“கொடிகாத்த குமரனை ” போற்றுவோம்
அது வெள்ளையன் சைமன் கமிஷன் எனும் கமிஷனை அமைத்திருந்த 1928ம் ஆண்டு காலம், வெள்ளையன் கமிஷன் என்பது இன்று தமிழக அரசு அமைக்கும் கமிஷனை போன்றதுதான்
அன்று இருந்த கொந்தளிப்பை அடக்க இம்மாதிரி கமிஷன்களை வெள்ளையன் அமைப்பான், அப்படி அன்று வந்தது சைமன் கமிஷன் , அதாவது அந்த கமிஷனின் தலைவர் பெயர் ஜாண் சைமன்
(நாம் தமிழரின் கமிஷன் சைமன் வேறு)
இதனை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்தது, ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் போன்றோர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்
லஜபதிராய் பெரும் தனவந்தர், இன்று பாகிஸ்தானில் இருக்கும் பெரும் மருத்துவமனை அவர் அமைத்து கொடுத்தது. நாடெங்கும் நற்பெயர் பெற்றிருந்தார், அவரை வெள்ளையன் அடித்ததில் பலத்த காயமுற்றார்.
அதில் இறந்தும் போனார், வருடம் 1928
அது நாடெங்கும் கிளர்ச்சியினை ஏற்படுத்தியது, போராட்டம் தொடர்ந்து நடந்தது பகத்சிங் கோபத்தோடு கிளம்ப அதுதான் காரணம்,.
அப்படி திருப்பூரிலும் 1932ல் போராட்டம் நடந்தது , அதில்தான் அந்த சென்னிமலை இளைஞன் 28 வயதேயான குமரனும் கலந்து கொண்டான்
நொய்யல் நதிக்கரையோரம் ஊர்வலம் சென்றபொழுது போலீஸ் கடும் தடியடியில் இறங்கியது. குமரனின் தலையிலும் பலத்த அடி விழுந்தது , ரத்தம் வழிய விழுந்தான். அது ஜனவரி 10ம் நாள்
அவன் மரணித்தான், ஆனால் அவன் கையில் தேடிய கொடியினை இறுக பிடித்திருந்தான்.
தேசம் முழுக்க அந்த செய்தி கண்ணீர் சிந்த வைத்தது, வெள்ளையரில் பலருக்கே கண்கள் கசிந்தன.
மகாத்மா காந்தி நேரில் திருப்பூர் வந்து ஆறுதல் சொன்னார், பின்பு அடிக்கடி அக்குடும்பத்திற்கு கடிதமும் எழுதினார்.
இத்தேசத்திற்காக உயிர்விட்ட தியாகியான அக்குமரனுக்கு இன்று நினைவுநாள்,85 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் அவன் இறந்தான்.
அவரை நினைவு கூறலாம்.
சென்னிமலை இப்படியான பல தியாகிகளை கொடுத்திருக்கின்றது தீரன் சின்னமலை அந்த ஊரை சேர்ந்தவர்தான்
அந்த குமரன் நினைவுநாளில் நாளில் அந்த “கொடிகாத்த குமரனை ” போற்றுவோம்
அவருக்கு இத்தேசத்தின் ஆழ்ந்த அஞ்சலிகள். அவர் இறுக பிடித்த கொடிபோல இந்நாட்டை காக்க இத்தேசமே சபதமேற்கின்றது
(அதே திருப்பூரில்தான் 570 கோடி அசால்ட்டாக சிக்குகின்றது, இன்னும் இந்திய கருப்புபணத்தின் குவியல் எல்லாம் மூட்டை மூட்டையாக சிக்குகின்றன,
எல்லா கட்சிக்கும் அங்கு பினாமிகள் இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
சுவிஸ் வங்கியினை விட அதிகமான கருப்புபண சுரங்கமாக திருப்பூர் மாறியிருக்குமோ என அஞ்ச தோன்றுகின்றது.
இபப்டி மாறபோகும் ஒரு நகரத்திற்கு எதற்கு சுதந்திரம் என்றுதான் வெள்ளையன் அவரை போட்டு அடித்து கொன்றானோ என்னமோ?..)