கஜினி முகமது
கஜினி முகமது மகா உத்தமன் என்றும், இந்து பிராமண பூசாரிகளே சோமநாதபுரி ஆலயத்தை இடித்ததாகவும் சிலர் கதை எழுதி வருகின்றார்கள்
ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான்
அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான்
அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் நொறுக்க்கி தேடினார்கள்
உலக வழக்கம் இது
ஆப்கனின் கஜினி எனும் ஊரில் இருந்த முகமது எனும் அரசனும் அதை செய்யவே இந்தியா வந்தான்
கிட்டத 17 முறை அவன் படையெடுத்தான் , சிலமுறை தோல்வி சிலமுறை சிறிய வெற்றி
அவன் ஒன்றும் மாவீரன் அல்ல, அப்படி இருந்திருந்தால் இங்கே தன் சாம்ராஜ்யத்தை அமைத்திருப்பான், அவனோ சிறிய குழுவோடு வந்து கொள்ளையிட்டு ஓடிபோகும் கொள்ளையனாய் இருந்தான்
சோமநாதபுரம் ஆலயத்தை அப்படி கொள்ளை இடத்தான் வந்தான், வந்த இடத்தில் காந்த கல்லின் நடுவில் தொங்கும் லிங்கத்தை கண்டான்
அந்த கோவிலின் கருவறை அப்படி விஞஞான அறிவில் அமைக்கபட்டது, லிங்கம் இரும்பாலானது
சுற்றிலும் இருந்த காந்த கற்களின் மையபுள்ளியில் அது நிறுத்தபட்டு அந்தரத்தில் நின்றது. அப்படி ஒரு அறிவு அன்றே இந்தியாவில் இருந்திருக்கின்றது
அந்த மாயமே அங்கு காணிக்கை கொட்டி கிடக்க காரணமாயிருந்தது
எல்லோரும் அஞ்சி நடுங்கியபொழுது அந்த காந்த கல்லை அவன் இடிக்க லிங்கம் விழுந்தது
ஆனால் இந்து பக்த கோடிகளோ சிவபெருமானே விழுந்ததாக அஞ்சி ஓடினர்
உற்சாகம் கொண்ட கஜினி அங்கிருந்த பொன் பொருளை எல்லாம் கொள்ளை அடித்தபின், எல்லா தூண்கள் உள்ளும் பொக்கிஷம் மறைந்திருக்கலாம் என உடைத்து தேடினான்
அக்கோவில் சிதைந்தது இப்படித்தான்
கஜினி முகமது ஒன்றும் உத்தமன் அல்ல, அவன் சோமநாதபுர ஆலயத்தை இடிக்கவில்லை இந்துக்களே இடித்தனர் என சில குபீர் வரலாற்றாசிரியர்கள் சொல்வது உண்மையும் அல்ல
இந்துக்களில் சில பொய்யர்கள் இருக்கலாம், அதற்காக உண்மை இதோ என சில படுபயங்கர பொய்யர்கள் கிளம்புகின்றார்கள், இவர்கள் அங்கிள் சைமனை விட ஆபத்தானவர்கள்
(ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், சோமநாதபுரத்து செல்வத்தை கொண்டு ஆப்கன் கஜினியினை அவர் சீர்படுத்தினான் , அழகுபடுத்தினான்
என்னாயிற்று?
இன்றுவரை அது கலக பூமி, நிம்மதி என்பது ஒரு காலமுமில்லை, மங்கோலியர், ரஷ்யர் முதல் அமெரிக்கர் வரை யாரெல்லாமோ வந்து அடிக்கின்றார்கள்
சிவன்சொத்து குலநாசம் என்பது இதுதான்)