ஓசாமா பின்லேடன்
அவர் பெரும் பணக்காரர் வெளிநாட்டில் படித்தவர் ஆனால் பெரும் இஸ்லாமிய மார்க்கவாதி
1930களில் இருந்தே அரபுலகில் நடக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா மட்டும் காரணம் என்பதை 1980களில் ஆப்கனில் உணர்ந்தவர்
அதுவரை தான் உண்டு தன் தொழில் உண்டு மார்க்கம் உண்டு என சவுதியில் இருந்தவர்தான், என்று ஆப்கனில் ரஷ்யா வந்தவுடன் உலக முஸ்லீம்களே ஒன்றுபடுவீர் என்ற அமெரிக்கா அழைத்ததோ அதற்கு முன்பாகவே ஆப்கன் சென்றவர்
அவருக்கு ஒரு கனவு இருந்தது, இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் அடிமையாக அல்லது அச்சுறுத்தலுடன் வாழ்கின்றார்களோ அவர்களை எல்லாம் விடுவிக்க வேண்டும்
இக்கனவில்தான் ரஷ்யபடைகளை எதிர்த்து ஆபகனில் களம் கண்டார் , சிஐஏ கண்களில் பட்ட திறமையான மனிதர் பணத்திற்கு குறைவில்லாதவர், அர்பணிப்பானவர் என்பதாலும் அன்று அமெரிக்கா வளைத்தது
ஓசாமா பின்லேடன் என்பவர் அவர்
ஆப்கனில் ரஷ்ய படைகளை விரட்டியதில் பெரும்பங்கு அவருக்கே இருந்தது, ஆப்கன் விடுவிக்கபட்டதும் இனி இஸ்லாமியர் எல்லோரும் ஆளாளுக்கு வீட்டுக்கு போங்கள் என அறிவித்தது அமெரிக்கா
பின்லேடனின் கனவு அதுவா? அப்படையினை அப்படியே பெருக்கி பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம்
அதுவரை நண்பர்களாக இருந்த புஷ்ஷும் பின்லேடனும் அப்பொழுது முறைக்க தொடங்கின
வெறுப்புடன் சவுதி திரும்பினார் லேடன் ஆனால் அவரின் இயக்கமும் மெம்பர்களும் தொடர்பிலே இருந்தனர்
ஆப்கன் யுத்தத்தை தொடர்ந்து ஈராக் யுத்ததிற்கு தயாரானார் புஷ், அமெரிக்க ராணுவதளம் சவுதியில் அமைய இருந்தது
நேரடியாக சவுதி அரசரிடமே கோரிக்கை வைத்தார் பின்லேடன், அமெரிக்காவினை அனுமதிக்காதீர் அவர்கள் நயவஞ்சகர்கள் , கடைசி சொட்டு எண்ணெய் இருக்கும் வரை கிளம்பமாட்டார்கள், வேண்டவே வேண்டாம் என மன்றாடினார்
அப்படியானால் சதாம் நாளை சவுதியினை அடித்தால் எப்படி தடுப்பது என கேட்டார் மன்னர்
சதாம் நம் பக்கம் வரமாட்டார், என்னிடமும் படை உண்டு, ரஷ்யரையே விரட்டிய படை அது. அடித்தாலும் அணைத்தாலும் நமக்குள்ளே முடிந்துவிடும், அமெரிக்காவினை அழைத்தால் அடிமைதளை நிச்சயம் என அவர் சொன்னதெல்லாம் சவுதி மன்னர் காதில் வாங்கவில்லை
இதே 1991 ஆகஸ்ட் 7ல் சவுதியில் அமெரிக்கபடை இறங்கியது, பின்லேடன் வெளியேறினார்
அன்றிலிருந்து அவருக்கு பெரும் ஆத்திரம் வந்தது, புனிதமான இஸ்லாமிய பூமியான சவுதியில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற கங்க்ணம் கட்டினார்
நாட்டாமை படத்து பொன்னம்பலம், இல்லை அடிமைபெண் அசோகன் போல இந்நாளில் சூடுஎல்லாம் அவர் போடவில்லை மாறாக அமெரிக்காவிற்கு இதே நாளில் தாக்குதல்களை தொடுத்தார்
பெரிதும் சிறிதுமான தாக்குதல்களில் சில சொதப்பின சில வெற்றிபெற்றன, ஒரு தாக்குதல் உலகை மிரட்டியது
பின்லேடன் என்பவர் சாதாரண நபர் அல்ல என்பதை முதன் முதலில் அதுதான் காட்டியது
ஆம், ஆப்ரிக்காவில் அப்பொழுது நடமாடிய பின்லேடன் தான்சானியா மற்றும் கென்யாவில் இருந்த அமெரிக்க தூதரகங்களை குறிவைத்தார்
பாதுகாப்பு குறைபாடுகளுடனும் இங்கு யார் நமக்கு எதிரி என்றும் அமெரிக்கா இருந்த காலம் அது, அசால்ட்டாக அடித்தார் பின்லேடன்
வெடிகுண்டு நிரம்பிய டிரக் மோத இரண்டு தூதரகங்களும் தகர்க்கபட்டன, கிட்டதட்ட 250 பேர் பலி
உலகம் அலறியது, அமெரிக்கா அதிர்ச்சியில் உட்கார்ந்தது, தான் மிகபெரும் போரை தொடுத்திருப்பதாக அறிவித்தார் பின்லேடன்
அதன் பின் பின்லேடனை தீவிரமாக அமெரிக்கா தேட தாலிபான்களின் ஆப்கனில் வீட்டோடு மருமகனாக போய் அமர்ந்தார்
எனினும் பின்னால் மோப்பம் பிடித்த அமெரிக்கா அவர் இருப்பிடத்தை ஏவுகனை மூலம் தாக்கியும் அவர் தப்பினார்
இந்த தாக்குதலின் தொடர்ச்சிதான் அடுத்த 3 ஆண்டுகளில் உலகை உலுக்கிய, அமெரிக்காவின் மாபெரும் அடியான இரட்டை கோபுர தகர்ப்பு
அதற்கு முன்பே அமெரிக்காவிற்கு பலத்த எச்சரிக்கையினை கொடுத்தது இந்த கென்ய தான்சானிய தாக்குதல்
உலக வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் இது, பின்லேடன் மிகபெரும் சக்தியாக உருவெடுத்த இடம் இது
ஆனால் இதே பின்லேடன் ஆப்கனில் ரஷ்யபடைகளை இதே பாணியில் விரட்டும்பொழுது போராளி என அமெரிக்காவால் கொண்டாடபட்டார்
அதே தாக்குதலை அமெரிக்கா மேல் தொடுத்தபொழுது தீவிரவாதி என சித்தரிக்கபட்டார்
வல்லோன் உருவாக்கியதே பிம்பம் என்பது இதுதான்