குமர குருபரர் நீதிநெறி : 02
“அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையு நாட்டும் – உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை”
இப்பாடல் பின்வருமாறு பிரிந்து பொருள் தரும்
“அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும்
உறு கவலையொன்றும் உற்றுகழியும் கைகொடுக்கும்
கல்வியினூங்கு இல்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை”
கல்வி என்பது அறம், பொருள், இன்பம் எனும் பூலோக சிறப்புகளை மட்டுமல்ல வீடு என்னும் முக்தியினையும் தரும்
உலகில் இருந்து ஒதுங்கி நின்றாலும் நல்ல புகழைப் பெற்றுத் தரும், வாழ்வில் கவலை வந்து துன்பம் வரும் பொழுது கவலை கைகொடுத்து உதவும்
அப்படி எல்லா சூழலிலும் கைகொடுக்கும் கல்வியினை விட சிறந்த துணை, சிறிது காலமே பூமியில் வாழும் மானிடருக்கு (சிற்றுயிர்க்கு) இல்லை.
குமர குருபரர் வழங்கிய கல்வி பற்றிய சிறப்பு அற்புதம். கற்றவற்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு…மக்கள் உடலுக்கு உணவு எத்தகையதோ அத்தகைத்து மக்கள் அறிவிற்குக் கல்வி. மனிதன் அறியாமையைக் கல்வி அறிவை விளக்கி அவனது வாழ்வை நேர்மையில் செலுத்தவல்லது கல்வி – திரு. வி. கலியாணசுந்தரனார்[1]