ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 02
“ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து
பூசனைசெய் துள்ளே புணர்”
இக்குறள் “ஆசனத்தை கட்டி அரன் தன்னை அர்ச்சித்து பூசனை செய்து உள்ளே புணர்” என பிரியும்
ஆசனம் என்றால் அமரும் முறை, இங்கு பத்மாசனம் எனப்படும் காலை மடக்கி அமரும் தவகோலத்தை குறிக்கின்றார் ஒளவையார்
(பூசனை என்றால் பூஜை வழிபாடு)
அப்படி சரியாக அமர்ந்து கொண்டு சிவனை மனதால் அர்ச்சித்து பூஜித்த்து ஆத்மாவினை சிவனுடன் சேர்த்தல் (புணர்) வேண்டும் என்கின்றார் ஒளவையார்
இக்குறளின் பொருள் இதுதான்
பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு நேராக முதுகை வைத்து கொண்டு மனதில் சிவனை நிறுத்தி மனதால் பூஜித்து அந்த சிவனுடன் ஆத்மாவினை கலக்க வேண்டும் என்பது பொருள்
இந்த ஞானகுறள் யோகத்தால் இறைவனை அடைவதை விளக்கும் நூல் என்பதால் திருமந்திரம் போல யோகத்தால் இறைவனை அடையும் வழியினை போதிக்கும், அதனால் வழிபாடுகளை இப்படி யோக நிலையில் ஆத்மார்த்தமாக செய்ய அது போதிக்கின்றது
தினசரி தியானம் இருபது நிமிடங்கள். சூரிய நமஸ்காரம் பன்னிரெண்டு குறைந்தபட்சம்…..பத்மாசனம் போட்டு சுந்தரகாண்ட பாராயணம் அரைமணி….அவ்ளோதான்………………..நன்மைகள்……மனசுக்கு இதம், சந்தோஷம், ஆரோக்யம், நிம்மதி ஒருசேர கிடைக்கிறது….இதுக்கு மேல என்ன வேணும்?!!!