ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 06

“ஞான வொளிவிளக்கா னல்லவமிர்
துண்ணில்ஆன சிவ யோகி யாம்”

இக்குறள் ஞான ஒளி விளக்கான நல்ல‌ அமிர்துண்ணில் ஆன சிவ யோகியாம்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது ஞான விளக்கு போன்ற அமிர்தம் (அன்னாக்கில் சுரக்கும் திரவம்) உண்டால் சிவயோகியாக மாறலாம் என்பது பொருள்சிவயோகி எனும் நிலைக்கு சிவனில் கலந்த யோகி என பொருள், யோகத்தின் உச்சியில் தன்னை உணர்ந்து அதனால் சிவனையும் உணரும் பெருஞான நிலைக்கு சிவயோகி என பெயர், அந்த யோகநிலையில் உள்ளவர்களால் மாபெரும் அதிசயங்களையும் மாயங்களையும் சிவனருளால் எளிதாக செய்யமுடியும் , முக்தி அவர்களுக்கு தூரமில்லை

சிவயோகி என்பவரில் சிவனே வசிப்பார் என்பது ஒன்றும் புதிதல்ல, யோகம் செய்ய செய்ய சிவன் எனும் பிரபஞ்ச பெரும் சக்தி ஒருவனுக்குள் இறங்க ஆரம்பிக்கும், அவன் இறைதன்மையில் முழுக்க கலந்துவிடுவான், கடலில் இட்ட உப்பு போல இறைசக்தியும் அவனும் பிரிக்கமுடியா பெரு நிலையினை அடைவார்கள்

அந்த நிலையினை அடைய துரிய சக்கரத்தில் நினைவை நிறுத்தி அன்னாக்கில் ஊறும் அமிர்தத்தை பருகுதல் வேண்டும் என்கின்றார் ஒளவை மூதாட்டி

மது மதியினை மயக்கும், ஆனால் இந்த அமிர்தம் மதிக்கு ஒளிகொடுக்கும் இதனால் அதனை ஞான விளக்கு என்கின்றார் ஒளவையார்

ஒரு துளி விஷமே உடலை முடக்கி உயிர்பறிக்க முடியும் என்றால், போதை பொருள் துளியால் மானிட மூளையினை மயக்கமுடியும் என்றால், உடலில் உருவாகும் நோய்கள் உயிரை பறிக்கமுடியும் என்றால் உடலில் உருவாகும் ஒரு துளி நல்ல அமிர்தத்தால் உடல் தன்மையே மாறி நாடியும் மூளையும் துலங்கி தெய்வீக தன்மையினை பெறமுடியும் அல்லவா?

அதைத்தான் இங்கு குறிப்பிட்டு சொல்கின்றார் ஒளவை மூதாட்டி

ee translation0People reached1Engagement–Distribution scoreBoost post

11