கில்லாடி கிளைவ் 11
பிளாசியில் ஒரு கரையில் இருந்தான் கிளைவ், 1 கிமி தொலைவில் இருந்தது நவாப் சிராஜ் உத்தவ்லாவின் படை
எண்ணிக்கையில் பெரும் மடங்கு நவாபின் படை. நால்வகை படைகளும் கூடவே பீரங்கி படைகளும், துணைக்கு பிரெஞ்சிக்காரரின் துப்பாக்கி படையும் இருந்தது
அக்கால பிரஞ்காரர்கள் இன்று பழனிசாமி அரசுக்கு பாஜக முட்டு கொடுப்பது போல கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரானவர்களுக்கு துணைக்கு வந்து கொண்டே இருந்தனர்
பிளாசி மாமமரத்தின் அடியில் தனியே அமர்ந்தான் கிளைவ், அவன் உள்ளம் பெரும் வருத்தத்திலும் குழப்பத்திலும் இருந்தது.
ஆம் மீர்ஜாபர் படையுடன் தன்னோடு வரவேண்டும் என்பதுதான் அவனின் திட்டம், ஆனால் ஜாபரோ வருவதாக இல்லை
இதோ யுத்தம் தொடங்கபோகின்றது, இதுவரை வராத ஜாபரா இனி வரப்போகின்றான்? எப்படி எல்லாம் இந்தியாவில் துரோகிகள் இருக்கின்றார்கள்
ஓர்மிசென்ட், மீர்ஜாபர் என அவன் நினைவில் வந்துகொண்டே இருந்தார்கள், அவனோ யுத்தத்தில் வெல்ல வாய்ப்பில்லை என்றே கருதினான், தற்கொலை என்ணம் கூட வந்து போயிற்று
சாவதே சவாம் களத்தில் சாவோம் என என எண்ணி விடிந்ததும் யுத்த களம் சென்றான்
இந்திய வரலாற்றின் மிக மிக முக்கியமான யுத்தம் அது
ஆம், இந்தியாவின் மிக முக்கியமான அரசான முகலாய அரசில் பஞ்சாப் டெல்லி வங்கம் ஆகியவை மகா முக்கியமான பகுதிகள்
வங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவோர் அப்படியே முன்னேற வாய்ப்பு பிரகாசமாக இருந்தது, இது பிரெஞ்ச்காரருக்கும் தெரியும்
இந்தியாவினை யார் ஆளபோகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் அந்த யுத்தம் தொடங்கியது, பிளாசி போர்
அது ஜூன் 23, 1757
60 ஆயிரம் வீரர்கள் இருந்த நவாபின் படையினை நேருக்கு நேர் எதிர்கொண்டான் கிளைவ், அவர்களை முன்னேற விட்டால் தொலைத்துவிடுவார்கள் என்பது அவனுக்கு தெரியும்
ஆம் ஆள் அம்பு, கோடாரி, கத்தி என வந்தால் நொறுக்கிவிடுவார்கள்
இதனால் தன் பீரங்கிபடையினை முதலில் தாக்க உத்தரவிட்டான், அதற்கு தக்க பலன் இருந்தது
கிளைவின் பீரங்கிதாக்குதலில் நவாபின் படைகள் சமநிலை இழந்தன, முக்கியமாக நவாபின் பீரங்கி படைகள் சரியாக இயங்கவில்லை
நவாபின் படை பெரும் படைதான், ஆனால் யுத்த தயாரிப்பு இல்லாமல் இருந்தது , இதை பயன்படுத்தினான் கிளைவ்
நிச்சயம் கொஞ்சம் தாக்குபிடித்திருந்தால் நவாப் கிளைவ் படைகளை நொறுக்கி இருக்கலாம், ஆனால் பின் வாங்க உத்தரவிட்டதுதான் பெரும் தவறாயிற்று
கிளைவின் பீரங்கிக்கு பதில் சொல்லமுடியாமல் நவாப் படைகள் பின் வாங்க, முன்னேறினான் கிளைவ்
இந்த மீர்ஜாபர் என்பவர் என்ன செய்தார் என்றால், மிக மிக சாமார்த்தியமான விஷயத்தை செய்தான்
என்ன செய்தான்?
