உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள்

பெரும்பாலான நாடுகளில் மதியம் வரைதான் பள்ளி, அதன் பின் மாணவர்கள் அவர்கள் போக்கில் விடபடுகின்றார்கள்

மதிய உணவும் ஓய்வும் அதன் பின்னான நேரத்தில் வீட்டுபாடமும் முடித்துவிட்டு ஹாயாக மாலையில் விளையாடுகின்றார்கள்

கொஞ்சமும் நெருக்குதல் இல்லை, மன உளைச்சல் இல்லை. நெருக்கடி இல்லை, இம்சைகள் இல்லை

உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள் இந்திய குறிப்பாக தமிழக மாணவர்களே

காலை முதல் மாலை வரை பள்ளி, அது முடிந்ததும் டியூசன் அதுவும் முடிந்ததும் வீட்டுபாடம் என பிழியபடுகின்றார்கள் இன்னும் தேர்வு நேரம் என்றால் இன்னும் மகா மோசம்

மாணவர்களை கரும்பு சக்கையாக பிழிகின்றது அச்சமூகம், இவ்வளவு கஷ்டபட்டு படித்து உள்நாட்டில் சரியான வேலை பலருக்கு அமைகின்றதா என்றால் அதுவுமில்லை

மிக ஹாயாக படித்துவந்த வெளிநாட்டுகாரன் அருகில்தான் இவ்வளவு சிரமபட்டு படித்தவனும் வந்து அமர்கின்றான், இந்தியாவில் தேவை இல்லா சமாச்சாரங்கள் பாடத்திட்டத்தில் அதிகம்

மதியம் வரை படிக்க வைத்துவிட்டு, மதியத்திற்கு பின் அவர்களை சுதந்திரமாக விடுவதே அவர்களின் மனநிலையினையும், சிந்தனை திறனையும் அதிகரிக்க செய்யும்ம் என்கின்றது ஆய்வு

ராஜாஜி இதனைத்தான் தமிழகத்தில் அன்றே செய்தார், மதியம் வரை பள்ளிகள் போதும் என்றார், அவர் சொற்படி கேட்ட்டிருந்தால் மாணவ சமூகமும் இப்பொழுது நன்றாயிருக்கும்

இந்த மதிய உணவு திட்டமும் தேவைபட்டிருக்காது

அந்த அருமையான திட்டத்தைதான் குலகல்வி என இல்லா பெயர் சூட்டி அழிச்சாட்டியம் செய்து அவரை விரட்டி அவர் திட்டத்தையும் முடக்கினார்கள்

இன்று ஒவ்வொரு தமிழக மாணவர்களும் படாதபாடு படுகின்றார்கள்

நல்லவேளையாக பள்ளி மாணவர்களுக்கு வோட்டு இல்லை, இருந்தால் திராவிட கட்சிகளுக்கு ஒரு வோட்டும் விழாது