கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும்

Image may contain: 1 person, text

கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் ; ராணுவ தளபதி கோரிக்கை

இந்திய ராணுவத்தில் மிக சிறந்த ஜெனரல்களாக கருதபடுபவர்கள் கரியப்பாவும், மானெக்ஷாவும்.

இருவர்தான் இன்றளவும் பீல்டு மார்ஷல் என்ற தகுதியினை பெற்றவர்கள், வேறு யாரும் பெறவில்லை

அந்த பெரும் பெருமையினை பெற்ற கரிப்பாவினை, பல போர்களில் நாட்டினை காப்பாற்றிய அந்த மாவீரன் கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கபடுகின்றது

கரியப்பாவிற்கு ஏன் பாரத ரத்னா வழங்கபடவில்லை

அது கொஞ்சம் விவகாரமான விஷயம். அதாவது 1960களில் சீனா பற்றி எச்சரித்தனர் ராணுவத்தார் அதில் கரியப்பாவும், திம்மையாவும் முக்கியமானவர்கள்

ஆனால் நேரு அந்த விவகாரத்தை கையாள கிருஷ்ணமேனன் எனும் திமிர்பிடித்த அதிகாரியினை நியமித்தார். கிருஷ்ணமேனன் படித்தவரே தவிர் கொஞ்சமும் உருப்படியான திட்டம் இல்லாதவர்

அவர் தனக்கு கைகட்டி நின்ற கவுல் என்பரை வைத்து ஆடிய ஆட்டம்தான் சீன போர், அதனால் கிடைத்ததுதான் படுதோல்வி.

சீனபோர் தோல்விக்கு முதல் காரணம் கிருஷ்ண மேனன் என்பவரும் அவரை முழுக்க நம்பிய நேருவும் என்பதுதான் உண்மை. அது போர் அல்ல சும்மா வெறும் குழப்பம் என நேருவினை நம்ப வைத்து ஏமாற்றியது அந்த கிருஷ்ண மேனனே.

சீனா போருக்கு தயாராகின்றது, நாமும் தயாராக வேண்டும் என்றார் கரியப்பா, நேரு காதில் வாங்கவில்லை, ரஷ்யா வரும் என்ற மிதப்பில் இருந்தார்

ரஷ்யா கியூப ஏவுகனை சர்ச்சையில் கென்னடியுடன் உரசிகொண்டிருந்த நேரத்தில் மிக சரியாக இந்தியாவோடு யுத்தம் தொடங்கினார் மாவோ

விளைவு ரஷ்யா வரவில்லை ,மாறாக “சீனா தம்பி இந்தியா நண்பன்” என சொல்லிவிட்டது. அதனால் இந்தியாவிற்கு கிடைத்ததுதான் மாபெரும் தோல்வி

ராணுவ வீரனான கரியப்பாவும் திம்மையாவும் நேருவிற்கு எதிரான மனநிலையில் பேசினதால், அவர்கள் காங்கிரஸ் எதிர்கள் ஆயினர்

அதனால்தான் இன்னும் பாரத ரத்னா விருது வழங்கபடவில்லை

என்ன தேசம் இது? பாரத ரத்னா சர்ச்சைகள் கொஞ்சமல்ல‌

அம்பேத்கருக்கு 1990ல்தான் வழங்கினார்கள், பட்டேலுக்கு அதற்கும் பின்பு.

கரியப்பாவிற்கு வழங்கபடவே இல்லை

அம்பேத்கருக்கும், பட்டேலுக்கும் முன்பே பாரத ரத்னா வாங்கியது யார் தெரியுமா?

நம்ம ஊர் ராமசந்திரன்.

அப்படி இந்த நாட்டிற்கு ராமசந்திரன் என்ன கிழித்தார் என்பது காங்கிரசுக்கே வெளிச்சம். அதாவது ஓட்டு கணக்கு

பாஜக அரசாவது கரியப்பாவிற்கு உரிய மரியாதையினை கொடுக்கட்டும்

ஒன்று பாரத ரத்னா விருது செல்லாது என அறிவிக்கட்டும் அல்லது ராமசந்திரனுக்கு கொடுக்கபட்டது பறிக்கபட்ட பின் கரியப்பாவிற்கு வழங்கபடட்டும்

அப்படி செய்தால் மட்டுமே கரியப்பாவிற்கு செய்யும் மிக பெரும் மரியாதையாகும்