கிளைவ் சொன்னபடி அவனோடு ஓடியிருந்தால் நவாப் விட்டிருக்கமாட்டான், ஒருவேளை கிளைவ் பக்கம் தோற்றுவிட்டால் தன் கதி அதோ கதி
அதே நேரம் கிளைவினையும் பகைக்க முடியாது, இருவருக்கும் பொதுவான காரியத்தை செய்ய வேண்டும்
உண்மையில் மிகபெரும் தந்திரமான காரியத்தை செய்தான் மீர்ஜாபர்
நவாபோடு யுத்தம் செய்ய சென்றவன், யுத்தம் நடக்கும்பொழுது தன் படையினை கலைத்துவிட்டு ஓடிவிட்டான்
மீர்ஜாபர் ஓடியபின் கிளைவிற்கு யுத்தம் எளிதாயிற்று, அசால்ட்டாக அடித்தான்
ஆனாலும் அவன் அடிமனதில் ஆச்சரியம் இருந்தது, எப்படிபட்ட மனிதர் இந்த மீர்ஜாபர், காலத்தை கணித்தே முடிவு எடுக்கும் மாபெரும் தந்திரசாலி இவரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்
நவாப் படைகள் தோற்று ஓடின, அவர்களுக்கு 500 பேர் செத்தனர், கிளைவ் படைக்கு இழப்பு வெறும் 40 பேர்
கிளைவ் பிடித்த நிலபரப்பு கிரேட் பிரிட்டனை விட பெரியது, அது இங்கிலாந்தில் பெரும் சாதனையானது
பின்னாளில் சூரியன் அஸ்தமிக்கா பெரும் சாம்ராஜ்யமான பிரிட்டன் இப்படித்தான் தொடங்கியது, தொடங்கியவன் கிளைவ்
யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி வங்கத்தை கைபற்றி அலறவிட்டிருந்தான் கிளைவ், மீர் ஜாபர் அவனை பாராட்டி கடிதம் எழுதினான்
(அதற்கு முன்பு மிர் ஜாபர் என்ன செய்தான் என்றால் அவன் நவாப் சிராஜ் உத்தவிலாவிடமே சென்றான், பெரும் படை திரட்டி ஆங்கிலேயரை வெல்வோம் என்றான், நவாபும் சரி என்றார்
ஆனான் நபாபே நீர் இங்கு இருக்க முடியாது, அயோத்தி சுல்தானிடமோ இல்லை பாட்னாவிற்கோ சென்றுவிடுங்கள் என சொல்லி அவரை அனுப்பி வைத்தான்
சிராஜ் உட்டவ்ளா பாட்னாவிற்கு தப்பினான், பெரும் படை திரட்டி கிளைவினை வெல்லும் வெறி இருந்தது)
கிளைவும் அவனை தன்னை வந்து சந்திக்குமாறு கட்டளையிட்டான், ஓடிவந்து நின்றான் மீர்ஜாபர்
தன் கோபம் எதையும் வெளிகாட்டிகொள்ளாமல் தகுந்த நேரத்தில் நீர் ஓடியதாலே வெற்றி சாத்தியமாயிற்று, இனி நீரே நவாப் என அறிவித்தான் கிளைவ்
மீர் ஜாபர் வங்கத்து நவாபானார், கிழக்கிந்திய கம்பெனிக்கு வருமானம் கொட்டியது
கிளைவின் கீர்த்தி பெருகியது, கிட்டதட்ட 30 வயதிற்குள் பிரிட்டனை விட பெரும் நாட்டை வளமான நாட்டை பிடித்து காட்டியிருந்தான் [ September 30, 2018 ]