ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 08

“காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து”

இவ்வரி “கால அணல் ஊக்கம் கலந்த அமிர்து உண்ணில் ஞான மதுவாய் நயந்து” என பொருள்தரும்

“கால” என்றால் இங்கு காற்றை குறிப்பது

ஒளவையார் தன் அகவலில் “காலால் எழுப்பும் கருத்தறிவித்தே” என்கின்றார், கம்பன் தன் ராமாயணத்தில் “இக் கருங் கடல் கடந்தது என் காலினால்” என அனுமன் சொன்னதை சொல்கின்றார்

இங்கு காற்று என்பது மூச்சுகாற்றின் பிரயாணாமத்தை குறிப்பது, அந்த பிரயாணமும் அணலும் கலந்த எழுச்சி (ஊக்கம்) அமிர்தம் கொடுக்கும் என சொல்லும் ஒளவையார், இந்த அமிர்ந்தம் ஞானத்தை தேன்(மது) போல் இனிமையாக கொடுக்கும் என்கின்றார்

மூச்சு காற்றின் சக்தியும் மூலாதாரத்தில் இருந்து எழும் அக்னியும் கலந்து அந்த சக்தி உச்சி துரிய சக்கரத்துக்கு ஊக்கமுடன் செல்லும் பொழுது அமிர்தம் ஊறும், அந்த அமிர்தம் ஞானத்தை கொடுக்கும், தேனின் இனிமை போல அந்த ஞானம் மிக மிக எல்லோராலும் விரும்பபடும் விஷயமாக இருக்கும் என்பது ஒளவை போதிக்கும் தத்துவம்