ஈரானில் நடக்கும்

ஈரானில் நடக்கும் பெண்கள் போராட்டம் தீவிரமடைந்து உலகத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்துகின்றது, ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய பெண்களும் பெண் எம்பிக்களும் களத்தில் குதிக்கின்றனர்

ஈரானில் ஷியாபிரிவு இஸ்லாமியரின் கடுமையான இறுக்கமான ஆட்சி நடக்கின்றது, அங்கு பெண்களுக்கு பெரும் கட்டுபாடு உண்டு, உடலை மறைக்கும் ஆடைகளும் தலைமுடியினை மறைக்கும் ஹிஜாப்பும் அங்கு பெண்களுக்கு கட்டுபாடானது

சில வாரங்களுக்கு முன் ஒரு மாணவி சரியாக ஹிஜாப் அணியவில்லை என காவல்துறையினர் தாக்க அப்பெண் இறந்தேவிட்டாள், இதை அடுத்து ஹிஜாப் அணியமாட்டோம் என பெண்கள் தலைதுணியினை தூக்கி எறிய பெரும் போராட்டம் வெடித்து சாவு எண்ணிக்கை அதிகரித்தது

ஈரானிட ஆட்சிபீடம் கடும் நடவடிக்கை எடுத்தாலும் பெண்களும் அடங்குவதாக தெரியவில்லை பெரும் எதிர்ப்பும் போராட்டமும் தொடர்கின்றது, 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இன்னும் நிலமை பெரும் கலவரமாக இருக்கின்றது

முடி இருந்தால்தானே தலையினை மறைக்க வேண்டும் என ஈரானிய பெண்கள் தலைமுடியினை வெட்டும் போராட்டத்தை அறிவித்து அது பெரும் அளவில் பரவுகின்றது

இப்பொழுது ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து சுவீடன் நாட்டு பெண் எம்பி பாராளுமன்றத்திலே முடியினை கத்தரித்து கொண்டார்

இது ஐரோப்பாவில் கவனம் பெற ஈரானிய பெண்களுக்கு ஆதரவு குவிகின்றது

பெங்களூர் ஹிஜாப் விவகாரத்திலே இங்கு கள்ளமவுனம் காத்த தமிழக பெண்ணியவாதிகளும், பெரியாரிஸ்டுகளும் மணியம்மை பேத்திகளும் இப்பொழுது வாயே திறக்கமாட்டார்கள்

ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஒருத்தி, எவளாவது ஒரு மணியம்மை பேத்தி தலைமுடியினை வெட்டுவாளா என எதிர்பார்த்தால் எல்லாம் அமைதி

இவ்வளவுதான் இவர்கள் பெண்ணுரிமை

இதுவே உபி இந்து பெண்கள் போராட்டமாக இருந்தால் த்மிழகத்தில் எப்படியெல்லாம் முடிவெட்டி போராடுவார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, இந்து மதம் இப்படியான அடக்குமுறை ஏதும் செய்வதில்லை என்பதால் அவர்களுக்கு அப்படி ஆட வாய்ப்பே இல்லை