ஏக்நாத் ராமகிருஷ்ன ராணடே

Image may contain: 1 person, glasses and text

மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும்

அப்படியாக பெரியார் சிலைகள் சர்ச்சையில் விவேகானந்தர் மண்டப நினைவும் வந்து போகின்றது

அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம்

விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் மண்டபம் கட்டுவது

உண்மையில் சிகோகோ சொற்பொழிவுக்கு பின் கொழும்பு வழியாக அவர் வந்து இறங்கிய மண்டபம் கடற்கரையில்தான் கட்டியிருக்க வேண்டும், ஆனால் கன்னியாகுமரி இந்திய எல்லை என்பதால் அந்த பாறை தேர்வானது

அது அதுவரை ஸ்ரீபாத மலை. அதாவது உமாதேவியின் பாதம் பதிந்த பாறை என்றுதான் அழைக்கபட்டது

எல்லாம் நன்றாக தொடங்கியபொழுது சிக்கல் குமரி கிறிஸ்தவர் வடிவில் வந்தது. திடீரென சிலுவை நட்டு இது பிரான்சிஸ் சேவியர் பாறை என்றார்கள். பிரான்ஸிஸ் சேவியர் மணப்பாட்டில் வாழ்ந்தவர், கோட்டாரில் போதித்தவர்

இந்த பாறைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை

ஆனால் கிறிஸ்தவர் கொடிபிடித்தனர், ஆச்சரியமாக அவர்களை விரட்டிவிட்ட கேரளத்தவரும் கொடிபிடித்தனர் பெரும் கலவர சூழல் ஆயிற்று

முதல்வர் பக்தவச்சலம் விவேகானந்தர் மண்டபமும் வேண்டாம், சேவியர் சிலுவையும் வேண்டாம் அமைதி முக்கியம் என அறிவித்துவிட்டார்.

இந்து கிறிஸ்தவ மோதலை தடுக்க அவருக்கும் வேறுவழி தெரியவில்லை

ஆர்.எஸ்.எஸ் மராட்டியத்திலிருந்து ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பியது, அவர் கடப்பாரையோடு வந்து சேவியர் பாறையில் நிற்கவில்லை, கரசேவை எல்லாம் செய்யவில்லை

நிலமையினை புரிந்து கொண்டு பக்தவத்சலத்தை சந்தித்தார், முதலில் கடுமையாக இருந்த பக்தவத்சலத்தை நேருவினை சந்தித்து பேசசெய்தார், எல்லா மக்களும் ஒத்துழைத்து அமைதியாக ஒப்புகொண்டால் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை என்றால் பக்தவச்சலம்

அடுத்த சிக்கல் மத்திய அமைச்சர் ஹிமாயுன் உருவில் வந்தது, சுற்றுசூழல் கெடும் விவேகானந்தர் மண்டபத்தை அனுமதிக்கமுடியாது என்றார்.

அந்த அமைச்சரின் சொந்த தொகுதி வங்காளம்

ராணடே அங்கு சென்றார், வங்கத்தின் தங்கமகனுக்கு குமரியில் சிலைவைக்க ஹிமாயுன் மறுக்கின்றார் இது நியாயமா? என கேட்டார், வங்கம் பொங்க பல்டிஅடித்து எனக்கு பிரச்சினையே இல்லை என்றார் அமைச்சர்

ராண்டே அதன்பின்னும் சாதுர்யம் செய்தார், விவேகானந்தர் இல்லம் அமைக்கும் குழுவில் இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ் தவிர எல்லா மத மக்களையும் சேர்த்தார். குறிப்பாக திமுகவின் அண்ணாதுரையினை அவர் சேர்த்தது மாபெரும் சாதனை

திமுக எப்பொழுதும் இந்துக்களின் மூடபழக்கத்தை, சாதியினை சாடும். விவேகானந்தர் போன்ற துறவிகளை அது மறுக்காது, நல்ல இந்து விவேகானந்தர் போன்று இருக்கவேண்டும் என்பது கலைஞரே சொன்னது

அப்படி எல்லா தரப்பும் விவேகானந்தர் இல்லகுழுவில் வந்தபின், நாடு முழுக்க கையெழுத்து திரட்டினார். பல கோடிபேர் கையெழுத்திட்டனர். நாட்டு அம்மக்களின் அபிமானம் இது என அவர் அரசிடம் சொன்னபின் அரசுகளுக்கு தயக்கமில்லை

