இருங்கடா இருங்க‌….

ஆக ஒரு பயவுள்ளையும் “இந்தியா வாழ்க” என சொல்லி பதவி ஏற்கவே இல்லை

இவ்வளவுக்கும் தேர்தலை நடத்தியது “இந்திய” தேர்தல் ஆணையம், இவர்களை எம்பி என சொன்னதும் அந்த “இந்திய” தேர்தல் ஆணையமே, கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா?

இதற்காகவே இவர்கள் பதவியினை ரத்து செய்து டெல்லியிலிருந்து நடந்து செல்லுங்கள் என விரட்டியிருக்க வேண்டும்…

பாராளுமன்றத்தில் மார்க்ஸுக்கும் பெரியாருக்க்கும் என்ன வேலை என்பதுதான் தெரியவில்லை..

ஏற்கனவே பெரியாரின் பூமியில் குடிக்க தண்ணீரில்லை, மார்க்ஸின் வங்கம் நாறி கிடக்கின்றது

தமிழகம் இன்னமும் நாசமாக வேண்டும் போல‌

எந்த பெரியார் டெல்லியினை , அந்த பாராளுமன்றத்தை அறவே வெறுத்தாரோ அங்கு சென்று “பெரியார் வாழ்க” என சொன்னால் இவர்கள் அறிவு எப்படி இருக்கும்?

இருங்கடா இருங்க‌….

நாளைக்கு எவனாவது படையெடுத்து வரட்டும் இல்லை வெள்ளம் போன்ற இடர்பாடு வரட்டும் பெரியாரும் மார்க்ஸும் உங்கள காப்பாற்றட்டும் என பிடித்து கொடுக்கின்றோமா இல்லையா என மட்டும் பாருங்கள்