குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 08

“வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் றொடங்கல் – கருந்தனம்
கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்
கெய்த்துப் பொருள்செய் திடல்”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரியும்

“வருந்தி தான் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்து சில கற்பான் தொடங்கல் கரும் தனம்
கைத்தல உய்த்து சொரிந்திட்டு அரிப்பபு அரித்தாங்கு
எய்து பொருள் செய்து இடல்”

ஒருவன் மிக சிரமபட்டு கற்கும் கல்வியினை பின்பற்றாது அதாவது அந்த கல்விபடி நடக்காது, படித்ததை போற்றி பாதுகாக்காது புதிதாய் படிக்க போகின்றேன் என கிளம்புவது கையில் இருக்கும் செல்வத்தை தெருவில் இறைத்துவிட்டு பின் வருந்தி அந்த செல்வத்தை மணலில் தேடி, மணலை அரித்து அரித்து ஒவ்வொரு மணியாய் தேடுதல் போலாகும்

அதாவது கற்ற கல்வியினை உணர்ந்து அதன்படி நிற்க வேண்டும், கற்றதை சரிவர காக்காமல் பின்பற்றாமல் புதிது புதிதாக கற்க கிளம்புவன் தான் கற்க வந்த நோக்கத்தை மறந்து குழம்பி இருப்பதையும் தொலைத்துவிடுவான் என்பது பொருள்