சீனிவாச ராமானுஜம்
“இந்தியர்களுக்கு நாம் கடமைபட்டிருக்கின்றோம், அவர்கள் எண்களை தராவிட்டால் இன்றைய விஞ்ஞானமில்லை. இந்திய எண்களே கணக்கு உலகுக்கு அடிப்படையாயின” என்றவர் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
அப்படிபட்ட பழமையான அறிவாந்த விஷயம் இந்திய இந்துக்களிடம் இருந்தது, அந்த கணக்கீட்டில்தான் கல்லணை முதல் அழியா சிற்பம் வரை செதுக்கினார்கள்
வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இந்திய இந்துக்களின் கணித அறிவு அன்றே சிறந்திருந்தது
கணிதத்தில் வானியல் முதல் பல கணக்குகளை அழகாக செய்தார்கள், பொருளாதாரத்தில் நுண்ணிய வரியினை விதித்தார்கள், நுணுக்கமான கலைநயங்களை செய்தார்கள், இந்தியரின் கணக்கியலும் அது கொடுத்த முத்திரையும் வலுவானவை
ஆரியபட்டர் முதல் காரிநாயனார் வரை எத்தனையோ கணிதமேதைகள் வாழ்ந்த மண் இது
அப்படிபட்ட பாரம்பரியத்தில் வந்தவர்தான் சீனிவாச ராமானுஜம் எனும் மாமேதை
கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், அது தெய்வத்தின் வரம்
அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள்.
ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் தமிழக பாஜக நிலை, குறிப்பாக ஆங்கிலத்தில் “டெப்பாசிட்” காலி. ஆனால் கணிதத்தில் அபார திறமை. பாவம் கண்டுகொள்ள யாருமில்லை,” பிழைப்பிற்கு வேண்டியதை படி, வேண்டாததை விடு” எனும் தமிழக கொள்கை அவருக்கும் போதிக்கபட்டது,
ஆனால் அவர் 10 வயதில் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதித்தார்.
“கொடிது கொடிது இளமையில் வறுமை” என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு ராமானுஜம், ஆனால் அவர் போராடினார், தத்தி போராடி, கும்பகோனம் மற்றும் பச்சையப்பா வரை கல்லூரியில் படித்தாலும், அவரின் கணித அறிவு மெச்சபட்டதே தவிர அவரின் நிலை மகாமோசம். பட்டம் கூட கிடைக்கவில்லை
எண்களோடு வாழுவார், கனவில் அவரின் குல தெய்வத்தோடு கணக்கில்தான் விவாதிப்பார், நோட்டு வாங்க பணமில்லை, ஒரே பக்கத்தில் முதலில் ஊதா மையிலும், அடுத்த பக்கம் எழுத வேண்டியதை இடைஇடையே சிகப்பு மையிலும் எழுதும் அளவிற்கு வறுமை.
யூதர்களை தவிர எல்லோருக்கும் லட்சுமியும்,சரஸ்வதியும் ஜென்ம எதிரிகள், அதிலும் ராமானுஜம் வாழ்வில் சரஸ்வதி மார்கழி கச்சேரியே நடத்திகொண்டிருந்தார், லட்சுமியோ பிய்ந்து போன செருப்பினை கூட விட்டு செல்லவில்லை.
எண்களின் விளையாட்டில் வெற்றிபெற்ற ராமானுஜம், வறுமையுடன் தோல்வி அடைந்தார், விளைவு சென்னை துறைமுகத்தில் எழுத்தர்பணி, ஆனாலும் கணித ஆராய்ச்சி தொடர்ந்தது,
திறமை சூரிய ஓளியினை போல அடக்கமுடியாதது, ஒரு அய்யரின் சிபாரிசில் ஒரு வெள்ளையர் அவரை அடையாளம் காண்கிறார், தான் கண்டது ஒரு கணித வைடூரியம் என்பது புரிகிறது, என்ன உதவி வேண்டும் என்கிறான் அந்த ஆங்கில கணித ஆசிரியர்.
மனம் கலங்காதீர்கள், இளகிய மனமுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்கவேண்டாம், ராமானுஜம் சொன்னது இதுதான்
“எனது மூளை சோர்வடைகிறது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும், அதுதான் எனக்கு பெரும் சவால், வயிற்றிற்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்யலாம்”, கண்கலங்கினான் அந்த அதிகாரி, அவன் என்ன? கல்வியின் அருமை தெரிந்த அனைவரும் கலங்கத்தான் செய்வார்கள்.
(பிராமணர்கள் சுரண்டுவார்கள், பிராமணர்கள் உறிஞ்சி துப்புவார்கள் , பிராமணரெல்லாம் பணக்காரர்கள் என்பதெல்லாம் அரசியலுக்கு கிளறிவிடபட்ட வாதங்கள், உண்மையில் பிராமணரிலும் மகா ஏழைகள் இருந்தார்கள் அவரில் ஒருவர் ராமானுஜம்)
சொந்த நாடு செய்யா உதவியினை (அன்று இந்தியாவுக்கு அரசே இல்லை என்பது இன்னொரு விஷயம்) அந்நியன் வெள்ளையன் செய்தான், ராமானுஜத்தின் முடிக்காத கல்வி தகுதியும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ75 சம்பளம் கொடுத்தார்.
காவரி கரையின் கணிதநட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியது.
நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரியஸ், (infinite serious), இன்னும் ஏராளமாக என நீங்கள் கற்ற அல்லது அன்று ஐன்ஸ்டீனாகவும், ராமானுஜனமாகவும் காட்சியளித்த ஆசிரியர்கள் எல்லாம் காதை திருகி கற்பித்த அந்த அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது.
