உனக்காய் காத்திருக்கின்றது தமிழகம்
தான் பெற்ற முதல் பிள்ளை வாழ்ந்தோங்கி நிற்பதை காண வந்த தந்தையாக, தான் நீர் ஊற்றி வளர்த்தமரம் வியாபித்து நிற்பதை கண்ட விவசாயியாக கிட்டதட்ட 1 வருடம் கழித்து முரசொலி அலுவலகம் வந்திருக்கின்றார் கலைஞர்
அதனை கண்டாலே ஒரு புது உற்சாகம் பிறக்கத்தான் செய்கின்றது.
நிச்சயம் முரசொலியில் கலைஞர் எழுதியது உலக சாதனை கிட்டதட்ட 75 ஆண்டுகள் ஒருமனிதன் எழுதிகொண்டே இருக்க முடியுமா? அவரால் முடிந்தது.
அந்த மாபெரும் சாதனையினை செய்தவர், அந்த சாதனை கூடத்திற்கு வந்த தருணங்களை கண்டபொழுது ஒருவித சிலிர்பு நெஞ்செமெல்லாம் வருகின்றது
அவர் என்னென்ன நினைத்திருப்பார், என்னென்ன பேச துடித்திருப்பார் என ஆயிரம் நினைவுகள் நமக்கு வந்தாலும், அந்த நினைவுகளில் அவர் மூழ்கியிருப்பார் என்றாலும் கலைஞரின் ஸ்பெஷாலிட்டி வேறு
எந்த நினைவுகளிலும், துயரங்களிலும் இருந்து சட்டென எழும்பி வந்து அடுத்து என்ன செய்யலாம் என்பதை மிக அழகாக திட்டமிடுவார், அது அவருக்கு வாய்த்த வரம்.
இப்பொழுதும் அவரின் மனம் அடுத்து செய்யவேண்டியது என்ன என்பது பற்றித்தான் சிந்தித்துகொண்டிருக்கும்.
கலைஞர் ஓரளவு நலம்பெற்றுவிட்டார் என்பதை காட்டும் விஷயம் இது, அந்த நலம் கொடுத்த மருத்துவத்திருக்கும் அவர் நம்பாத கடவுளுக்கும் நன்றி
அவரால் பேசமுடியுமா, எழுத முடியுமா என்பது தெரியவில்லை, அது எப்பொழுது முடியும் என்பதும் சொல்லபடவில்லை.
ஆனால் அவரின் ஒரு புன்னகை போதும், ஒரே ஒரு புன்னகை போதும். அது ஆயிரம் யானை பலத்தை திமுகவினருக்கு கொடுக்கும்.
அந்த பலத்தை கொடுத்துவிடு தலைவா, தமிழகத்தை ஒரணியில் திரட்ட உன்னையன்றி யாருண்டு?
உனக்காய் காத்திருக்கின்றது தமிழகம்
Good joke….