அதன் பின் மகா அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தினா ராண்டே, ஆம் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என எல்லோரிடமும் நிதி திரட்டினார். “பணம் சிக்கல் இல்லை, 50 பைசா கொடுத்தாலும் அவர்கள் பங்களிப்பு உண்டல்லவா? அதுதான் நமக்கு வேண்டும்” என்றார்

உண்மையில் கிறிஸ்தவர்களும் அள்ளி கொடுத்தனர், விவேகானந்தரை தேசிய அடையாளமாக கருதினர். கிறிஸ்தவர்கள் நன்கொடையினை பல இடங்களில் ராணடே பெற்றபின் குமரிமாவட்ட கிறிஸ்தவ கொந்தளிப்பு அடங்க தொடங்கியது

எல்லா மதத்தாரும், இந்தியாவின் எல்லா மாநிலத்தாரும் இணைந்து அல்லது ராணடேவால் ஒற்றுமையாக கொண்டுவரபட்டபின்பே குமரியில் அம்மண்டபம் எழுந்தது

அம்மண்டபத்தை பார்க்கும்பொழுதெல்லாம் அந்த ராணடே எனும் மாமனிதன் நினைவுக்கு வருவார். இந்து விவேகானந்தர் எனும் அடையாளத்தை இந்த பாரதத்தின் பெருமகன் என்ற அடையாளமாய் மாற்றி அச்சாதனையினை செய்தார் ராணடே

பெரும் கலவர சூழலை தடுத்து, ஒரு துளி ரத்தமின்றி, வன்முறையின்றி மிக சாதுர்யமாக எல்லா மக்களையும் அணைத்து சென்று அந்த மண்டபத்தை அமைத்த அந்த ராணடே நிச்சயம் வரலாற்றில் நிற்கின்றார், மண்டபம் இருக்கும் அளவும் அவர் பெயரும் இருக்கும்.

அவர் மட்டும் கொஞ்சம் சறுக்கி இருந்தால் குமரி, கேரளம், மிசோரம், நாகலாந்து என கிறிஸ்தவர் வாழும் பகுதி எல்லாம் ரணகளம் ஆகியிருக்கும், மாபெரும் ரத்த ஆறு மதத்தின் பெயரால் ஓடியிருக்கும்

அதனை காத்து, அப்பாறை ஸ்ரீபாத பாறையே அதில் கிறிஸ்தவருக்கு உரிமை இல்லை என்பதை நிறுவி, அதிலும் மொத்த இந்திய மக்களின் அபிமானத்தோடும், அவர்களின் நன்கொடையோடும் அம்மண்டபத்தை அமைதியாக கட்டி காரணமான அந்த ராணடே போன்ற நல்ல மனிதர்கள் அன்று இருந்திருக்கின்றார்கள்

ஒருவேளை கிறிஸ்தவர்களுக்கு உரிமை இருந்து அதில் ஆலயம் இருந்தால் சிக்கலே வந்திருக்காது, சிக்கல் விவேகானந்தர் மண்டபம் அமையும் பொழுது கிறிஸ்தவர் சர்ச்சை செய்ததால் வந்தது

ராணடே மிக திறமையாக அதை சமாளித்தார்

இந்து அமைப்புகளில் அப்படிபட்ட மாமணிகளும் இருந்திருக்கின்றன‌

இன்றுள்ள எச்.ராசா போன்றவர்களை நினைத்தால் நமக்கல்ல, அவர்களுக்கே வெறுப்பு வந்தாயிற்று

இந்து அமைப்புகள் இதனை எல்லாம் மனதில் கொண்டால் நல்லது

ராணடே போன்றவர்களை உருவாக்குங்கள், எச்.ராசா, தமிழிசை இன்னபிற சர்ச்சைகள் போன்றவர்களை அனுமதித்து பெரும் கலவரத்தினை உருவாக்கிவிடாதீர்கள்

நல்ல வேளையாக 1963ல் இந்த கோஷ்டிகள் இல்லை, இருந்திருந்தால் இந்திய பெருங்கடல் சிகப்பு நிறமாக மாறியிருக்கும்

இன்று அந்த மாமனிதர் நினைவுநாள், இந்தியாவில் சர்ச்சைகளின்றி கலவரமின்றி சில அடையாளங்களை காக்க முடியும் என செய்து காட்டியவர்

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்