காற்று வெளியிடை…..

எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள் ஆனால் கலைஞரின் எழுத்துக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும், எல்லோரும் மட்டையினை தூக்கிகொண்டு வருவார்கள், ஆனால் சச்சின் வந்தால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்

படங்களில் மணிரத்னம் படம் அந்த வகை

அவரின் காற்றுவெளியிடை படத்தினை பார்க்க சென்றாகிவிட்டது, மனிதர் என்ன நினைத்தாரோ தெரியாது, மவுனராகம், ரோஜா, கொஞ்சம் ஓகே கண்மணி என கலந்து கொடுக்க முயற்சிக்கின்றார், ரோஜாவும், ஓகே கண்மணியும் கலந்தால் இந்த படம் முக்கால்வாசி தயார்

17799194_10208865323845502_9094078622467380568_nபடம் ராணுவ வீரனை பற்றியது, ஒரு ராணுவ வீரனுக்கு கொடுக்கபடும் பயிற்சி அப்படியானது, அதில் ரசனையோ, இரக்கமோ, அடுத்தவர் மனதினை புரிந்துகொள்ளும் தன்மையோ இருக்காது, ஒரு வேட்டை நாயின் மனநிலை அது, கொல்வதை தவிர வேறு பொறுப்பு இருக்காது, கெத்தான மனநிலை அது. வெற்றி ஒன்றே அவன் இலக்கு

அப்படி இருந்தால்தான அவன் ராணுவ வீரனாக இருக்கமுடியும்? காதலும், பொறுப்பும் , குடும்ப பாசமும், குழந்தை நேசமும் துளிர்விட்டு வளருவதுதான் கதை

படத்தின் முதல் சறுக்கல் கார்த்தி, இந்த படம் ஒருவித கெத்தான அதே நேரம் கம்பீரமான ராணுவ தோற்றம் கொண்ட ஒரு ஹீரோவிற்கான படம். சூர்யா நிச்சயம் ஜொலித்திருப்பார், கதை நிச்சயம் சூர்யாவிற்கு பொருந்த கூடியது.

காஷ்மோரா படத்தில் முழித்தது போலவே, கோழிதிருடியவன் போல முழிக்கும் கார்த்தி அந்த கம்பீர வேடத்திற்கு பொருந்தவே இல்லை..

ரோஜாவில் மிக இறுக்கமான ராணுவ அதிகாரியாக நாசரை நிறுத்திய மணிரத்னம் இதில் எப்படி சறுக்கினாரோ தெரியவில்லை..

அடுத்து ஹீரோயின், பெயர் ஏதோ அதிதியாம், அகதியாய் அலையும் ஸ்ருதிஹாசன் போல இருக்கின்றார், இந்த படத்திற்கு ஸ்ருதிஹாசன் கூட‌ அட்டகாசமாக பொருந்தியிருப்பார்

அந்த கொழுந்தியாரை ஏன் மணிரத்தினம் தன் படத்தில் அனுமதிக்கவில்லை என்பது தெரியவில்லை, சுஹாசினி பயமாக இருக்கலாம்

ஒருவேளை சுஹாசினியினை பழிவாங்கத்தான் இப்படி ஒரு ஹீரோயினை தேடி கண்டுபிடித்தாரோ என்னமோ?, ஹீரோயின் அப்படி இருந்துவிட்டால், ஹீரோயின் தோழி அதனை விட சுமாராகத்தானே இருந்தாக வேண்டும்

அதனால் அதனை விட சுமாரான ஒரு பெண்ணை கொண்டு நிறுத்தியிருக்கின்றார், அந்த பெண் சம்பளம் கொடுத்து நடித்திருக்கலாம்..

கிளைமேக்ஸ் குழந்தையினை நிறுத்தி காட்சியினை மனதில் நிறைப்பது மணிரத்னம் ஸ்டைல், இந்த படத்தில் அப்படி காட்சி கிளைமேக்ஸில் வருகின்றது

ஆனால் அந்த அமுல்பொம்மை முகத்தை திருப்பிகொள்கின்றது, ஒரு வார்த்தையும் அது உருப்படியாக பேசவே இல்லை

பெரும் கைதட்டலை பெறவேண்டிய அந்த காட்சி, மொத்த கதையினையும் மொத்தமாக இறக்க வேண்டிய அந்த காட்சி, பலூன் வெடிப்பது போல சட்டென்று முடிந்துவிடுகின்றது.

ஒரு பெரும் சுயநலவாதிக்கு, ஆதிக்க மனப்பான்மையுள்ள யாரையும் பற்றி கவலையில்லாத ஒருவன், எத்தனை பெண்களை கொஞ்சமும் வருத்தமே இல்லால் ஏமாற்றிய ஒருவன், தன் பிள்ளையின் முகத்தை பார்த்தவுடன் திருந்துகின்றான்

எந்த கொடூரனும் தன் பிள்ளை முகம்பார்த்து திருந்துவான் என்பதுதான் கதையின் கரு, நல்ல கதைதான்..

ஆனால் அதனை எப்படியோ சொல்லவந்து, ஒரு மாதிரி முடித்துவிட்டார்

மணிரத்னம் படத்தில் வழக்கமாக வரும் அந்த “டச்” ஒரு காட்சியில் கூட காணபடவில்லை என்பதுதான் சோகம்..

“நீங்கள் எங்களுக்கு வேணும் மணிரத்னம்.ஆனால் பழைய மணிரத்னமாக வேண்டும்” என சொல்லத்தான் தோன்றுகின்றது