்தால் சும்மா விடமாட்டோம்
அவர் தேடமாட்டார், நாம் தேடலாம்
சைமன் எனும் ஹீப்ரு பெயரின் தமிழ்வார்த்தை என்ன? என்றால் “கேள்வி பட்டவன்” அல்லது “கேட்டு அறிந்தவன்” எனும் பொருளில் வருகின்றது
அது சரிதான், எதுவுமே தெரியாமல் படிக்காமல், சும்மா யாரோ சொன்னதை கேட்டு அங்கிள் இந்த அளவு அள்ளிவிடுகின்றார் என்றால் சரியாகத்தான் இருக்கும்
சைமன் எனும் தமிழ் வார்த்தை “கேட்டதை அள்ளி விடுபவன்” எனும் பொருளில் வருகின்றது
ஆக இனி அவர் “அள்ளி விடும் அங்கிள்..” என அழைக்கபடுவார், அங்கிள் சைமனின் தமிழாக்கம் அதுதான்