குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 07

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 07

“நெடும்பகற் கற்ற வவையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி – கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே
நீதென்று நீப்பரி தால்”

இப்பாடல் இப்படி பிரிந்து பொருள்தரும்

நெடும் பகல் கற்றவை அவையத்து உதவாது
உடைந்துள்ளாருட்கு அருங் கல்வி கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே
நீது என்ற நீப்பு அரிதால்

ஒருவன் நீண்ட்நாள் (நெடும் பகல்) கற்ற கல்வி (கற்றவை) சபையில் உதவாது நிலையில் (அவையத்து உதவாது) உடைந்துள்ள நிலையானது (உடைந்துள்ளாருடு அருங் கல்வி) ஒரு பொல்லாத நாளில் (கடும் பகலில்) பகைவன் (ஏதிலான்) கையில் இருக்கும் வில்லை விட ஆபத்தானது. அப்பகைவனை கூட எதித்து நின்று தப்பிக்கலாம் ஆனால் கற்ற கல்வியினை விலக்குதல் அரிது (நீப்பு அறிதால்) என்பது பொருள்

வருடகணக்கில் கற்ற கல்வி உற்ற அவையில் பலன் கொடுக்காமல் போவது , கையில் வில்லுடன் வரும் எதிராளியிடம் சிக்கி கொள்வதற்கு சமம், எதிராளியாவது சமாளித்து வந்துவிடலாம் ஆனால் கற்ற கல்வியினை விட முடியாது

அதாவது ஆபத்துகாலத்தில் ஆயுதங்களை கூட மாற்றி தப்பிக்கலாம் கற்ற கல்வியினை மாற்றமுடியாது.

கற்கும் கல்வியினை மிக திறம்பட கற்க வேண்டும், ஆபத்து காலத்தில் உதவும்படி கற்க வேண்டும். ஆபத்து நேரம் கைகொடுக்கா கல்வியால் பலனில்லை, அவமானம் தேடிதரும் வகையில் அல்லாமல் கவுரவம் தேடிதரும் விதமாக கற்பதை தெளிவுற கற்க வேண்டும் என்பது பொருள்.