ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத தாரணை/ குறள் : 08
“காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து”
இவ்வரி “கால அணல் ஊக்கம் கலந்த அமிர்து உண்ணில் ஞான மதுவாய் நயந்து” என பொருள்தரும்
“கால” என்றால் இங்கு காற்றை குறிப்பது
ஒளவையார் தன் அகவலில் “காலால் எழுப்பும் கருத்தறிவித்தே” என்கின்றார், கம்பன் தன் ராமாயணத்தில் “இக் கருங் கடல் கடந்தது என் காலினால்” என அனுமன் சொன்னதை சொல்கின்றார்
இங்கு காற்று என்பது மூச்சுகாற்றின் பிரயாணாமத்தை குறிப்பது, அந்த பிரயாணமும் அணலும் கலந்த எழுச்சி (ஊக்கம்) அமிர்தம் கொடுக்கும் என சொல்லும் ஒளவையார், இந்த அமிர்ந்தம் ஞானத்தை தேன்(மது) போல் இனிமையாக கொடுக்கும் என்கின்றார்
மூச்சு காற்றின் சக்தியும் மூலாதாரத்தில் இருந்து எழும் அக்னியும் கலந்து அந்த சக்தி உச்சி துரிய சக்கரத்துக்கு ஊக்கமுடன் செல்லும் பொழுது அமிர்தம் ஊறும், அந்த அமிர்தம் ஞானத்தை கொடுக்கும், தேனின் இனிமை போல அந்த ஞானம் மிக மிக எல்லோராலும் விரும்பபடும் விஷயமாக இருக்கும் என்பது ஒளவை போதிக்கும் தத்துவம்
ஒவ்வொரு குறளும் அருமையான விளக்கம். இதை வாசி யோகம் என்று கூறுவர்.வாசியோகம் என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும்.
விளக்கம்…. வணக்கம் 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