கலப்பு திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்த மாநிலம்
இதனை உஷா ராஜேந்தர் சொல்லியிருந்தால் எவ்வளவு செலவு அனாலும் பரவாயில்லை என ராம்ஜெத்மலானியினை ஜாமீனுக்கு வாதாட தயாராக இருக்க சொல்லலாம்..
தமிழகத்தில் பகுத்தறிவு ஊன்றபட்டு வளர்க்கபட்டு அது மரமாயிற்று என்றார்கள், பெரியார் மண் இது என்றார்கள், இந்தியாவில் கலப்பு திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்த மாநிலம் இது என்றேல்லாம் ஏக பெருமை பேசும் தமிழ்நாடு இது
அப்படிபட்ட மாநிலத்தில் ஒரு மாபெரும் கொடுமை நடந்திருக்கின்றது, நம்புங்கள் அப்படி ஒரு செய்தி இதுவரை ஆப்கானினும், பாகிஸ்தானின் பலுசிஸ்தான், வர்சிஸ்தானிலும்தான் நடைபெற்றதாக வரும். சில தமிழ்படங்களின் கற்பனைகளில் உண்டு
ஆனால் தமிழகம் நேரில் காணுமளவு அப்படி ஒரு அறிவிப்பு தூத்துகுடி மாவட்டம் புன்னைக்காயல் கிராமத்தில் நடந்திருக்கின்றது
அக்கிராமத்து பெண்களில் சிலர் காதல் திருமணம் செய்தார்களாம், மொத்தம் 12 பேர் உண்டாம். காதல் திருமணம் செய்தவர்கள் அந்த கிராமத்திற்கு வந்தார்களாம்,சிலர் தங்கினார்களாம்
அவர்கள் சொந்த வீட்டுக்கு அவர்கள் வந்திருக்கின்றார்கள். இதில் ஊர் மானம்,மரியாதை எல்லாம் கெட்டு அகில உலகமும் சிரிப்பதாக ஊர் கமிட்டிக்கு தகவல் சென்றதாம்
ஈரானிய, ஆப்கானிய முல்லாக்கள் போல திரண்ட ஊர் கமிட்டியில் அப்பெண்களால் நிராகரிபட்ட சிலர் இருக்கலாம் போல, பலமாக தீர்ப்பு சொல்லிவிட்டார்கள் அதே ஸ்டைலில்
நீங்கள் 12 பேரும் உடனே ஊரைவிட்டு செல்ல வேண்டும், அதுவரை இங்கு யாரிடமும் பேசகூடாது, தண்ணீர் கூட யாரும் தரமாட்டோம் என மிரட்டியிருக்கின்றார்கள்
அதோடு விடவில்லை வீடு வீடாக சென்று வேறுசாதியில் கட்டிகொண்ட இந்த பெண்களை விரட்டுவோம் , இனி அவர்கள் ஊருக்குள்ளே வரகூடாது என்றேல்லாம் அறிவித்திருக்கின்றார்கள்
அந்த புன்னைக்காயல் ஊர்கமிட்டியின் இந்த அழிச்சாட்டியத்தால் பெரும் பரபரப்பு வந்தாயிற்று. இந்த கமிட்டி செய்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. கலப்பு திருமண சட்டத்திற்கு எதிரானது, சட்டமீறல்
அவ்வகையில் இந்த கமிட்டியினை பிடித்து கம்பி எண்ண வைப்பதே சரி. தங்கள் ஊர் பெண்கள் என்பதற்காக எங்கள் விருப்பபடி நீங்கள் வாழவேண்டும் என்பதெல்லாம் முதுகில் டின் கட்டவேண்டிய விஷயம்
இன்னும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்த தெரியவில்லை, ஒருவேளை எடுத்தால் என்னாகும்?
“எங்கள் பெண்களின் மானம் காக்க எங்களுக்கு தனிநாடு வேண்டும், இந்திய ஏகாதிபத்தியம் எங்கள் பண்பாட்டை சிதைக்கின்றது, பாரம்பரியத்தை அழிகின்றது” என அந்த ஊர்கமிட்டி கிளம்பாதவரை நல்லது
தாங்கள் விரும்பியவர்களை அப்பெண்கள் மணந்ததற்கு பூரா பயலும் வேலைவெட்டிக்கு செல்லாமல் கமிட்டி போட்டு பேசியுள்ளான், அவ்வளவு வெட்டிகள் அந்த ஊரில் இருக்கும் போலிருக்கின்றது.
இந்த கமிட்டியில் உள்ளவர்களை மனநல சிகிசைக்கு அனுப்பினால் அவர்கள் அனைவரும் காதல் தோல்வியால் பாதிக்கபட்டு சைக்கோ ஆனவர்கள் என்பது மட்டும் நிச்சயம் தெரியவரும்
what is the law of special marriage act in employment priority for inter caste marriage