சில கட்டுரைகளை லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயது கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அது உண்மை என கண்டபின் சொன்னார்கள், இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன், தூக்கி சென்றார்கள், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள்.
படிக்க லாயக்கில்லாதவன்,பைத்தியக்காரன்,பிழைக்க தெரியாத பித்தன் என கும்ப்கோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்ட்டு தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கொளரவம் “Fellow of the royal Society”
உலகில் அந்த அங்கீகாரத்தினை பெற்ற முதல் தமிழன்,முதல் இந்தியன். சொந்த மக்களுக்கு உதாவாக்கரை, முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அறிவுகடல்.
அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான் ஆனால் உலகின் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்,என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ), ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.
அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 உலகிற்கு அவர் புதிதாய் சொன்னது, இன்னும் பல தேற்றங்களுக்கு கேள்விகளை விட்டு சென்றிருக்கிறார், இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என கணித உலகம் காத்திருக்கின்றது.
5 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைகழகம் அவருக்கு பேராசியரகாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தது, மனைவியை காண ஓடோடி வந்த ராமானுஜத்திடம் வறுமை ஒழிந்தது,ஆனால் அது முன்பு விட்டு சென்ற நோய் வளர்ந்து ராமானுஜம் உயிர்கேட்டது.
அன்றைய தமிழ் பிராமண சமூகம் கடல்கடந்து மிலேச்ச நாட்டுக்கு சென்றுவந்தவனை ஏற்காது, அது அன்று மூடநம்பிக்கை என்றாலும் கொரோனா காலம் அதற்கான விடையினை கொடுத்தது
கடல்தாண்டி நோயினை இழுத்துவர கூடாது எனும் ஒரு மருத்துவம் அன்று மூடநம்பிக்கையாய் இருந்தது.
ராமானுஜம் நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகிற்கு கொடுத்தது, புகழ்பெற்ற “மாக் தீட்டா பங்க்சன்ஸ்”,
32 வயதில் அவர் இறந்தபின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின, முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகரகாக சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் ஒத்துகொண்ட உண்மை, ஐன்ஸ்டீனும் இறுதிகாலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார்.
புகழுக்குரியவர்களை வாழும் பொழுது ஓடவிரட்டி, தெருப்புழுதிக்கும், சொறிநாய்க்கும் இணையாக வறுமையாலும்,அவமானத்தாலும் வதைத்து, அவன் இறந்த பின் லட்சகணக்கில் செலவு செய்து சிலை வைத்து கொண்டாடும் அறிவார்ந்த சமூகம் இது.
அவன் ஓடி ஓடி கணிதம் போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவன் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்ல கூட யாருக்கும் தெரியவில்லை, அங்கு அவனுக்கோர் அடையாளமில்லை
ஆனால் அவனின் கையெழுத்து நோட்டு புத்தகம் லண்டன் கணித கழகத்திற்கு இன்றும் வேத நூல்
பிராமணர் என்பதால் தமிழகத்தில் புகழ் மறைக்கபட்ட பெரும் அநீதிக்கு ராமானுஜமும் தப்பவில்லை.
அண்ணாவிற்கும், ராம்சாமிக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் காணப்படும்?, கிடையாது.
உண்மையில் சென்னை பல்கலைகழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணா பெயர் சூட்டபட்டது, அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்?
இதுதான் தமிழக யதார்த்தம், சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் அப்படியே அமுக்கிவிடுவார்கள்
அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள்
இன்று அந்த மாமேதையின் பிறந்த நாள்
இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாக செயல்பட்டுகொண்டிருக்கின்றது
இந்த நவீன உலகினை உருவாக்கிய விஞ்ஞானிகள் வரிசையில் ராமானுஜத்திற்கும் நிச்சயம் பங்கு உண்டு. அதில் அவர் உழைப்பும் அடங்கி இருக்கின்றது
கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்த அந்த அறிவாளி தமிழனின் பிறந்த நாளில் அவனுக்கு பெரும் அஞ்சலிகள்.
அவன் ஒரு அதிசயம் ஏதோ ஒரு காளிபக்தனின் மறுபிறவி அவன், அவனை விரைவாக எடுத்துகொண்ட நாமகிரிதாயார் பின்னொரு நாளில் அவன் இத்தேசத்துக்கு பெரும் பங்காற்ற மறுபடியும் அனுப்பி வைப்பாள் என எதிர்பார்க்கின்றது பாரதம்
தமிழகத்தில் இம்மாதிரி பெரும் விஞ்ஞானிகளின் சிலையினையோ அவர்கள் அடையாளத்தையோ எங்கும் காணமுடியாது, அதை செய்வதாக இருந்தால் இப்போதைய பாஜகவோ தமிழக கவர்னரோதான் செய்ய வேண்டும், செய்வார்கள் என எதிர்பார்ப்போம்
புதிய தளத்தினை உருவாக்கி வெற்றிநடை போட வாழ்த்துக்கள்…
அருமையான படைப்பு. முதல் post ஏ ஓரு புத்திசாலி ராமானுஜர் அவர்கள் post… இதில் நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். கவலை வேண்டாம். நல்ல நாளில் ஆரம்பித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு
Superb
I am very as a Hindu Bharath matha ki jai…வாழ்க பாரதம்
இன்று அவரது நினைவு நாள்..
Exclusive post on Ramanujan master of Mathematics !!