கம்பன் கழகங்கள் தமிழகத்திலும் பெருகிட வேண்டும்
மலேசியாவில் கம்பன் கழகம் உண்டு, அடிக்கடி கம்பன் புகழைபாடுவார்கள்
இலங்கை கொழும்பிலும் கம்பன் கழகம் உண்டு, கம்பன் சொன்ன வாழ்வியல் நெறிகள் என வள்ளுவனுக்கு அடுத்து அவனை கொண்டாடுகின்றார்கள்
ஆஸ்திரேலியா முதல் பல நாடுகளில் கம்பன் கழகமும் அவனுக்கு விழாக்களும் நடத்தபடுகின்றன
தமிழின் சுவையினை சாறு பிழிந்து கொடுத்தவன் என உலகெலாம் அவனை தமிழர் கொண்டாடுவது போலவே முன்பு தமிழகத்திலும் கொண்டாடியிருக்கின்றனர்
எதுவரை? இந்த திராவிட அழிச்சாட்டியம் தலையெடுக்கும் வரை
அவர்கள் அதுவரை கொண்டாடிய கம்பனை பழித்தார்கள், காரணம் கம்பனை பற்றி சொன்னால் கம்ப ராமாயணம் வரும், ராமன் வருவான்
இந்த ஒரு காரணத்திற்காக அந்த கம்பனை விமர்சித்தார்கள், கிழித்தெறிந்தார்கள்
“கம்ப ரசம்” எனும் கீழ்தரமான இலக்கியம் எழுதி கம்பனை கொச்சைபடுத்தினார் அண்ணா, அவரின் அடிபொடிகளும் அதனையே செய்தனர்
கலைஞர் சில இடங்களில் கம்பனை சொன்னார் அத்தோடு சரி
அதன் பின் ராமசந்திரன் ராமனாகவும், ஜெயா சீதையாகவும் போற்றபட்டு பின் என்னவெல்லாமோ ஆயிற்று
திராவிட கும்பல் தொடங்கிவைத்த கம்பன் புறக்கணிப்பில் கம்பனை தமிழகம் மறந்தே விட்டது
ஆனால் திராவிட கும்பல் பாதிப்பு இல்லா வெளிநாட்டு தமிழர்களிடம் கம்பன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், நம்மை விட அவனை அவர்கள் அட்டகாசமாக கொண்டாடுகின்றார்கள்
இதனால் அவர்கள் தமிழும் அதன் அழகும் நம்மை விட பன்மடங்கு நன்றாய் இருக்கின்றது
திராவிட கும்பல் எவ்வளவு தூரம் கடவுள் புறக்கணிப்பிற்காக அழகிய தமிழ் இலக்கியங்களை கொச்சைபடுத்தி இருக்கின்றன என்பதை சில இடங்களில் உணரமுடிகின்றது
அவர்கள் பாதிப்பில்லா வெளிநாட்டு தமிழர்கள் கம்பனையும் அவன் தமிழையும் அப்படி கொண்டாடுகின்றார்கள், அழகாகத்தான் இருக்கின்றது
வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து இப்படி தமிழக தமிழர்கள் நல்ல விஷயங்களை கற்க வேண்டும்
ஆனால் பிரபாகரன், சயனைடு குப்பி, தற்கொலை படை என ஆபத்தானதை கற்று இன்னும் மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது தமிழகம்
இதனிலிருந்து தமிழரை மீட்டல் வேண்டும்
கம்பன் கழகங்கள் தமிழகத்திலும் பெருகிட வேண்டும், தமிழும் அதன் சுவையும் வளரவேண்டும்