சாவித்திரி படத்தில் ஜெமினியை கொச்சைபடுத்தியதை ஏற்க முடியாது
நடிகையர் திலகம் படத்தில் ஜெமினிகணேசனை தவறாக சித்தரித்திருப்பதாக எதிர்ப்பு
இதைத்தான் நாம் அப்பொழுதே சொன்னோம், சாவித்திரி திசைமாறி சென்றது ஜெமினியால் அல்ல, சொந்தபடமே காரணம்
குடிபழக்கத்தை கூட ஜெமினி கற்றுகொடுக்கவில்லை, முதன் முதலாக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ கொடுத்த விருந்தில்தான் அதை குடித்ததாக சாவித்திரியே சொன்னார்
பின் அப்பழக்கம் ஒட்டிகொண்டது, குடி அப்படித்தான் தொடங்கிவிட்டால் கழுத்தில் ஏறி அமர்ந்துவிடும்
குடி இன்னும் சாத்தான் சில குட்டி சாத்தான்களையும் குட்கா போல அழைத்துவரும், சாவித்திரிக்கும் அது வந்தது
இதெல்லாம் அவரை சூழ்ந்திருந்த அந்த அடையாளம் தெரியா மாபியா கும்பலின் வேலை
ஜெமினி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் மறுக்க முடியாத உண்மை அவரின் பண விஷயம், எத்தனையோ பெண்களோடு சுற்றினாலும் ஒருவருக்கும் ஒரு பைசா செலவழித்தவர் அல்ல
ஜெமினியிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய உயர்ந்தபாடம் அதுதான், சந்தேகமில்லை
இன்றும் ஜெமினி காலத்து நடிகர்கள் சொத்துகணக்கை பார்த்தால் சிவாஜிகணேசன் கூட நெருங்க முடியாது
சாவித்திரியின் பண விரயத்தை அவர் கண்டிக்க தொடங்கி எழுந்த மோதலே விரிசலாகி சாவித்திர் வாழ்க்கை வீணாணது
மற்றபடி ஜெமினி எப்படி வாழ்வை பைசா செலவழிக்காமல் ரசிக்க வேண்டுமோ அப்படி ரசித்து வாழ்ந்தார்
“பெண்ணுக்கு பத்து பைசாவும் செலவழிக்காதே, அவர்களுக்கு செலவழித்தால் ஆண்டியாவாய் , செலவழிக்காமல் பெண்களோடு சுற்றுவது தனி சமார்த்தியம் முடிந்தால் செய் இல்லை என்றால் சும்மா இரு” என்ற அரிய தத்துவத்தை சொல்லி சென்ற ஜெமினியினை மறக்க முடியாது
ஆண்களுக்கு எக்காலமும் தேவைபடும் தத்துவம் அது, பிறவி கடலை கடந்து உய்ய பெரும் படகு அந்த தத்துவம்
சாவித்திரி படத்தில் அவரை கொச்சைபடுத்தியதை ஏற்க முடியாது