கல்பனா இந்தியாவின் கண்ணீர் கனா …

Image may contain: 1 person, smiling, textஇந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, சோவியத் யூனியனின் விண்வெளிகலத்தில் பயணித்து விண்வெளியில் சுற்றிய முதல் இந்தியர் அவர்தான்

இந்திய பெண்களில் அந்த இடத்தை பெறபோவது யார் என்ற எதிர்பார்ப்பு வெகுநாள் இருந்தது, அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றி விண்வெளி புகுந்தவர்தான் கல்பனா சாவ்லா

பஞ்சாபிய பெண் அவர். படிப்பில் சுட்டி அதனைவிட பஞ்சாபியருக்குரிய தைரியமும் மிகுந்திருந்தது அதோடு விமான கனவும் கலந்திருந்தது

20 வயதிலே அமெரிக்கா சென்று படித்தார், 26 வயதில் பிஎச்டிமுடித்தார் அப்பொழுதே நாசாவிலும் சேர்ந்தார். விண்வெளி அவருக்கு வசமாகிகொண்டே வந்தது

விண்வெளி கலனில் செல்ல முதல் தகுதி அந்த வீரர்களுக்கு விமான நுட்பமும் விண்வெளியின் தன்மையும் மிக நன்றாக தெரிந்திருக்க வேண்டும், தமிழக முதல்வர் பதவிக்கு யாரெல்லாம் வருவது போல எல்லோரும் விண்வெளிக்கு சென்றுவிட முடியாது

ராகேஷ் சர்மா ஒரு விமான பைலட், அதுவும் போர் விமான பைலட் எனும் தகுதியிலே அவர் தேர்வு செய்யபட்டார்

கல்பனாவும் அந்த பயிற்சிகள் எல்லாம் பெற்றே தேர்வானார், கிட்டதட்ட மரணத்திற்கு தாங்கள் தயார் எனும் அளவிற்கு ஒப்புதலோடு பெறப்படும் பயிற்சிகள் அவை, பெரும் விஞ்ஞான அறிவும் தைரியமும் இன்றி அது சாத்தியமில்லை

கல்பனா அதில் வென்றார், 1997ல் முதன் முறையாக தன் 35ம் வயதிலே விண்வெளி சென்றார், அமெரிக்காவின் கொலம்பியா ஓடம் அவரை சுமந்து சென்றது

அங்கு இருந்து தமிழக வைகோ போல திசைமாறி சென்ற ஒரு செயற்கைகோளை கட்டுக்குள் கொண்டுவந்தார், மிக பெரும் சாதனை அது, அன்றே அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது

12 நாட்கள் தங்கி இருந்த பின் பூமி திரும்பினார், விண்வெளியி சென்ற முதல் இந்தியபெண் என்ற பெருமையுடன் இந்தியாவும் உலகோடு சேர்ந்து அவரை வரவேற்றது

விண்வெளி பயணம் என்பது சும்மா சுற்றி பார்க்க அல்ல, அங்கு ஏராளமான ஆராய்ச்சிகள் செய்யபடும். உயிர் வளருமா? பயிர் வளருமா? இது போன்ற ஏராளமான ஆராய்ச்சிகள். தமிழகம் போல ஆண்டாள் யார்? ஜெயேந்திரர் தூங்கினாரா? அவமதித்தாரா? ஜீயரின் சோடா பாட்டில் செல்லும் தூரமென்ன போன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் அங்கு இல்லை

அப்படி அடுத்தகட்டமாக நடைபெற இருந்த 80 ஆராய்ச்சிகளுக்குத்தான் கல்பனா குழுவினருடன் அனுப்பபட்டார்,

ஜனவரி 16 2003ல் அவர் சென்றார், 80 ஆராய்ச்சிகளை முடித்தார். அப்பொழுதே அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் பற்றி சர்ச்சைகள் வந்தன‌

இதே பெப்ரவரி 1ல் 2003ல் திரும்பினார். ஓடம் பூமியினை நெருங்கும் வரை நன்றாகத்தான் இருந்தது. திடீரென காற்றின் உராய்வினை தடுக்கும் ஓடுகளில் ஒன்று கழன்றுவிழ வெப்பநிலை உயர கலம் வெடித்தது

அந்த பெரும் கொடும் விபத்தில் அந்த வீர இந்தியபெண் பலியானார், உலகமே கலங்கிற்று இந்தியா ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியது

நீ படித்து முன்னேறியதெல்லாம் சாவை நோக்கியா? என்ற ஓலத்துடன் உலகம் அவருக்கு அஞ்சலி செலுத்திற்று, பாரதமும் மாபெரும் அஞ்சலியினை செலுத்தியது

அவர் பெயரில் விருதுகள் எல்லாம் அறிவிக்கபட்டன, அது இன்றுவரை தொடர்கின்றது

கல்பனா சாவ்லா இந்திய மகளிரின் விண்வெளி கனவினை தொடங்கி வைத்தவர், இன்று பல இந்திய பெண்கள் விண்வெளி செல்ல தயாராகி வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு முதல் வழிகாட்டி அவரே

அந்த வீரமங்கைக்கு இன்று நினைவுநாள். இந்திய பெண்களின் அறிவினையும் தைரியத்தையும் உலகிற்கு சொன்ன அந்த விண்வெளி மங்கைக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

கல்பனா சாவ்லாவின் புகழ் ஒருபோதும் மறையாது, அது பூமியினை தாண்டி விண்வெளியிலும் நிலைத்திருக்கும்.

கல்பனா இந்தியாவின் கண்ணீர் கனா