காலா படத்தை உன்னிப்பாக பார்த்துவிட்டு நல்ல விமர்சர்கள் சொல்வது இதுதான்

காலா படத்தை உன்னிப்பாக பார்த்துவிட்டு நல்ல விமர்சர்கள் சொல்வது இதுதான்

அதாவது மாமனாருக்கும் அவர் மருமகன் தனுஷுக்கும் நெருடல் இருந்திருக்கலாம், ரஜினியினை பழிவாங்க துடித்த தனுஷ் ரஞ்சித் மூலம் அதை நிறைவேற்றி இருக்கின்றார்.

ஏற்கனவே விஐபி படத்தில் வில்லனுக்கு ரஜினியின் இளைய மருகமகன் பெயரை வைத்து குடும்பத்தில் புயல் வீச வைத்தவர் தனுஷ் என்பது கூடுதல் செய்தி

இப்பொழுதும் ரஜினியினை ரஞ்சித்தை வைத்து , பாரிசாலனை வேலூரில் சிலர் தாக்கியதை போல் ஊமைகுத்தாக குத்தியிருக்கின்றார் என்கின்றார்கள்

சம்பளம் கொடுப்பவர் தனுஷ் என்பதால் ரஞ்சித்தும் வாங்கிய சம்பளத்திற்கு வகையாக குத்தியிருக்கின்றார்.

“நாயகன்” வேலுநாயக்கர், “பாஷா” ரஜினி என டான் கதைகளில் இருக்கும் நாயகனுக்குள்ள மரியாதை காலாவில் கொஞ்சமும் இல்லையாம்

போற வாரவன் எல்லாம் காலாவினை காதை பிடித்து இழுக்கின்றானாம்.

இந்த ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா எனும் பெரும் ரவுடியினை காமெடியனாக்கி அலைய வைத்தது போல ரஜினியினையும் ஆக்கி இருகின்றார்களாம்

போதாகுறைக்கு ரஜினியே எதிர்பாரா வண்ணம் அவரை பாஜகவிடம் வசமாக கட்டி கொடுத்து இருக்கின்றார்களாம்

நெடுநாள் கோபத்தை தனுஷ் ரஞ்சித் மூலமாக தீர்த்துகொண்டார் என்பதே கோடம்பாக்கத்தின் நிஜ விமர்சனம்


வார இறுதி என்பதால் கோலாலம்பூரின் திரையங்கு பக்கம் தமிழ்பட விரும்பிகளை காணமுடிகின்றது

படம் பார்த்த ரஜினியின் அதி தீவிர ரசிகர்களிடம் கேட்டால் அது “காலா இல்ல லா கீலா” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்

காலாவாது கீலாவாவது என சொல்லிவிட்டு நகர்வதல்ல விஷயம்

கீலா என்றால் மலாய் மொழியில் பைத்தியம் என பொருள்படும்

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை

ஆனால் தமிழகத்தை நினைத்தால்தான் வித்தியாசமாய் இருக்கின்றது

உழைப்பாளி படத்தின் சமயத்தில் ரோஜா ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவரை சூழ்ந்து அடிக்க பாய்ந்தனர் ரஜினிபடை

அருணாசலம் படத்தில் ரஜினியினை எதிர்த்து வசனம் பேசினார் என்பதற்காக வடிவுக்கரசி மேல் செருப்பு வீசபட்டது

ரஜினிக்கு ஒரு சிறு அவமானம் என்றாலும் அக்கால ரஜினி ரசிகர்கள் அப்படி பாய்ந்தார்கள்

இப்பொழுது ரஞ்சித் ரஜினியினை கதற கதற அடித்திருந்தாலும் அவர்களிடம் இருந்து சத்தமில்லை

திமுகவின் தொண்டர்களிடம் போர்குணம் விடைபெற்றது போல ரஜினி ரசிகர்களிடமிருந்தும் அந்த பழைய வேகம் காணாமல் போயிவிட்டது

 

கமலஹாசன் ஏதோ சொன்னதற்காக ராமனை பழிப்பதா, கண்ணனை பழிப்பதா என பொங்கியவர்கள்..

கலைஞர் ராமனனை ஏதும் சொல்லிவிட்டால் உடனே நாக்கறுப்போம் என கிளம்புவர்கள்..

ராமயணத்தை படுபயங்கரமாக ரஜினி கலாய்த்திருக்கும் பொழுது மகா அமைதி

ஏன் என்றால் இதுதான் அரசியல்..

கலைருக்கும் கமலுக்கும் வைரமுத்துக்கும் ஒரு நீதி. ரஜினி எனும் ஆன்மீகவாதிக்கு தனி நீதி