கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்
அற்புதமான மானிட , மனித நேய சிந்தனைகளை கொடுத்த அந்த சிந்தனையாளன் காலமானார்.
புதுகவிதைக்கு இலக்கணம் செதுக்கிய அந்த உளி உடைந்தே விட்டது,
பல கவிஞர்களுக்கு ஒளி கொடுத்த அந்த விளக்கு அணைந்தே விட்டது
கலைஞரின் கவிவாழ்வில் அவருடன் வந்த ஒரு ஆஸ்தான கவிஞன், கலைஞரை பாதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டான்
ஆனால் தமிழகத்தின் சிறந்த புதுக்கவிதை கவிஞர்கள் வரிசையில் எந்நாளும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்